Sunday 20 December 2009

இரண்டு ஏரிகளும், ஒரு பனிமலையும்

தலைப்பை பார்த்ததும் ஏதோ கவிதை என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். கடந்த நன்றி தெரிவிக்கும் விடுமுறையில் நாங்கள் சுற்றி பார்த்த இரண்டு ஏரி, ஒரு கடற்கரை, ஒரு பனி மலை பற்றியே இந்தப்பதிவு. சனியன்று காலை வழக்கம்போல ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பினோம். இந்த முறையும் ரகுவின் வழிகாட்டலில், Ganny (கணேஷ்) வண்டியை செலுத்த நாங்கள் பின்னாடி அமர்ந்து மொக்கை போட்டுகொண்டு சென்றோம். எங்கள் பயணம் சிறு தடங்களில் ஆரம்பித்தது, வீடிற்கு அருகில் இருக்கும் சாலையில் Take Right என்று GPS அக்கா சொன்னதை கேக்காமல் இடது பக்கம் திரும்பி கொஞ்சம் சுத்திவிட்டு பிரதான சாலையை (Freeway) பிடித்தோம்.

நாங்கள் திட்டமிட்டிருந்த இடங்கள் அனைத்தும் ஒலிம்பிக் நேஷனல் பாரஸ்ட்டை சுற்றிய அமைந்திருந்தன, எங்கள் பயணமும் . சுமார் 3 மணிநேர பயணத்துக்கு பிறகு நாங்கள் Quinault ஏரியை அடைந்தோம். அழகான ஏரி, ஏரிக்கு முன் கொஞ்சம் பசுமையான புல்வெளி இருந்தது. ஏரியை ரசித்து விட்டு, சில பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த ஏரிக்கு அருகில்1000 வருடம் பழமையான, உலகின் மிகப்பெரிய Spruce மரம் உள்ளது. இங்கு வருபவர்கள் தங்குவதற்கு விடுதிகளும், உணவகங்களும் உள்ளன. காதல் ஜோடிகள் நேரம் கழிக்க சிறந்த இடம்.

Quinault ஏரி


அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் kalaloch கடற்கரை, பசிஃபிக் பெருங்கடலின் ஒரு கடற்கரை. நாங்கள் சென்ற நேரம் மழை பெய்துகொண்டிருந்தது, நனைந்தபடியே கரையில் திரிந்தோம். நிறைய கற்பாறைகள் நிறைந்த கடற்கரை, சின்ன பாறைகள் மீது ஏறி கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம், அலைகள் பெரிதாக வந்துகொண்டிருந்தது. கரையில் நிறைய மரங்கள் கிடந்தன எதற்கு என்று தெரியவில்லை. கடற்கரைக்கு சென்றதும் முதலில் செய்த காரியும், கடற்கரை மணலில் பெயர் எழுதியது, சில நிழற் படம் எடுத்தது. இது சுனாமி வர வாய்ப்புள்ள இடமாம். அங்கேயே மழையில் நனைந்தபடி எடுத்து வந்திருந்த மதிய உணவை முடித்து கொண்டோம். நான்கு மணியளவில் இருட்ட தொடங்கியதால் தங்க ஏற்பாடாயிருந்த விடுதிக்கு சென்றோம். Forks என்னும் இடத்தில் இருந்த அழகான, வசதியான விடுதியில் தங்கினோம். இரவு அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டோம்.

Kalaloch கடற்கரை


அடுத்தநாள் நாங்கள் சென்ற முதல் இடம், crescent ஏரி. இந்த ஏரியின் இரு பக்கமும் மலைகள் இருந்தன. மலையை ஒட்டி இருந்ததால் ஒரு தனி அழகுடன் இருந்தது. இந்த ஏரியில் கோடை காலத்தில் படகு பயணம் செய்வார்கள், குளிர் காலம் என்பதால் யாரும் தட்டுபடவில்லை. மலையோரத்தில் சில வீடுகள் இருந்தன, கோடை காலத்தில் தங்குவதற்காக இருக்கலாம்.

Crescent ஏரி


கடைசியாக நாங்கள் சென்ற இடம், பெரும்பான்மையோர் எதிர்பார்த்து கொண்டிருந்த Huricane Ridge என்னும் பனி மூடிய மலை. 5200 அடி உயரம். மலைக்கு மேலே செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. முன்தினம் பனி அதிகம் பொலிந்திருந்ததால், வழியெங்கும் பனி கொட்டிக்கிடந்தது, போக்குவரத்து சவுகரியத்துக்கு, சாலையில் இருக்கும் பனியை ஒதுக்கும் வண்டிகள் நிறுத்தப்படிருந்தன. வழியில் சில View pointகள் இருகின்றன. ஒரு குறிப்பிட்ட view pointல் இருந்து தெளிவான வானம் இருக்கும் போது பார்த்தால் கனடா தெரியுமாம். நாங்கள் சென்ற போது ஓரளவு தெளிவான வானம் தான் என்றாலும் கனடா தெரியவில்லை, கோடை காலத்தில் தெரியலாம். மலை உச்சியை அடைந்தவுடன் அனைவரும் பணியில் விளையாட ஆரம்பித்துவிட்டோம், ஒருவர் மீது ஒருவர் பனி எறிவதும், பணியில் டைவ் அடிப்பதும் என கைகள் எரியும் வரை விளையாடினோம், கையுறை போடாமல் பணியில் அதிகநேரம் தாக்குபிடிக்க முடியாது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் பலர் பனி சறுக்கு செய்து விளையாடி கொண்டிருந்தனர்.

Hurricane Ridge


காடுகளில் பல இடங்களில் காட்டிற்குள் செல்ல trailகள் உள்ளன, கோடைகாலம் இந்த காடுகளுக்குள் சுற்றுவதற்கு சரியான நேரம். கேம்ப் அமைத்து கொஞ்ச நேரம் இயற்கையுடன் தங்கி இருக்கலாம், குளிர் காலத்தில் இதெல்லாம் கஷ்டம். காடு மலைகளை இங்கு மிக சிறப்பாக பாதுகாக்கின்றனர், ஆங்காங்கே, என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருகின்றனர். குப்பைகளை போடுவது குற்றமாக கருதப்படுகிறது, பிடித்தால் அபராதம் விதிப்பார்கள். காடு மலைகளின் முக்கியத்துவம் கருதி, சிறப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

அங்கிருந்து dungeness bay செல்லலாம் என்று கிளம்பினோம், நாங்கள் அங்கு சென்று சேர அதிக நேரம் ஆனதால், பார்க்க முடியவில்லை, ஆகவே வீட்டிற்கு கிளம்பினோம். GPSல் வீட்டு விலாசத்தை இட்டுவிட்டு கிளம்பினோம் அது எங்களை ஒரு துறைமுகத்துக்கு இட்டு சென்றது, என்னடா வம்பென்று, வேறொரு வழி கேட்டதற்கு (Detour), காட்டியது, கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் தெரிந்தது வேறொரு துறைமுகத்துக்கு அழைத்து செல்கிறது என்று, பின்பு GPS செட்டிங்கில் மாற்றம் செய்து, தரை வழியில் மட்டுமே அழைத்துபோக சொன்ன பிறகு, தரை வழியில் ஒரு மணி நேரம் தாமதமாக வீடு வந்தோம். எந்த ஒரு பயணத்திலும் நாம் அதிகம் விரும்புவது பார்க்கும் இடங்களை விட, அந்தப் பயணம் நேரம். இந்த பயணமும் அழகு, பார்த்த இடங்களும் அழகோ அழகு.

Wednesday 16 December 2009

First Flight of a Dream(liner)

The day has come, the day Boeing was waiting, the day Aviation industry was dreaming, the day we were desperately waiting to see the reality of the hard work we put in last 5 years. Dec 15 2009 is going to be one of the important day to remember in our life, The Boeing 787 Dreamliner flew for the first time. I am privileged to see the 787 take off live and feel happy to be here in Seattle during this historic event in Aviation.

Boeing 787 Dreamliner


787 is a special airplane, not for one but for many reasons. 787 Dreamliner is a revolution in Commercial Aviation Industry, which happens once in blue moon, this is one such, a plane for Ages. I have listed below some of the features of 787 Dreamliner.

-> 787 is made with less Aluminum and more composite material, generally used in fighter planes. This reduces weight thereby reduces the fuel consumption.
-> Window size of 787 is greater than current planes window size, which gives the passengers good view with auto-dimming feature.
->Increase in Internal air pressure to give more comfort to passengers even in higher altitudes.
-> Better Air quality in air-conditioning system. And lot more, check this link for more details.

For us the excitement started from Monday evening, thinking and talking about the 787. Everything was going as per the plan, Only rain God could play the spoilsport. We were praying God to take care of climate. Boeing has made arrangements to web cast this event, we watched the event in web cast.

Lets move to Paine Field Everett Washington.

@10:00 - Lot of Employees gathered along the runway waving hands towards the lens. There was a Boeing IMAX helicopter is shooting the crowd and the event, Boeing is capturing all the events related to 787. It was said that the flight engines were Turn ON 30 minutes back. Two pilots along with lot of computers were on board for this Historic First Flight.

@10:10 - Final security check was done to ensure a safe flight. There were two military planes to escort 787 and 787 would be following these flights. These military planes had cameras to shoot 787 on fly.

@10:20 - The flight started to move on its own power to the run way, the plane was to fly towards north.

@10:25 - All set to go, Dreamliner was in runway waiting for final clearance from Air traffic control.

@10:27 - There she goes, she started the run for First Flight like Usan Bolt, ran fast, took off smoothly and steered into the sky like Sergey Bubka in pole vault. Awesome.

There She goes


The first flight was planned for 5 1/2 hours. But it was cut short (due to bad weather) and landed in 3 hours @ 1:35PM in Boeing field, King County, the county where we are staying. Boeing promised to have the first flight before this year end and did it like hitting a six in the last ball. The sleepless nights, weekends that we spent in our office to work in the software that supports this flight, came in my mind like a flash. All the hard work from thousands of people across the globe made this happen. This is Boeing's perfect Christmas gift for everyone who helped Boeing to make this mega event a success.

Moments before landing


For a person like me, who few years back, ran to street to see low flying helicopters and planes, it is really a great feeling and pleasure that a new generation flight takes off with my hard work in it, my contribution may be very minute but I feel proud and happy and now whenever I see 787 Dreamliner in sky I got a story to tell to my friends, family, children "Hey, Look at that plane, I have helped this plane to fly."

My Collegues with 787 After landing


Courtesy Bhagath for the photographs (Except the take off pic)

Watch 787 First Flight take off in this link and landing in this link.

Wednesday 9 December 2009

Orkutஆல் ஒரு பயன்

சில நாட்களுக்கு முன்னாள், என் orkutல் நந்தா என்ற பெயரில் ஒரு Friend Request வந்திருந்தது, நல்ல வேலை பள்ளியின் பெயரை குறிப்பிட்டு இருந்ததால் சரியாய் கண்டுபிடித்து விட்டேன் (Profile புகைப்படமாக சூர்யா படத்தை வைத்திருந்தான்), கொஞ்சம் scrapபி கொண்டோம். அவன் கிறுக்கல் பக்கத்தை பார்த்த பொது இன்னொரு பள்ளி தோழனின் தொடர்பும் கிடைத்தது. இருவருக்கும் தொலைப்பேசினேன், மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி நாட்களுக்கு பிறகு இப்போது தான் அவர்களை தொடர்பு கொண்டேன், நான் யாரையும் orkutல் தேடவில்லை (அட நம்புங்கப்பா!!!). லெனின் என் குரலை கேட்டதும் கண்டு பிடித்துவிட்டான், பரவாயில்லை, இத்தனை வருடங்களில் என் குரல் மாறவேயில்லை என்றான், அவனை கொஞ்சம் கலாயக்கலாம் என்று இருந்தவனக்கு பல்பு. நந்தா என்னை கண்டுபிடிக்கவில்லை, கொஞ்சம் நேரம் பேசியபின் தான் கண்டுபிடித்தான். கடந்த 10 வருடங்களில் நடந்தவற்றில் முக்கியமானதை சில நிமிடங்களில் பகிர்ந்து கொண்டோம். 10 வருட இடைவெளி எங்கள் நடப்பை ஒன்று செய்யவில்லை என்பது ஆரோக்கியமான விசையம்.

Social networkingல் அவளவ்வு ஆரவம் இல்லாதவன் நான், orkut வந்த புதிதில் ஆர்வம் கொண்டு அதில் நானும் ஒரு உறுப்பினர் ஆனேன், அப்பொழுது orkutல் இல்லாதது ஒரு குற்றமாக கருதப்பட்டது , "என்னது நீ orkutல இல்லையா?" என்று வியந்தனர், இப்போது facebook. ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்த நான், இப்போது அவளவ்வு இல்லை. Orkutஆல் எனக்கு நடந்த ஒரு நன்மை என் பள்ளி நண்பர்களின் நட்ப்பை பல வருடங்கள் கடந்து புதுபித்து கொண்டது, அதற்காக Orkutக்கு என் நன்றிகள்.

Friday 20 November 2009

எவெரட்

எங்கள் அறையிலிருந்து அனைவரும் கடந்த வாரம் எவெரட் சென்றிருந்தோம். சியாட்டலின் சிறப்பாக இருக்கும் போயிங் விமான நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு கூடம் (Boeing Assembly Plant) இங்கு இருக்கிறது. இந்த இடத்திற்கு யாரும் வரலாம், ஒரு டூர் போல் அழைத்து சென்று நமக்கு சுற்றி காட்டுகின்றனர். போயிங் தயாரிக்கும் பயணிகள் விமானங்களின் மாடல்கள் 707, 727, 737, 747 (ஏர் பஸ்சின் A380க்கு அடுத்த பெரிய பயணிகள் விமானம்), 757, 767 மற்றும் 777. இப்போது அவர்கள் புதிதாக உருவாக்கி வரும் மாடல் 787. இந்த விமானம் உருவாகி வருவதையே ஒரு பெரிய படமாக எடுக்கலாம், அவளவ்வு போராட்டங்கள். இந்த விமானம் சந்தைக்கு வந்த பின் விமானத்தை அலுமினிய பறவை என்று எழுத முடியாது, இந்த விமானம் அலுமினியம் இல்லாமல், கார்பன் கலவைகளால் உருவாக்கப்படுகிறது. இந்த மாதிரியை பற்றி தெரிந்து கொள்ள இங்க சொடுக்கவும். மேலே குறிப்பிட்ட மாடல்களில் 747, 767, 777 மற்றும் 787 வகை விமானங்கள் இங்கு தான் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

1960களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பற்றி சில தகவல்கள்...
உலகில் அதிக கொள்ளவு (Volume) உள்ள கட்டடம் (மொத்தம் 98.3 ஏக்கர்). - கின்னஸ் ரெகார்டில் இடம்பெற்றது.
10 லட்சம் மின் விளக்குகள் உள்ளன. குளிர் அதிகமான இடம் என்பதால் இவ்விளக்குகள் வெப்பத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
1,300 மிதிவண்டிகள் உள்ளன.
கட்டிடத்திற்கு அடியில் இருக்கும் மொத்த tunnellன் நீளம் 3.7 கி.மீ. இந்த இடத்தை வேலையாட்கள் ஓடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் உபயோகித்து கொள்கின்றனர்.
இந்த கட்டிடத்தின் முன் மனிதர்கள் எறும்பு போல தோன்றுகின்றனர்.



இங்கு என்ன செய்கிறார்கள்?
இந்த கட்டிடத்திற்குள் உதிரிபாகங்களை கொண்டு வந்து வெளியில் விமானமாக அனுப்புகிறார்கள்.
ஒரு 777 வகை விமானத்தின் உ. பா. எண்ணிக்கை 30 இலட்சம். 747 இல் 60 இலட்சம், 787 இல் 14 இலட்சம்.
விமானத்தின் பாகங்களை நட்டு, போல்டெல்லாம் போட்டு ஒன்றினைத்து, மின்சார இணைப்புகள் கொடுத்து, பாகங்கள் சரியாக வேலை செய்கிறதா என்று அடிப்படை பரிசோதனை செய்து பின் பறக்கும் தகுதியில் வெளியில் அனுப்புவார்கள்.
வெளியில் வந்தவுடன் விமானத்திற்கு வாடிக்கையாளர் விரும்பியபடி வண்ணம் பூசப்படும். விமானத்தின் எடையை கருத்தில் கொண்டு வண்ணம் பூசுவார்கள்.

இந்த வேலைகளெல்லாம் முடிந்தவுடன் விமானம் பறக்க தயாராகிவிடும், பிறகு விமானம் பறக்கும் சோதனைக்கு உட்படுத்தப்படும், சோதனை வெற்றிகரமா முடிந்தவுடன், விமானம் மனிதர்கள் பறக்க தகுதியானது என்று சான்றிதழ் பெற்றவுடன் (FAA போன்றவர்கள் இந்த சான்றிதழ் தருவார்கள்) , விமானம் விற்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒரு விமான ஓட்டியுடன் வந்து விமானத்தை எடுத்து செல்லுவார்கள். ஒரு
விமானம் இங்கு முழுதாக உருவாக 3 மாதங்கள் வரை கூட ஆகும். இப்போது உருவாகி வரும் 787 வகை விமானம் 12 நாட்களில் assemble செய்து விட முடியும் என்றனர்.

ஒரு முறை நாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் ஒரு விமானத்தை பழம் வைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து எடுத்து சென்றதாக அதைப் பார்த்த என் நண்பர்கள் சொன்னார்கள். சக்கரங்களுக்கு எலுமிச்சை பழம் வைத்தார்களா என்று தெரியவில்லை.

இந்த இடத்தை சுற்றி காட்டியவர் கடைசியில், நாங்கள் மிக பாதுகாப்பான விமானம் தயாரிக்கிறோம், அடுத்த முறை நீங்கள் விமானத்தில் ஏறும் முன் "If it is not Boeing, I am not going " என்று சொல்ல வேண்டும் என்றார்.

எனக்குள் இருக்கும் சில நம்ப முடியாத விசயங்களில் ஒன்று விமானம் எப்படி பறக்கிறது என்பது, பல முறை அதைப்பற்றி படித்து புரிந்தது போல் இருந்தாலும், அடுத்தமுறை விமானத்தை பார்க்கும் போது எனக்குள் இருக்கும் குழந்தை இது எப்படி பறக்கிறது? என்ற கேள்வியை திரும்ப கேட்டுகொண்டே இருக்கிறது.

Saturday 14 November 2009

சச்சின் - ஒரு யுகம்


வாழ்க்கையில் சில விசையங்கள் தான் நமக்கு வெகு காலம் ஒரு மகிழ்ச்சியோ ஆனந்தமோ தொடர்ந்து தரும், அப்படி எனக்கு சிறு வயதிலிருந்து மகிழ்ச்சி தரும் விசையங்கள் ரஜினி படம், ஊரில் கிரிக்கெட் விளையாடுவது, கோவில் திருவிழா, பள்ளி விடுமுறையில் அம்மாவின் சொந்த ஊருக்கு போவது, மழை பெய்யும் மாலை பொழுதில் சூடான காபி அருந்துவது இந்த வரிசையில் முக்கியமானது சச்சின் விளையாடும் ஆட்டத்தை பார்ப்பது. சச்சினின் கிரிக்கெட் சாதனைகள் எல்லாருக்கும் தெரியும், அதை கண்டிப்பாக நான் பட்டியலிடப்போவதில்லை, கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகள் வைரமாக மின்னும் சச்சினை பற்றி எனக்கு தோன்றிய எண்ணங்களே இந்தப்பதிவு.

சச்சின் டெண்டுல்கர், இந்தப் பெயர் எப்போது எனக்கு பரிச்சியமானது, சரியாக நினைவில் இல்லை, 1991ஓ 2ஓ, ஒரு சனிக்கிழமை நடந்த கிரிக்கெட் ஆட்டத்தின் போது என் அப்பா "யாரோ சச்சின் டெண்டுல்கர்னு ஒருத்தன் நல்ல விளையாடுரானாம் பாரு" என்று சொல்லிவிட்டு போனார். நானும் ஆர்வமாக பார்த்தேன், அன்று சச்சினை பார்த்ததோ, இல்லை எப்படி ஆடினார் என்பதோ ஞயாபகம் இல்லை, ஆனால் அன்று எங்கள் வீட்டு கதவிடுக்கில் (அப்ப எங்க ஊரில் ரெண்டு வீட்டில் தான் தொ.கா. பெட்டி இருந்தது, இப்ப வீட்டுக்கு ரெண்டு இருக்கும்) ஆட்டம் பார்த்து கொண்டிருந்தவர்களிடம் சச்சினை பற்றி கூறிய போது "என்னடா பேரு தன்டூரகாரன்ட்டு" என்று கூறி விட்டு போனார்கள். 17 ஆண்டுகள் கழித்து அதே சச்சினை பற்றி எழுதுகிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.



சச்சினின் வளர்ச்சியை பற்றி எல்லாருக்கும் தெரியும், தெரியாதவர்கள் அல்லது படிக்க விரும்புவர்கள் 22 வருடங்களுக்கு முன் வந்த இந்தக் கட்டுரையையும் இப்போது வந்திருக்கும் இந்தக் கட்டுரையையும் படித்தால் போதும். இரண்டின் பாடு பொருளும் சச்சின், இரண்டையும் எழுதியது ஹர்ஷா போகலே. எங்கள் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், நான் மணந்து கொள்ளப்போகும் பெண் உட்பட ஒரு ஒற்றுமை உண்டு, எல்லாருக்கும் சச்சினை பிடிக்கும், என் அப்பா கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் சச்சின் ஆடும் வரை மட்டும் தான் பார்ப்பார். 90 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருக்கும் போது சச்சினை விட என் அம்மா அதிக பரபரப்பாக இருப்பார், வேறு அலைவரிசை மாற்றிவிட்டு 100 ஓட்டங்கள் எடுத்தபின் பார்க்கலாம் என்பார், 100 அடித்த பிறகு என்னவோ என் அம்மாவே சதம் அடித்தது போல மகிழ்ச்சியில் இருப்பார். என் அக்கா பள்ளி செல்லும் நாட்களில் சச்சினின் புகைப்படத்தை சேகரிப்பது ஒரு முக்கிய வேலையாக வைத்திருந்தார், நானெல்லாம் பல படங்கள் என் அக்காவிற்கு கொடுத்துள்ளேன், எனக்கு சச்சின் ஆடுவதை பார்த்தால் போதும் சோறு தண்ணி வேண்டாம். எங்கயோ பிறந்து வளர்ந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இப்படி எங்கள் வீட்டில் மட்டுமல்ல இது போல பல ஆயிரம் வீடுகளில் ஒரு நபராக இருந்தார், இருக்கிறார், இருப்பார்.

சச்சின் கிரிக்கெட் ஆடுவதை பார்ப்பதே அலாதியானது. நான் வெறித்தனமா சச்சினை பார்க்க ஆரம்பித்தது 1996ல் இருந்து. சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்த காலம் அது. அதுவரை இருந்த சந்தேகங்கள் எல்லாம் விலகி மாடர்ன் கிரிக்கெட்டின் பிதாமகர் சச்சின் என்று கிட்ட தட்ட அனைவரும் ஒத்துகொண்டனர். சச்சினுக்கு பேட்டிங் என்பது ஓவியம் வரைவது, இசையமைப்பது போல் ஒரு கலை. அவர் ஒவ்வொரு பந்தையும் ஒரு காதலியை காதலன் அணுகுவது போல அணுகுகிறார். Non Striker Endல் இருக்கும் ஸ்டம்பை முத்தமிட்டு செல்லும் straight drive, கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் இரண்டடிகள் குதித்து வந்து மிட் ஆன் மீதோ, மிட் ஆப் மீதோ அல்லது இன்சைட் அவுட் என்றோ தூக்கி அடிக்கும் ஷாட், கீப்பருக்கு பின்னால் தட்டி விடும் பெடல் ஸ்வீப், ஒரு குழந்தையை செல்லமாக அடிப்பது போல் பந்துக்கு வலிக்காமல் அடிக்கும் கவர் டிரைவ், கொஞ்சம் கோவமாக அடிக்கும் புல் மற்றும் கட் ஷாட் என்று எதை விட, எதை சொல்ல, அத்தனையும் பார்ப்பதே இனிமையானது.



சச்சினின் பல ஆட்டங்கள் இன்னும் நினைவில் நீங்காமல் இருகின்றன. 96 உலககோப்பை ஆட்டம், 98 ஷார்ஜாவில் மணல் புயலுக்கிடையில் ஆடிய ஆட்டம் , 2003ல் செஞ்சுரியனில் அடித்த 98 ஓட்டங்கள், இரண்டு வாரம் முன்பு அடித்த 175 ஓட்டங்கள், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வீசிய அந்த கடைசி ஓவர் என இன்னும் பல ஆட்டங்கள். வெற்றிகள், விருதுகள். அவர் அடித்த ஒவ்வொரு ஓட்டமும் தங்களுடையது என்று ஒரு நாடே கொண்டாடுகிறது. சச்சின் ஆட ஆரம்பித்த காலத்தில், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தைகளெல்லாம் வளர்ந்து (சச்சினைப் பார்த்து) கிரிக்கெட் ஆடிப்பழகி இப்போது அவருடனே சேர்ந்து விளையாடி கொண்டிருகின்றனர், இதெல்லாம் சச்சினுக்கே கிடைத்த பெருமை.

சச்சினின் ஆட்டம் மட்டுமல்ல, மற்ற ஆட்டகாரரை மதிப்பது, பழகுவது முதல் எல்லாவற்றிலும் கிளாஸ் தான். இவ்வளவு புகழெல்லாம் ஒரு மனிதனால் தாங்க முடியாது என்கிற அளவு புகழ் அடைந்தாலும் அதை தலைகேற்றாமல், இப்ப கிரிக்கெட் ஆட வந்த சின்ன பையன் போல அடக்கமாக இருப்பதும் சச்சினின் சிறப்பு, அதனால் தான் இவளவ்வு காலம் சச்சினால் கோலோச்ச முடிந்திருக்கிறது. சச்சினின் சாதனைகளை யாரும் நெருங்குவது கூட கடினமே, அவர் சாதனை பட்டியலில் இன்னும் ஒன்று மட்டும் பாக்கி, அதை கூடிய சீக்கிரம் அடைய நம் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் அவருக்கு எப்போதும் உண்டு.

எனக்கு தெரிந்து விளையாட்டு துறையிலோ அல்லது அரசியல், கலை இல்லாத ஒரு துறையிலிருந்து இனம், மொழி, மதம் வேறுபாடுகளை தாண்டி ஒரு நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரிச்சயமாகி தனது ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வைத்தது சச்சின் மட்டும் தான், இது சாதரண சாதனை இல்லை, ஒரு வரலாற்று சாதனை (யோசித்து பாருங்கள் உங்கள் ஒவ்வொரு அசைவையும் ஒரு நாடே கவனித்தால்?) . சச்சின் போன்றவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருவர் தான் இருப்பார்கள், சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் சச்சின் என்கிற பெயர் இல்லாமல் இருக்க முடியாது.



சச்சினை பற்றி பிரபலங்கள் கூறியவற்றில் எனக்கு பிடித்த வாசகங்கள் சில கீழே

"Don't bowl him bad balls, he hits the good ones for fours."
- Michael Kasprowicz

"You take Don Bradman away and he is next up I reckon."
- Steve Waugh

"I have seen God. He bats at number 4 for India"
"When Tendulkar goes out to bat, it is beyond chaos - it's a frantic appeal by a nation to one man"
- Mathew Hayden

"Cricketers like Sachin come once in a lifetime, and I am privileged he played in my time"
- Wasim Akram

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"
- Shane Warne

"Everybody gets 15 minutes of fame. But if there's one person I've admired over a 15-year of period, it's definitely Sachin." - Brain Lara

"Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there
is something we don't know, something beyond scientific measure. Something
that allows him to soar, to roam a territory of sport that, forget us, even
those who are gifted enough to play alongside him cannot even fathom. When
he goes out to bat, people switch on their TV sets and switch off their
lives "
- BBC on Sachin

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is busy watching him batting!!!." - A Sachin Fan



1998ல் 90வது பிறந்தநாளில் டான் பிராட்மானும் சச்சினும் சந்தித்து கொண்ட நிகழ்வை தூர்தர்ஷன் செய்தியில் "கிரிக்கெட் விளையாட்டின் இரண்டு யுகங்கள் சந்தித்து கொண்டன" என்று கூறினார்கள், எவ்வளவு பொருத்தம், ஆம் சச்சின் ஒரு யுகம். ஒரு பேட்டியில், கிரிக்கெட் ஆட்ட ஓய்விற்கு பிறகு தனது வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார் சச்சின், ஆம் எங்களுக்கும் அப்படி தான் சச்சின், நீங்கள் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது. ஆனால் கவலைப்படாதீர்கள் சச்சின் உங்களின் இந்த இருபது ஆண்டு ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் எங்களுடன் சேர்ந்து, எந்த பதற்றமும் இல்லாமல், ஒரு ரசிகராக. நீங்கள் எங்களுக்கு இதுவரை கொடுத்த மற்றும் இனிமேல் கொடுக்கப்போகும் அனைத்திற்கும் பல்லாயிரம் நன்றிகள் சச்சின்.

Friday 13 November 2009

SIGNS (2009) - குறும்படம்


என் அலுவலக நண்பன் பகத், ஒரு நிழற்பட நிபுணர், சொன்னதின் பேரில் நான் பார்த்த குறும்படம் SIGNS. 12 நிமிடம் மட்டுமே ஓடும் ஒரு அற்புதமான படம். 12 நிமிட படத்தில் என்னவெல்லாம் சொல்ல முடியும்? ஏக்கம், ஏமாற்றம், காதல், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி இவ்வனைத்தையும் காட்சிப்படுத்தி, உணர வைத்திருக்கிறார் இயக்குனர் Patric Hughes. இவர் ஆஸ்திரேலியா நாட்டுக்காரர்.

கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கும் படம் போகப் போக நம்மை உள்ளிழுக்கிறது, பிறகு அந்த அழகான முடிவு. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, படத்தொகுப்பு என எல்லாம் மிக சிறப்பாக இருந்தது. ஆங்... ஒன்னு சொல்ல மறந்துட்டேன் படத்தில வசனமே இல்லீங்க. படம் முடியும் போது உங்கள் முகத்தில் கண்டிப்பாக ஒரு புன்னகை மலரும்.

இங்கே சுட்டினால் படத்தை ரசிக்கலாம்.

Monday 9 November 2009

ஒரு மின்னஞ்சல்

இந்த வாரம் எனக்கு வந்த forwaded மின்னஞ்சல் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது உங்கள் பார்வைக்கு.

Monday 2 November 2009

சுநோகால்மி கணவாய் (Snoqualmie Pass)

சனிக்கிழமையன்று எங்கள் அறையிலிருக்கும் அனைவரும் சுநோகால்மி கணவாய் (Snoqualmie Pass) செல்ல திட்டமிட்டிருந்தோம். சுநோகால்மி கணவாய், இனி மேல் சு.க. சு.க. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 50 மைல் தள்ளி, சுமார் 3000 அடி உயரத்தில் இருக்கும் இடம். அதன் சிறப்பு பனி, மலை முழுவதும் பனி படர்ந்திருக்கும். சியாட்டல் சுற்றி இருக்கும் மக்களுக்கு நல்ல சுற்றுலா தளம் மற்றும் பனி சறுக்கு விடும் இடம். வானிலையெல்லாம் சரி பார்த்துவிட்டு, பனி இருக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் கிளம்பினோம். 9 மணிக்கு கிளம்ப திட்டமிட்டு வழக்கம் போல் ஒரு மணிநேரம் தாமதமாக கிளம்பினோம். எங்கள் நண்பர் ரகு வழிகாட்ட (Navigator), கணேசன் மகிழுந்தியை செலுத்த அறையிலிருந்த ஐவரும் கிளம்பினோம். சுமார் ஒரு மணி நேரப்பயணம், 11:30 மணியளவில் சு.க.வை அடைந்தோம்.



நாங்கள் நினைத்தது போல் ஏராளமான மக்கள், பல மகிழுந்திகள், மலை நிறைய 3 இன்ச் அளவுக்கு பனி என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது சு.க. விசாரித்ததில் ஒரு வாரம் முன்பு 2 இன்ச் அளவில் பனியிருந்ததாகவும், சில நாட்களாக பெய்த மழையில் எல்லாம் கரைந்து விட்டதாக கூறினர். சரி, பனியில்லாட்டி என்ன, என்று மனதை தேற்றிக்கொண்டு, அனைவரும் அந்த இடத்தை சுற்றி ஒரு வலம் வந்தோம். அங்கு ஓரமாக ஒரு பெரிய அரிசி மூட்டை அளவில் இருந்த பனியை எடுத்து விளையாடி விட்டு, கிளம்பினோம், நாங்கள் மட்டும் அப்படியில்லை, அங்கு வந்திருந்த இந்த ஊர்காரர்களும், எங்களைப் போல், இருந்த துக்குளியூண்டு பனியில் விளையாடினர், அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கத்தானே செய்கிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பி North Bend என்னும் வணிக வளாகம் சென்றோம். வாங்குகிறோமோ இல்லையோ பல கடைகள் ஏறி இறங்கினோம், சில கடைகளில் வாங்கினோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி வேறு கடைகளை சுற்றி விட்டு ஒரு இந்திய உணவகத்தில் தோசை, கொத்து பரோட்டா என்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். பார்த்த (?) இடத்தை விட பயணம் நன்றாக இருந்தது, We enjoyed the drive.

கடந்த வாரம் பதிவர் அனன்யா பல்பு வாங்கிய அனுபவங்களை பற்றி பதிவு எழுதியிருந்தார், இது நான் வாங்கிய பல்பு. இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே.















Wednesday 28 October 2009

ஆலங்கட்டி மழை

எத்தனை வகையான மழை தெரியும் உங்களுக்கு? நானறிந்த வகையில் மொத்தத்தில் ஐந்து வகையான மழை (ஆசிட் மழையை தவிர்த்து) இருகின்றன
1. Normal Rain (மழை)
2. Snow Rain (பனி மழை)
3. Sleet or Ice pellets (சிறு பனி கட்டிகள் மழை)
4. Freezing Rain (உறையும் மழை)
5. Hail Stone rain (ஆலங்கட்டி மழை)

வடபழனி, வேளச்சேரி ரோடுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் படகு ஓட்டி கொண்டிருப்பார்களே அதற்கு காரணமான மழையை பற்றி நன்கு தெரியும் என்பதால் நாம் பனி மழையில் இருந்து தொடங்குவோம்.

பனி மழை:
வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை Troposphere (இதற்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) முழுவதும் நிலவ வேண்டும் . இந்தப்பனி பஞ்சு போல் இருக்கும், ஆரம்பத்தில் இதில் விளையாட உற்சாகமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பனி பட்ட இடம் எல்லாம் எறிய ஆரம்பித்துவிடும்.



சிறு ஐஸ் கட்டிகள் மழை:
மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும்.



உறையும் மழை:
பனியாக வரும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகிவிடுகிறது அல்லவா, அந்த நீர் பூமியை அடைந்து பின் உறைந்தால் அது உறையும் மழை. அதாவது பனி நீரான பின்பு மீண்டும் பனியாவதற்கு குறைந்த வெப்பம் தேவை, பூமியில் இருந்து மிக கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல், பூமியில் விழுந்த பின் நிலத்தின் குறைந்த வெப்பம் காரணமாக பனியானால் அது உறையும் மழை. இந்தப்பனி நிலத்தில் கண்ணாடி போல உறைந்திருக்கும். இது கொஞ்சம் ஆபத்தான மழை, நிலத்தில் நீர் உறைந்திருப்பதே தெரியாது, தரை வழுக்கும், வண்டிகள் ஓட்டுவதற்கு கடினமாக இருக்கும்.



ஆலங்கட்டி மழை:
மேலே சொன்ன மழையெல்லாம் மழை மற்றும் பனி காலங்களில் வரும், ஆனால் ஆலங்கட்டி மழை வெய்யில் காலங்களில் வரும். இந்த காலங்களில் சில சமயம் உருவாகும் ஒரு வகை மேகங்களில் ஏற்படும் சிறு புயலில் நீர் துளிகள் ஒன்றாகி உருவாகுவது தான் இந்த பெரிய ஆலங்கட்டிகள், பெரிய பனி கட்டிகள். இந்த கட்டிகள் கற்கண்டு அளவில் இருந்து உள்ளங்கை அளவில் வரை இருக்கும். நம் மேல் விழுந்தால் வலிக்கும். இந்த கட்டிகள் கார் கண்ணாடியெல்லாம் உடைத்து விடும்.



சரி, என்ன திடீர்னு மழை பற்றி எழுதுறேன் பாக்கறீங்களா? கடந்த செவ்வாயன்று இங்கு திடீரென்று பனி கட்டி மழை பெய்தது, அது ஆலங்கட்டி மழை என்று நினைத்து கொண்டோம், அது எப்படி உருவாகிறது என்று படித்த போது, பெய்தது ஆலங்கட்டி மழை இல்லை பனி கட்டி மழை என்று தெரிந்தது. நமக்கு தெரிந்தத நாலு பேருக்கு சொல்லலாம்னு இந்தப்பதிவு, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல தானே.

Sunday 25 October 2009

The Shawshank Redemption (1994)


"வாழ்க்கையில் எந்த நிலமையிலும் சூழலிலும் நம்பிக்கை ஒன்று இருந்தால் வெற்றி பெறலாம்" என்று சொல்லும் படம் தான் The Shawshank Redemption. மார்கன் ஃப்ரீமன், டிம் ரபின்ஸ் நடித்து ஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து ஃபிரான்க் டரபோன்ட் இயக்கியது. எனக்கு பிடித்தமான படங்களில் மிக முக்கியமான படம். வாழ்க்கையே முடிந்து போகும் என்ற புள்ளியிலிருந்து ஒருவன் எப்படி மீண்டும் தன் வாழ்க்கையை தொடங்குகிறான் என்பதே The Shawshank Redemption. IMDBல் டாப் 250 படங்களில் மக்கள் இப்படத்திற்கு முதல் இடத்ததை கொடுத்திருக்கிறார்கள்.

Andy - ஒரு நிதி நிறுவனத்தின் மேலதிகாரி, அவன் தன் மனைவியையும், அவளுடைய காதலனையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, நிருபிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை (மொத்தம் 40 வருடங்கள்) விதிக்கப்படுகிறான். அந்த தண்டனையை அனுபவிக்க அனுப்பப்படும் இடம் ஷஷாங் சிறைச்சாலை . அங்கு சிறையில் பலருக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வரும் மற்றொரு கைதி ரெட், பிரபலமான கைதி. சிறைக்கு வந்து சில நாட்கள் கழித்து ரெட்டிடம் தனக்கு கற்களை வைத்து சிறு பொம்மைகள் செய்வதில் விருப்பம் என்றும் அதனால் ஒரு சுத்தியல் வேண்டுமென்று கேட்கிறான், ரெட்டும் வாங்கி தருகிறான். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகின்றனர், Andyயும் ரெட்டின் குழுவில் ஒருவனாகிறான். ஒரு முறை சிறை காவலதிகாரி தான் அதிக வருமான வரி கட்ட வேண்டியது குறித்து சக அதிகாரிகளிடம் கூறுவதை கேட்கும் Andy, அவருக்கு வரி கட்டாமல் சொத்தை எப்படி பாதுகாப்பது என்று வழி சொல்கிறான், அதில் பிரபலமாகும் Andy, சிறை அதிகாரி பலருக்கும் வருமான வரி ஆலோசகனாகிறான். இதற்கு பிறகு ரெட் குழுவில் அவன் மரியாதை ஏறுகிறது.

ஷஷாங் சிறையின் மேலதிகாரி நார்டன், சிறை கைதிகளை தனக்கு வருமானம் ஈட்டுவதற்கு உபயோகித்து கொள்கிறார், அதற்கு நிதி ஆலோசகராக Andyயை உபயோகித்து கொள்கிறார் நார்டன். இதனால் சிறை மேலதிகாரியுடனும் நெருக்கமாகிறான் Andy. சில வருடங்கள் கழித்து மற்றொரு கைதிகள் குழு அந்த சிறைக்கு வருகிறது, அதில் டாம் என்கிற ஒரு இளம் கைதி இவர்கள் குழுவில் ேர்கிறான். அவனுக்கு எழுதப் படிக்க கற்று கொடுக்கிறான் Andy. ஒரு நாள், Andy சிறைக்கு வந்த கதையை கேட்டு விட்டு, இதற்கு முன் தன்னுடன் சிறையிலிருந்தவன் இதே போல் கொலை செய்ததாகவும், அதற்கு ஒரு வங்கி அதிகாரி தண்டிக்கப்பட்டதாக கூறியதையும் டாம் கூறுகிறான். இதை சிறை மேலதிகாரியிடம் கூறி தன் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு கோருகிறான் Andy, அதை ஏற்காத அதிகாரி அவனை தனிமை சிறையில் தள்ளுகிறார், பிறகு டாமையும் கொலை செய்கிறார் . சில மாதங்கள் கழித்து தனிமை சிறையிலிருந்து வருகிறான் Andy, ஒரு நாள் ரெட்டிடம், விடுதலை ஆகி வந்தால் தன்னை சந்திக்க வேண்டுமென்றும், இருவரும் தொழில் செய்யலாம் என்றும் கூறுகிறான். அடுத்த நாள் சிறையில் இருந்து மாயமாகிறான் Andy. Andy எப்படி தப்பித்தான், ரெட் விடுதலை ஆனான? Andyயுடன் சேர்ந்தானா என்பது மீதிப்படம்.

சிறையும், சிறை சார்ந்த அனுபவங்களே படம் முழுவதும். சிறையில் பல வருடங்கள் இருப்பவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள உலகத்தை சந்திக்க தயங்குவதையும், அப்படி வெளியில் செல்வோரின் நிலைமையை ப்ரூக்ஸ் தாத்தா பாத்திரத்தின் வாயிலாக கூறியிருக்கிறார்கள். கதையை ரெட் narrate செய்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரெட்டாக மார்கன் ஃப்ரீமன், Andyயாக டிம் ரபின்ஸ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமனின் வசன உச்சரிப்பு அற்புதம், அவருடைய குரலே தனி கம்பீரம், அவர் செய்யும் narration மற்றொரு அற்புதம். படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு பாத்திரம் ப்ரூக்ஸ் தாத்தா. இருபது வருடங்களில் ஒருவன் மனம் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை சிறப்பாக காட்சிபடுத்தியிருகின்றனர். படத்தில் பல காட்சிகள் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக நூலகத்தை பராமரிக்கும் ப்ரூக்ஸ் தாத்தா, பரோலில் விடுதலை செய்யப்படும் போது, சிறையை விட்டு போக மனமில்லாமல் அழும் காட்சியும், ரெட்டை பரோலில் விடுவிக்க நடக்கும் விவாத காட்சியும், பரோலில் விடுதலை செய்யப்படும் ரெட், தன் வேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கவும் அனுமதி கேட்கும் காட்சியும். படத்தில் எனக்கு பிடித்த வசனங்களில் சில...

"The funny thing is, on the outside, I was an honest man, straight as an arrow. I had to come to prison to be a crook."

"There are things in this world not carved out of gray stone. That there's a small place inside of us they can never lock away, and that place is called hope."

"You're right. It's down there, and I'm in here. I guess it comes down to a simple choice, really. Get busy living or get busy dying."

"Andy Dufresne , who crawled through the river of shit and came out clean on the other end"

ஒரு காட்சியில் ரெட்டிடம் இப்படி சொல்கிறான் Andy "Hope is never dangerous Red, Hope is always a good thing, hope keeps a man Alive". இந்தப்படம் சொல்வது ஒன்று தான் நம்பிக்கை, நம் நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் அதற்காக உழைத்தால், வெற்றி நிச்சயம். ஆம், நம் வாழ்க்கை என்னும் சக்கரம் நம்பிக்கை என்னும் அச்சாணியில் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது.

Thursday 22 October 2009

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டை தெரு - ஒரு பார்வை


நெம்பர் 40 ரெட்டை தெரு சமீபத்தில் படித்த புத்தகம். இரா.முருகனின் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல். சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் (கதைகள்)" படித்து இருக்கிறீர்களா? அதைப்போல இது முருகனின் ரெட்டை தெரு தேவதைகள். அவர் வாழ்ந்த அந்த ரெட்டை தெருவில் தன்னுடைய இளம் (பள்ளி செல்லும்) வயது வரை பார்த்த மனிதர்களின், நடந்த சம்பவங்களின் அழகான தொகுப்பு தான் இந்த நூல். கிரேசி மோகனின் முன்னுரையே சிறப்பாக இருந்தது, அதில் முருகனை சுஜாதாவுடன் ஒப்பிடுகிறார். கிரேசி எழுதியது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றியது. இதற்கு முன் முருகனின் "மூன்று விரல்" நாவல் படித்திருக்கிறேன், அது மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஒருவனை பற்றியது, நன்றாக இருந்தது, அந்த நாவல் படிக்கும் போது சில நேரங்களில் எழுதியது முருகனா? சுஜாதாவா? என்று சிறு குழப்பம் ஏற்படும் அந்த அளவிற்கு சுஜாதா நடையை போல் இவர் நடையும் அற்புதம்.

இந்தப்புத்தகம் ஒரு நாவல் அல்ல, சிறுகதைகளும் அல்ல, முருகனின் பால்ய கால சம்பவங்களின் தொகுப்பு. சுஜாதாவின் ""ஸ்ரீரங்கத்துக்கும்" முருகனின் ரெட்டை தெருவுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் சுஜாதா அவர் நினைவுகளை (கொஞ்சம் கற்பனை கலந்து என்று நினைக்கிறேன்) "சற்றே பெரிய சிறுகதைகள்" ஆக்கியிருந்தார். முருகன் தொகுப்புகளாக, சம்பவங்களாக எழுதியிருக்கிறார். சில பகுதிகளுக்குள் தொடர்ச்சி இருக்கும் சிலதில் இருக்காது. இது ஒரு தீவிர வாசிப்பை எதிர்பார்க்காத நூல். ஆனால் படிக்க இனிமையான நூல். முருகனின் மூளையில் மடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையேல் அவர் பதின் வயதிலும் அதற்கு முன்னரும் நடந்த சம்பவங்களை இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்து எழுதியிருக்க முடியாது.

ஒவ்வொரு அத்யாயமும் ஒரு மனிதரையோ அல்லது சம்பவத்தையோ குறித்து சொல்கிறது. யாரோ அருகில் அமர்ந்து கதை சொல்வது போல் இருக்கிறது நடை. இந்நூலை படித்த போது 1960லில் நம்ம ஊர் எப்படி இருந்திருக்கும் என்று எட்டி பார்த்து வந்ததுபோல் இருக்கிறது. பல சம்பவங்கள் நமக்குள் பல நினைவுகளை கிளறி விடுகிறது. இதில் வரும் சில மனிதர்கள் போல் நம் ஊரிலும் சிலர் இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். அவர் வீட்டு மனிதர்கள் ஒரு துணை கதப்பாதிரமாகவே வந்து போகின்றனர், சில அத்யாயங்கள் தவிர. அவர் ஊரில் வாழ்ந்த வக்கீல்கள், பால்காரர், கடைக்காரர், போஸ்ட் மேன், மேஸ்திரி, மளிகை கடைக்காரர், போலீஸ் ஏட்டு, பள்ளி ஆசிரியர்கள், ஊர் தெருவோரத்தில் வாழ்ந்த பாட்டிகள், உணவகம், சவுண்ட் சர்வீஸ், டைப்பிங் பயிற்சி பள்ளி என்று பலரையும்/பலவற்றையும் பற்றி சம்பவங்கள் நிறைந்திருகின்றன. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சில வழக்கங்கள், சட்டங்கள், அரசியல் பற்றியும் சில குறிப்புகள் இருகின்றன. நூல் முழுவதும் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது. சில அத்யாயங்கள் படித்து முடித்ததும் ஒரு புன்சிரிப்பும், சில அத்யாயங்கள் முடிக்கும் போது சிறு பாரமும் அழுத்துகிறது. அனேகமாக அந்த வீதியில் வாழ்ந்த அனைவரையும் பற்றி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதியிருப்பார், அவர்கள் இதை படித்தால் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, குறிப்பாக அவருடைய சிறு வயது நண்பர்கள் படிக்கும் போது ஒரு குறுகுறுப்பும், படித்த பின் ஒரு அகமகிழ்ச்சியும் ஏற்படும்.

பயணம் செய்யும் போது படிப்பது பிடித்தமான ஒரு விசையம், இந்த புத்தகம் அப்படி படிக்கப்பட்டது. பெரும்பான்மையான பகுதிகளை காலையில் பேருந்தில் அலுவலகம் செல்லும் போது திரும்பி வரும் போதும் படித்து முடித்தேன். சியாட்டலில் ரெட்டை தெரு இல்லை என்றாலும் ஏதோ ரெட்டை தெரு வழியாக அலுவலகம் சென்று வந்தது போல் ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. எத்தனையோ கதைகள் எத்தனையோ தெருக்களில் இன்னும் எழுதப்படாமல் இருகின்றன, முருகன் எழுத்தில் ரெட்டை தெருவும் அதில் வாழ்ந்த மனிதர்களும் சாகா வரம் பெற்று இப்புத்தக வடிவில் உலவிக்கொண்டிருப்பார்கள்.

Sunday 18 October 2009

கேக் வெட்டி கொண்டாடிய தீபாவளி

இந்த தீபாவளி நான் என் வீட்டில் கொண்டாடாத இரண்டாவது தீபாவளி. கல்லூரியில் ஒரு தீபாவளி, செமஸ்டர் தேர்வுக்கு இடையில் வந்ததால் கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடப்பட்டது, இம்முறை ஊரில் இல்லாததால், அலுவலக நண்பர்களுடன் சியாட்டலில் கொண்டாடப்பட்டது. இந்திய நேரத்திலே கொண்டாடினோம். இங்கு 40 பேரு 15 அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கிறோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடியது, சிறப்பு விருந்தினராக அமெரிக்க அலுவலக நண்பர்கள் இருவர் கலந்துகொண்டனர். எங்கள் அப்பார்ட்மென்டில் உள்ள சமுதாய கூடத்தை (Community Hall) வண்ண காகிதங்களால் அலங்கரித்திருந்தார்கள் அங்கு அவரவர் வீட்டில் இருந்து உணவு செய்து எடுத்து வந்து ஒன்றாக உண்டு தீபாவளி கொண்டாடினோம். எங்கள் அறையில் இருந்து தோசை. தோசை, பிரியாணி முதல் கேரட் அல்வா, ரசமலாய் வரை எல்லாம் இருந்தன. எல்லா உணவும் நனறாக இருந்தன. முதலில் இரண்டு விளையாட்டுகள் நடந்தன, மியூசிக் சேர் போன்று ஒரு விளையாட்டும், Dumb Charades விளையாட்டும் நடந்தது. கொஞ்ச நேரம் நடனமும், சந்திரா, சபரி, பிரதாப், அமிர்தா (இரண்டு வயது) ஆகியோர் சிறப்பாக நடனமாடினர்.

முதல் முறையாக கேக் வெட்டி தீபாவளி கொண்டாடப்பட்டது, பிறந்த நாளையே கேக் வெட்டி கொண்டாடாத எனக்கு ரொம்ப அன்னியமாக தோன்றிய விசையமிது, ஆனாலும் வேறு விழியில்லை என்பதால் கேக் வெட்டுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பிறகு அனைவரும் அவரவர் உணவை தவிர மற்ற உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு கிளம்பினோம். சாப்பிட்ட பிறகு யாருடைய உணவு அதிகம் காலியாகியிருக்கிறது என்று போட்டி வேறு, எங்கள் தோசை ஓரளவு போனியாயிருந்தது, தேங்காய் சட்னியை தவிர. மிக வேகமா காலியானது ஜீவனின் தம் பிரியாணியும், ககன் வீட்டிலிருந்து வந்த ரசமலாயும்.

இப்ப கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் ...

சின்ன வயதில் தீபாவளி ஒரு பண்டிகை என்பதை விட ஒரு படி மேலானது. சில வாரங்களுக்கு முன்னே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும், புது உடை, பட்டாசு,முறுக்கு, குலோப் ஜாமுன் என்று ஓவ்வொன்றும் ஒரு சந்தோசம். அதிலும் வீட்டின் கடைசி பிள்ளை போல் பட்டாசுக்கு மவுசு அதிகம், பத்து நாட்களுக்கு முன் பட்டாசு வீட்டுக்கு வந்து விடும், தினம் பள்ளியில் இருந்து வந்ததும் அந்த பட்டாசுகளை எடுத்து பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, எண்ணெய் வைத்து குளித்து, புது உடை உடுத்தி, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி, குலோப் ஜாமுன் சாப்பிட்டு பிறகு பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் மாலை வரை பாட்டாசு தான். நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

கடந்த வருடம் தீபாவளியன்று இதையெல்லாம் என் அம்மாவிடம் சொல்லி இப்பவெல்லாம் நான் ஏன் இவ்வளவு உற்சாகமா கொண்டாடுவதில்லை என்று வருத்தப்பட்டேன், அதற்கு அப்பா "உன்னை யார் இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொன்னது இப்பவும் நீ அதிகாலை எழுந்த உன் இஷ்டம் போல கொண்டாடவேண்டியது தானே" என்றார், நியாயம்தான், தவறு என் மேல். ஆனாலும் தீபாவளி என்று எப்போது கேட்டாலும் மனதிலே தோன்றும் மகிழ்ச்சி குறைவதே இல்லை. அதனாலேயே தீபாவளி ஒரு பண்டிகை என்பதைவிட மேலானது. ஒரு பிஜிலி வெடி கூட வெடிக்காமல், மத்தாப்பு கொளுத்தாமல், குலோப் ஜாமுன் சாபிடாமல், பட்டிமன்றம் பார்க்காமல் கேக் வெட்டி கொண்டாடினாலும் இந்த தீபாவளியும் மனதின் ஒரு ஓரத்தில் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

Sunday 11 October 2009

சியாட்டல் - சிறு குறிப்பு

சியாட்டல், வாசிங்டன் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம், பெரிய நகரம். கடலோரத்தில் அமைந்திருக்கும் அழகான நகரம். இது அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து மணிக்கு 96 மைல் வேகத்தில் சென்றால் ஒரு மணி நேரத்தில் கனடா வந்துவிடும். அமெரிக்க கனடா எல்லையில் அமைந்திருக்கிறது சியாட்டல். சியாட்டலுக்கு இருக்கும் பல பெயர்களில் மழை நகரம் (ரெயின் சிட்டி) பிரசித்தம். இங்கு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பார்கள். நான் முதன் முதல் சியாட்டல் ஒரு மே மாதம் வந்தேன், முதல் நாள் நான் அலுவலகம் சென்றது கொட்டும் மழையில். Sleepless in Seattle படம் பார்த்தீர்களா அதில் tom hanks வீட்டை காட்டும் போதெல்லாம் மழையில் தான் காட்டுவார்களாம். வாசிங்டன் மாநிலத்தை Evergreen state (பசுமை மாநிலம்) என்று அழைக்கிறார்கள், வாசிங்டன் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம். இலையுதிர் காலத்தில் கூட இங்கு பெரும்பான்மையான மரங்களில் இலை உதிர்வதில்லை, எப்போதும் பசுமையே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் வாஷிங்டன் டி.சி (Washington District of Columbia) வேறு இந்த வாஷிங்டன் மாநிலம் வேறு. வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரம், வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் ஒலிம்பியா.

இந்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் downtown என்று ஒரு இடம் உண்டு, அது தான் அந்த நகரத்தின் மையப்பகுதி, வர்த்தகப் பகுதி. சியாட்டலில் அனைத்து விதமான போக்குவரத்தும் உள்ளது. துறைமுகம், விமான நிலையம், தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளன. பொதுவாக பல அமெரிக்க நகரங்களில் பேருந்து வசதிகள் அவ்வளவு அதிகமா இருக்காது காரணம் இங்கு ஆளாளுக்கு குறைந்தது ஒரு car (மகிழுந்தி) வைத்திருக்கிறார்கள். நம்மூரில் தான் கார் மகிழுந்தி, இங்கு சாதா உந்தியாகத்தான் கருதப்படுகிறது. சியாட்டலில் பேருந்து வசதிகள் நன்றாகவே இருக்கிறது. நாலைந்து பேருந்து பிடித்தாவது தொலைவாக போக வேண்டிய இடத்துக்கு கூட போய் விடுகிறோம். இங்கு இணையத்தளத்தில் நாம் செல்லும் பேருந்தை track செய்ய வசதியுண்டு. பேருந்தில் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் ஒரே டிக்கெட் தான் , ஒரு டிக்கெட் மூன்று மணி நேரத்திற்கு செல்லும், அதற்குள் எந்த பேருந்திலும் ஏறி கொள்ளலாம். தற்போது ஒரு டிக்கெட்டின் விலை 1.75$. மாதம் மாதம் பஸ் பாஸ் விற்கிறார்கள், அதை வாங்கிக்கொண்டால், ஒரு மாதத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

சியாட்டல் டெளன்டவுன் புகைப்படம் கீழே.


இங்கு ஃபெர்ரி (சின்ன கப்பல்) வசதியும் உண்டு, பக்கத்தில் உள்ள தீவுகளுக்கு செல்ல இதை பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து கனடாவுக்கு செல்ல கப்பல் வசதி உள்ளது.

சியாட்டல் விமான நிலையத்தின் பெயர் சி-டக் (sea-tac) விமான நிலையம், அதில் சி -சியாட்டல், டக் - டகோமா. டகோமா என்பது சியாட்டலுக்கு பக்கத்தில் இருக்கும் நகரம்.

தொடர்வண்டி போக்குவரத்தும் ஓரளவுக்கு உபயோகப்படுதப்படுகிறது. புதிதாக சியாட்டல் டெளன்டவுனிலிரிந்து விமான நிலையத்திற்கு தொடர் வண்டி சேவை தொடங்கியிருகிறார்கள்.

வாஷிங்டன் மாநிலத்தில் வரி கொஞ்சம் அதிகம், 9%. செருப்பு வாங்கினாலும், லேப்டாப் வாங்கினாலும் இதே வரி தான், 100$க்கு ஒரு பொருள் வாங்கினால் 109$ பணம் செலுத்த வேண்டும். இந்த வரி வாஷிங்டன் மாநிலத்திற்கு மட்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி வரி. பக்கத்தில் இருக்கும் போர்ட்லேண்டில் வரியே இல்லை. பல இடங்களில் நம்மவர்களை காணலாம் குறிப்பாக பெல்வியுவ், ரெண்டன் போன்ற பகுதிகளில் பலர் இருக்கிறார்கள். பல இந்திய உணவகங்களும், கடைகளும் உள்ளன, என்ன, ஒரு தோசைக்கு சுமாராக 5$ செலவாகும்.

சியாட்டளின் சிறப்பாக சில விசையங்கள் உள்ளன.
1. மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் சியாட்டல் பக்கத்தில் உள்ள ரெட்மண்டில் உள்ளது, பில் கேட்ஸ், ஸ்டீவ் பல்மோர் ஆகியோர் வீடுகள் கூட இங்கு தான் இருக்கிறது.

2. Starbucks Coffee தலைமையகம் இங்கு தான் இருக்கிறது. வாஷிங்டன் மாநிலம் காஃபி அதிகமாக குடிக்கும் மாநிலமாகும்.

3. போயிங் அலுவலகங்கள், தளங்கள் மற்றும் விமான assembly மையங்கள் இங்கு இருகின்றன. சியாட்டலை சுற்றி பல இடங்களில் போயிங் அலுவலகங்களும், தளங்களும் உள்ளன. எவரட்டில் உள்ள விமான assembly மையத்தில் போயிங் 747, 767, 777 மற்றும் 787 ரக விமானங்கள் assemble செய்யப்படுகின்றன (ஒன்றிணைக்கபடுகின்றன). பொது மக்கள் இந்த இடத்தை பார்க்க வாரத்தில் ஏழு நாளும் அனுமதி உண்டு. போயிங் இருப்பதால் இந்நகரத்திற்கு ஜெட் சிட்டி (Jet City) என்ற பெயரும் உண்டு.

4. Space Needle - சியாட்டளின் உயரமான டவர். 605 அடி, இதன் 520ஆவது அடியில் SkyCity என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளது, இதன் சிறப்பு, அவ்வளவு உயரத்தில் அந்த ரெஸ்டாரெண்ட் சுற்றிக் கொண்டிருக்கும். இரவில் Space Needle எப்படி இருக்குமென்று கீழே பாருங்கள்.


இது சியாட்டல் பற்றிய ஒரு மைக்ரோ குறிப்பு. இவை தவிர இங்கு சுற்றி பார்க்க அருவிகளும், பனி மலைகளும், ரெயின் பாரஸ்ட்களும், கடற்கரைகளும் பல இருக்கின்றன. இவை பற்றியும், சியாட்டளின் வாழ்க்கை முறை, வேலை போன்ற மற்ற விசையங்கள் பற்றியும் அடுத்த பதிவுகளில்.

Friday 9 October 2009

நிலவில் தீபாவளி கொண்டாடும் நாசா!

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னே நிலவில் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் நாசா!. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலை ஒரு ஏவுகணையை (Rocket) செலுத்தி நிலவில் மோத விட போகிறார்கள். இந்த ஏவுகணையை ஒரு விண்கலம் மூலம் செலுத்துகிறார்கள். இந்த ஏவுகணை ஒரு தோட்டாவை விட இரண்டு மடங்கு வேகத்தில் செலுத்தி நிலவில் மோத விட போகிறார்கள், இந்த மோதலினால் ஏற்படும் விளைவை வைத்து நிலவில் நீர் அல்லது பனி கட்டி என்று நீர் சம்பந்தப்பட்ட எதாவது இருகிறதா என்று ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள். நிலவின் தென் துருவத்தின் அருகில் தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த ஏவுகணையை செலுத்தும் விண்கலம் அதை பின்தொடர்ந்து, மோதலின் விளைவுகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பும் அதை வைத்து ஆராய்ச்சி செய்ய போகிறார்கள்.

எதச்சியாக இந்த செய்தியை படித்ததால், பகிர்ந்து கொள்ள தோன்றியதால் இந்தப்பதிவு. இந்த செய்தியை படித்த பின் எனக்கு இரண்டு வருத்தம்.

1. பல வருடங்களாக நம் தமிழ் குழந்தைகளுக்காக வடை சுட்டு கொண்டிருக்கும் பாட்டி நனையாமல் இருந்தால் சரி.
2. இன்னும் பல ஆண்டுகளுக்கு பாட்டி வடை சுடவும், நிலா சோறு சாம்பிடவும் இந்த நிலவு நமக்கு வேண்டும். ஆராய்ச்சி என்ற பெயரில் நிலவை கெடுக்காமல் இருந்தால் நல்லது.

அப்படியே நிலவில் தண்ணீர் இருந்தால் அதை பூமிக்கு எடுத்து வருவார்களா? இல்லை இதை வைத்து நிலவை பட்டா போட்டு நல்ல விலைக்கு விற்று விடுவார்களா? அப்படியே விற்க நிலவு யாருக்கு சொந்தம்? நாசாவுக்கா? அமெரிக்காவுக்கா? மஞ்சள், பாஸ்மதி அரிசியை போல் நிலவையும் சொந்த கொண்டாட முயர்ச்சிப்பார்களோ?

Sunday 4 October 2009

கிளிஞ்சல் 5 - கே பழனிச்சாமி (K P)

உங்களுக்கு உங்கள் ஊரில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? நான் சொல்வது பார்த்தால் ஹலோ மட்டும் சொல்லும் நண்பர்கள் அல்ல, அதையும் தாண்டிய நெருங்கிய நண்பர்கள்? ஒரு ஐந்து பேர் இருப்பார்களா அல்லது மூன்று பேர் குறைந்தபட்சம் ஒருத்தராவது இருப்பார்கள் என்று நினைகிறேன், எனக்கு இருந்த ஒரே ஊர் நண்பன் கே பழனிச்சாமி. இருந்தான் என்று படித்தவுடன் பயந்து விடாதீர்கள், அவன் இன்னும் இருக்கிறான் ஆனால் இன்று எங்களுக்குள் நட்பு இருப்பதாக தோன்றவில்லை அவ்வளவு தான். இனி அவனை பற்றி...

எங்கள் ஊரில் என் வயது பையன்கள் என்று பார்த்தால் பழனிச்சாமி, முகிலன், பாலன் அவ்வளவுதான். இதில் பழனிச்சாமிக்கும் எனக்கும் ஒரே வயது, முகிலன் என்னை விட ஒரு வயதும், பாலன் என்னை விட மூன்று வயதும் சிறியவர்கள். இதில் நானும் முகிலனும் ஒரே ஆங்கிலப் பள்ளியில் படித்தோம், பழனிச்சாமியும் பாலனும் அரசு பள்ளியில் படித்தனர். பழனிச்சாமி சுமாருக்கும் நன்றுக்கும் இடையில் படித்தான், முகிலன் சுமாராக படித்தான், பாலன் நன்றாக விளையாடுவான், படிப்பை தவிர மற்ற வேலைகள் நன்றாக செய்வான். இந்தப்பதிவு பழனிச்சாமி பற்றியதால் இவர்கள் இனி தேவையில்லை தேவைப்பட்டால் அழைத்துக்கொள்ளலாம். பழனிச்சாமி ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை, அப்பா பெயர் காளி, அம்மா பெயர் சரசா. அவனை ஊரில் பெரும்பாலும் காளி பையன் என்றே அழைப்பார்கள், நாங்கள் K P என்று. எங்கள் ஊரில் ஒரு ஓரத்தில் அவர்கள் வீடு இருக்கிறது. இத்துடன் மணிபுரம் எல்லை முடிவு என்று கோடு போட்டது போல் வரிசையாக சில வீடுகள் இருக்கும், அதில் கடைசி வீடு தான் பழனிச்சாமியின் வீடு. அவனுடைய அப்பா ஒரு அரிசி மில்லில் வேலை செய்தார், இன்னும் செய்கிறார் என்று நினைக்கிறேன். பழனிச்சாமி வீடு இருந்த அந்த வரிசை முழுவதும் அவர்கள் உறவினர்கள் வீடே.

எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம் எப்போது நிகழ்ந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஊரில் என்னோடு சுற்றிய ஒரே நண்பன் அவன் தான். நாங்கள் இணைந்து ஐஸ் நம்பெரிலிருந்து கிரிக்கெட் கபடி வரைக்கும் விளையாடியிருக்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்போது எங்கள் ஊரில் இருந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் பாலன், K P மற்றும் நான் (அப்போது). எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் இருப்பவர்களை இரு அணிகளாக பிரித்து நான் ஒரு அணிக்கும், பழனிச்சாமி ஒரு அணிக்கும் கேப்டனாக இருப்போம், சில சமயங்களில் இருவரும் ஒரு அணியில் இருந்தும் ஆடுவோம். எங்கள் ஊர் கிரிக்கெட்டில் அப்போது continuous ஓவரெல்லாம் உண்டு, அதாவது ஒருவரே தொடர்ந்து மூன்று ஓவர் போடலாம். பக்கத்து ஊரில் எல்லாம் போய் விளையாடி இருக்கிறோம். அவனுடைய அக்காவும் என் அக்காவும் நண்பர்கள். அவனுடைய அக்கா என்னை எங்கள் ஊரின் G T நாய்டு என்று அழைப்பார், நான் அவ்வளவு புத்திசாலியாம். அவன் வீட்டில் எப்போதும் எதாவது ஒரு புத்தகம் படிக்க கிடைக்கும் ராணி காமிக்ஸ், ராணி முத்து, ராஜேஷ்குமார் கிரைம் நாவல் மற்றும் சில மாத வார இதழ்கள். இதெல்லாம் அவன் வாங்கியிருப்பான் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்கி வந்திருப்பான், எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வர இதெல்லாம் ஒரு காரணமா அமைந்தது. நான் முதலில் படித்தது, காமிக்ஸ் புத்தகம், அது அவனுடைய வீட்டில் இருந்துதான்.

அவனுடைய வீட்டில் எனக்கு எல்லா உரிமையும் இருந்தது, என் மேல் அவர்களுக்கு ஒரு மரியாதை, அவன் அதிக மதிப்பெண்கள் வாங்கா விட்டால் அவன் நல்ல படிக்க வேண்டும் என்று என்னை சொல்ல சொல்வார்கள். அவரவர் பள்ளியில் நடப்பதை பகிரிந்து கொள்வோம். வெவ்வேறு மீடியம்களில் படித்ததால் இருவரும் சேர்ந்து படித்ததில்லை, இருவரும் ஓரளவு படித்தோம். அவனுடைய பள்ளி நாட்களில் நான் விடுப்பில் இருக்கும் சமயங்களில் அவனுடைய பள்ளிக்கு சென்றிருக்கிறேன், அங்கு அவனுடன் பள்ளியில் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அவனுடைய பள்ளி நண்பர்களுடன் விளையாடிவிட்டு வந்திருக்கிறேன். அப்போது வருடா வருடம் எங்கள் ஊரில் விளையாட்டு போட்டி நடக்கும், அதற்கு பரிசு வாங்க ஊர் மக்களிடம் பணம் வசூலிக்க நானும் அவனும் போவோம், வருடா வருடம் மின்னொளியில் நடந்த கபடி போட்டிகளை விடிய விடிய பார்த்திருக்கிறோம், அவ்வப்போது ஊரில் பொதுவில் டிவி டெக் வைத்து ஒளிபரப்பப்படும் படங்களை ஒன்றாக பார்த்திருக்கிறோம். இப்போது விளையாட்டு போட்டியும் இல்லை, கபடி போட்டியும் நடத்தப்படுவதில்லை, யாரும் டெக்கில் படம் போடுவதும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் சமயங்களில், எங்கள் வீடு வாசலில் நாங்கள் மட்டும் கிரிக்கெட் விளையாடுவோம். கால், அரை பரீட்ச்சை சமயங்களில், தேர்வு இல்லாத மதிய வேளைகளில் என் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் பந்தில் பேசிகொண்டே கிரிக்கெட் விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. பத்தாவதில் 350 மதிப்பெண்களே அவன் வாங்கியிருந்தான், ஆனாலும் கவுந்தப்பாடி அரசு பள்ளியில் முதல் குரூப் கிடைக்குமென்றும் அதை தேர்வு செய்யுமாறும் கூறியிருந்தேன், அவனும் சரி என்றான். +1 முதல் நாள் பள்ளி சென்று வந்த நான், அவனுடைய வீடிற்கு போனேன் அவன் வீட்டில் இல்லை, சரி என்று அவன் புத்தக பையை பார்த்த போது தான் அவன் மூன்றாவது குரூப் எடுத்தது தெரிந்தது, எனக்கு பெரும் கோபம் வந்தது. ஏதோ அவன் பெரும் தவறு செய்தது போல் தோன்றியது. அவனிடம் மிகவும் வருத்தப்பட்டுவிட்டு வந்தேன், அவன் தனக்கு இதே போதுமென்றான்.

+2 படிக்கும் போது கொஞ்ச நாள் பள்ளி விடுதியில் தங்கி இருந்ததாலும் தீவிரமாக படித்து கொண்டிருந்ததாலும் அவனுடன் அதிகம் பேச முடியவில்லை, எங்களுகிடையில் சின்ன இடைவெளி விழுந்தது. மேலும் இச்சமயத்தில் அவனுக்கு சில புது நட்பு கிடைத்திருக்கலாம். +2 முடித்த பின் நான் பொறியியல் சேர்க்கைக்கு காத்திருந்தேன், அவன் மேல் படிப்பிற்கு எதுவும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. மேலே எதுவும் படித்தானா என்று நினைவில் இல்லை. நான் பொறியியல் கல்லூரி சேர்ந்த புதிதில் ஊருக்கு வரும் போது அவன் அவர்கள் உறவினர் ஒருவரிடம் முடி திருத்தல் தொழில் கற்றுக்கொண்டிருப்பதாக கூறினர். பிறகு சில மாதங்கள் கழித்து நான் கவுந்தப்பாடி சென்ற போது அங்கு அவன் கடை வைந்திருந்தது தெரிந்தது, கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்தேன் எங்களுக்கிடையில் ஒரு இடைவெளி இருந்தது தெரிந்தது. அதன் பிறகு செமஸ்டர் விடுப்புகளில் ஊருக்கு வரும் சமயங்களில் சாலையில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். சில காலம் கழித்து அவன் செய்து வந்த தொழிலையும் விட்டுவிட்டு கரூரில் ஏதோ ஒரு மகளிர் குழுவிலோ அமைப்பிலோ வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். சமீபகாலங்களில் நான் அவனை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் கெட்ட விசையங்களே (என்னுடைய இரு சம்பவங்கள் பதிவில் முதல் சமபாவம் இவனை பற்றியதே).

ஒரு ஏழ்மையான படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் இருந்த இவன், நன்றாக படித்து நல்ல நிலைக்கு வருவான் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அவனுடைய இந்த தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் +1, +2விலோ அல்லது அதற்கு பிறகோ அவனுக்கு ஏற்பட்ட கெட்ட சகவாசங்களே. நான் அவனை பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது, இனி எப்போது அவனை பார்த்தாலும் அந்த பழைய நட்பு எட்டி பார்க்குமா என்பது சந்தேகமே, மீண்டும் அந்த நட்பு துளிர்க்க வேண்டும் என்பதே என் ஆவல். இந்த மாதிரி எத்தனையோ பழனிச்சாமிகள் பல ஊர்களில் வழி தவறி போய் ஊர் சுற்றிகொண்டிருகிறார்கள், நாமெல்லாம் தப்பி பிழைத்து உலகம் சுற்றிகொண்டிருகிறோம்.

Thursday 1 October 2009

சியாட்டல் - காலத்தை துரத்தும் பயணம்


அதோ இதோ என்றிருந்த என் சியாட்டில் பயணம் ஒரு வழியாய் உறுதியாகி 29 செப்டம்பர் இரவு கிளம்பி 30 அன்று காலை 10 மணியளவில் சியாட்டில் வந்தடைந்து மதியம் இரண்டு மணியளவில் இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன். சியாட்டலில் இருந்து என் முதல் பதிவு. அலுவல் காரணமாக வெளிநாடு செல்வது மென்பொருள் துறையில் அன்றாடம் நிகழ்வது, அந்த வகையிலே இந்த பயணமும். இதற்கு முன்னரும் சியாட்டில் வந்திருக்கிறேன்.

சென்னையில் செப்டம்பர் 30 ௦௦:25AM மணிக்கு விமானம் ஏறி செப்டம்பர் 30 9:45AM மணிக்கு சியாட்டலில் வந்திறங்கினேன். தாய்லாந்து, ஜப்பான் வழியாக பயணம் செய்தோம், செய்தோம்? இதே ப்ரொஜெக்டில் என்னுடன் இணைந்து (அல்லது நான் அவருடன் இணைந்து) செயல் பட இன்னொருவரும் வந்தார். தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையத்தை வந்தடைந்த போது தாய்லாந்தில் மணி செப்டம்பர் 30 05:30AM. அங்கிருந்து டோக்கியோவுக்கு 07:00AM மணிக்கு கிளம்பிய விமானம் ஐந்தரை மணி நேர பயணத்துக்கு பிறகு டோக்கியோ நரிட்டா விமான நிலையம் வந்தடைந்த போது மணி 03:40PM. தாய்லாந்திலிருந்து டோக்கியோ வந்த விமானத்தில் ஒரு பனி பெண் (பாட்டி) வாயில், டிரகுலவிற்கு இருக்கும் பல் போல ஏதோ கட்டியிருந்தார், பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அங்கிருந்து 05:30PM மணிக்கு சியாட்டில் விமானம், எட்டு மணி நேர பயணத்துக்கு பிறகு சியாட்டில் அடைந்த போது மணி செப்டம்பர் 30 09:45AM. ஜப்பானில் 30ஆம் தேதி மாலை கிளம்பி சியாட்டலை 30ஆம் தேதி காலை வந்தடைந்தோம், என்ன ஒரு விந்தையான பயணம்? காலத்தை துரத்தி பிடிக்கும் பயணம். இந்தியாவுக்கும் சியாட்டளுக்கும் 11:30 மணி நேர வித்தியாசம், இந்தியாவில் செப்டம்பர் 30 இரவு 10 மணி என்றால், சியாட்டலில் செப்டம்பர் 30 காலை 9:30 மணி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுவரை வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் தூங்கவும், தூங்கிய நேரத்தில் வேலை செய்யவும் வேண்டும்.

பயண சமயத்தில் அதிகமாக தூங்கினேன், மிக கொஞ்சம் நேரம் படித்தேன் (இரா.முருகனின் "நெம்பர் 40 ரெட்டை தெரு") The Proposal ஆங்கிலப்படம் பார்த்தேன் நள தமயந்தி மாதிரியான படம், கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தது, இரண்டு மணி நேரம் போனது. அவ்வப்போது அவர்கள் எழுப்பி கொடுத்த இலை, தழைகளை மென்ற நேரம் தவிர பெரும்பாலான நேரம் தூங்கியே கழிந்தது.

கிளம்புவதற்கு முன் என் நண்பர்களிடம் சியாட்டில் நாட்கள் என்று என் வலைப்பூவில் எழுதுவேன் என்று கூறியிருந்தேன், வேலை அதிகமாக இருக்கும் உன்னால் அதெல்லாம் முடியாது என்று கூறினர். இங்கு வேலை பளு எப்படி இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை, எப்படி இருந்தாலும் குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவாவது சியாட்டல் நாட்களின் கீழ் வெளியிட வேண்டும் நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.

Wednesday 23 September 2009

உன்னைப்போல் ஒருவன் - திரைப்பார்வை


ஒரு சாமான்யன் இந்நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்து போராட நினைத்தால் என்ன நடக்கும்? அதுதான் உன்னைப்போல் ஒருவன். உன்னைப்போல் ஒருவன் பற்றி பல பதிவுகள் வந்திருந்தாலும், என் வலைப்பூவில் இத்திரைப்படம் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்ற ஆசையிலே இந்த திரைப்பார்வை.

இந்த பதிவு வரும் சமயத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். ஒரு சாமான்யன் நாலு செல்போன் கொஞ்சம் புத்திசாலித்தனம் வைத்துக்கொண்டு காவல் துறை கமிசனரை ஆட்டிவிக்கிறார். சாமான்யனாக கமல், கமிஷனராக மோகன்லால்.
இந்தியில் வெளிவந்த இந்த படத்தை தமிழில் தயாரித்து நடித்தற்கே கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழாக்கத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை, சின்ன சின்ன மாறுதல்களே, கடைசியில் தான் செய்ததற்கு கமல் சொல்லும் காரணம் தவிர (இந்தியில் ஷா வேறு காரணம் சொல்லுவார்).200 பேர் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் 100 கோடி பேரை மிரட்டுகிறார்கள், நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கிறோம் என்ற கோபத்தையும் அதே சமயம் தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதம் தான் வழி என்றும் கூறுகிறது இத்திரைப்படம்.

கமல் இருக்கும் இடம் ஒரு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் மாடி, மோகன்லாலுக்கு ஒரு அறை அவ்வளவுதான். இந்த இரு இடங்களில் இருந்து கொண்டு இருவரும் காட்டும் நடிப்பும் பாடம், நடிப்பு ராட்சசர்கள். இளம் நடிகர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அதுவும் கமலின் உடல் மொழியும், மோகன்லாலின் நடிப்பு அபாரம், அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழும் அழகு. நிருபராக வரும் அனுஜா நன்றாக நடித்திருக்கிறார்.இளம் காவல் அதிகாரிகளாக வரும் கணேஷும், பரத்தும் சிறப்பாக நடித்திருகின்றனர், அதிலும் கணேஷ் துடிப்பான காவல் அதிகாரியாக மிக சிறப்பாக செய்திருக்கிறார், வரும் காலங்களில் சரியான படம் தேர்வு செய்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது. தலைமை செயலாளராக லக்ஷ்மி நடித்திருக்கிறார், எடிட்டர் இவருடைய க்ளோஸ்-அப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். முதல்வர் பாத்திரத்திற்கு கலைஞர் குரலே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு.

இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் இசைஅமைப்பாளர் ஸ்ருதி, வசனகர்த்தா இரா.முருகன் (நானும் இவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்றோம்) , இயக்குனர் சக்ரி என்று அனைவரும் மிக சிறப்பாக செயல்பட்டிருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது. இப்படத்தின் வசனகர்த்தா இரா.முருகன், இலக்கிய உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார், அவருடைய இலக்கிய பணி வெள்ளித்திரையிலும் தொடர வாழ்த்துகள். வசனத்தில் பல இடங்களில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்திருக்கலாம், அதிலும் கமல் மோகன்லாலிடம் "binaryயா பதில் சொல்லு" என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது, மற்றபடி வசனம் சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைகள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை, படம் சொல்ல வருவதை நாம் சரியாக புரிந்து கொள்ளும் வரை.

இதன் இந்தி படத்தை இதுவரை பார்கதவர்கள் தமிழில் பார்க்கும் போது இப்படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். பல வலைப்பூக்களில் இந்த படத்தை பற்றி பல விவாதங்கள் நடக்கின்றன, இது Hindutuva சார்ந்த படமென்றும், Anti-Muslim படமென்றும் சிலர் பரப்புகிறார்கள், இன்னும் சிலர் ஒரு படி மேல போய் படத்தை விட்டுவிட்டு கமலை ஒரு பிடிபிடிகின்றனர். விவாதம் அந்த படத்தை சுற்றி இருக்கும் வரையில் அரோக்கியமனதே, அதை மீறும் போதுதான் அசிங்கமாக இருக்கிறது, குறிப்பாக ஒரு தனி மனிதனை தாக்குவது. அவர் எடுக்கும் படத்தை விமர்சிக்க மட்டுமே நமக்கு உரிமை உண்டு, அவரையல்ல. இந்த விவாதங்களையெல்லாம் படிக்காமல் (அப்படியே படித்தாலும் தலைகேற்றாமல்) இப்படத்தை பாருங்கள், அப்படி பார்க்கும் போது அந்த கட்டிடத்தின் உச்சியில் நிற்ப்பது கமல் அல்ல நம்மை போல் ஒரு ஒருவன் என்று நினைத்து பாருங்கள் இப்படம் சொல்ல வரும் நியாயங்கள் புரியும்.

Sunday 13 September 2009

ஈரம் - திரைப்பார்வை


இயக்குனர் சங்கரின் அடுத்த தயாரிப்பு ஈரம். அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர் அறிவழகன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மிருகம் படத்தில் நடித்த ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். தன்னுடைய ஒவ்வொரு தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் புதுமையாக அல்லது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக சங்கர் இருப்பார் போல, அந்த வகையில் ஈரம் படமும் ஒரு புதுமையான அனுபவம் கொடுக்கிறது. சங்கர் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் எதிர்ப்பபுடன் படத்துக்கு சென்றேன், படம் சிறப்பாக இருந்தது. தமிழில் திரில்லர் வகை படங்கள் மிக குறைவு, அந்த குறையை போக்க வைத்திருக்கிறது ஈரம்.

பெரிய அப்பார்ட்மென்டில் ஒரு பெண்ணின் மரணம் நிகழ்கிறது, அதை விசாரிக்கும் காவல் துறை, கிடைக்கும் ஆதாரங்களை வைத்து அது ஒரு தற்கொலை என்று வழக்கை மூட நினைக்கையில், ACP வாசுதேவன் அந்த வழக்கில் சில மர்மங்கள் இருப்பதாக தோன்றுவதால் தானே அந்த வழக்கை மேலும் விசாரிக்க விரும்புவதாக கூறி, அந்த வழக்கு விசாரணையை தொடங்குகிறார். இந்த வழக்கை விசாரிக்க அவர் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இறந்த பெண்ணும் இவரும் பழைய காதலர்கள். முதல் கட்ட விசாரணையில் அந்த மரணம் ஒரு தற்கொலை போலவே தோன்றுகிறது, அந்த சமயத்தில் அடுத்தடுத்து அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் இருவர் இறக்க, விசாரணை சூடு பிடிக்கிறது. நான்காவதாக நடக்கும் கொலையை நேரில் பார்க்கும் ACPயால் அந்த கொலைகாரனை பிடிக்க முடியாமல் போகிறது. இடைவேளைக்குப் பிறகு இந்த தொடர் கொலைகளுக்கான காரணங்கள் தெரிய வரும் போது சில ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

ACPயாக ஆதி, பிசினஸ் மேனாக நந்தா, அவர் மனைவியாக சிந்து நடித்திருக்கிறார்கள். ஒரு காவல் அதிகாரிக்கான கம்பீரம் மற்றும் மிடுக்குடன் குறையுமில்லாமல் மிகையுமில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆதி, நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது, வாழ்த்துக்கள் ஆதி. கல்லூரி மாணவியாகவும், பின்னர் மனைவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் சிந்து. நந்தாவும் தன் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். சரண்யா மோகன், ஸ்ரீ நாத் என்று துணை பாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று மிக சிறப்பாக நடித்திருக்கும் மற்றொரு நடிகர் தண்ணீர்.

படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஈரமாக இருக்கிறது, தண்ணீர் இடம் பெறாத காட்சிகள் மிக குறைவு. இந்த காட்சிகள் எதுவும் திணிக்கப்படாமல் இயல்பாக வந்து போகிறது. படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு அம்சம் பாடல், ஒரே ஒரு பாடல் தான் அதுவும் காட்சிகளுக்கு பின்னணியில் ஒலிக்கிறது, மழையே! மழையே! என்ற அந்த பாடல் சிறப்பாக இருந்தது. படத்திற்கு இசை தமன், பாய்ஸ் படம் பார்த்தீர்களா? அதில் குண்டாக வருவரே, அவரேதான். இசை நன்றாக இருந்தது, ஒரு திர்ல்லர் படத்திற்க்கான இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார் தமன், அவருக்கு ஒரு பூங்கொத்து. முதல் பாதியில் கொலை விசாரணயின் போது நடு நடுவே ஆதி சிந்து காதல் காட்சிகள் வந்து போகின்றன, இந்த காட்சிகளில் எடிட்டிங் சிறப்பாக இருந்தது. கேமரா மழையில் நனைந்தது போல் ஈரமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமகம்சா, காட்சிகள் அணைத்தும் அழகு + திரில், இவருக்கும் ஒரு பூங்கொத்து. மேல் குறிப்பிட்ட அனைத்தும் படத்திற்கு பக்க(கா) பலமாக அமைந்திருக்கிறது. இத்தனையும் சிறப்பாக அமைய முக்கிய காரணம் இயக்குனர் அறிவழகன், தன் குருவிடம் சிறப்பாக பாடம் பயின்று வந்திருக்கிறார், சங்கரின் எந்த சாயலும் தெரியாமல் ஒரு புதுவிதமான அனுபவமாக இந்த படத்தை இயகியிருகிறார். மனதில் ஈரமில்லாதவர்களை பற்றிய இப்படத்திற்கு ஈரம் என்ற தலைப்பிட்டதற்கு ஒரு பூங்கொத்து, . திரில்லர் படம் என்பதற்காக திடீர் இசை, க்ளோஸ் அப் சாட், கதாபாத்திரங்கள் அனைவரையும் திகிலாக பேசவைப்பது என்றில்லாமல் சிறப்பான திரைக்கதை அமைத்து திகிலூட்டியிருகிருக்கும் இயக்குனர்அறிவழகனுக்கு ஒரு பொக்கே.இந்த படத்தின் மூலம் நம்பிக்கையான இயக்குனர் என்று பெயர் பெற்றுவிடுவீர்கள், இனி எடுக்க போகும் படங்களும் இதே போல் அல்லது இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தொடர்ந்து தனது தயாரிப்பில் புதுமையையும், புதியவர்களையும் அறிமுகப்படுத்தி சிறந்த தயாரிப்பாளராக வெற்றிநடை போடும் இயக்குனர் சங்கருக்கும் ஒரு பொக்கே.

இந்த வருடத்தின் சிறந்த படங்கள் வரிசையில் ஈரம் படத்திற்கும், சிறந்த இயக்குனர் வரிசையில் அறிவழகனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு. இந்த விமர்சனம் எழுதிகொண்டிருக்கும் போது என் வீட்டு குளியல் அறையின் கதவிடுக்கிளிரிந்து ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது, அது போல் நம் மனங்களிலும் ஈரம் கசியட்டும்.

Thursday 10 September 2009

எனது கிறுக்கல்கள்

கவிதை எழுதுவது என்பது பலருக்கும் பிடித்த விசயமாக இருக்கிறது, எனக்கும். முதல் கவிதை முயற்சி எனது பத்தாவது வகுப்பில் நடந்தது. எங்கள் பள்ளியில் கையெழுத்து புத்தகம் ஒன்று தொடங்கப்பட்டது, பெயர் candour. அதில் மாணவர்கள் தங்கள் இஷ்டப்பட்டத்தை எழுதினார்கள். நானும் அதில் எழுத ஆசைப்பட்டேன் விளைவு கவிதை எழுத ஆரம்பித்தேன். நான் எழுதுவதை யாராவது படித்து திருத்தி பின்னர் அது இதழில் வரும். அந்த இதழ் சில மாதங்களில் நிறுத்தப்பட்டது, நான் எழுதியதாலா? என்று தெரியவில்லை. எத்தனை கவிதைகள் எழுதினேன் என்று சரியாக நினைவில் இல்லை, ஒரு கவிதை இயேசு பற்றியும் மற்றொன்று பொங்கல் திருநாள் பற்றியும் எழுதியது நினைவில் இருக்கிறது. பிறகொரு முறை ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் மாணவர்கள் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்தேன். இந்த எல்லா முயற்சிக்கும் பாராட்டு கிடைத்தது. பிறகு கல்லூரியில் பெரிதாக எதுவும் எழுதவில்லை, கடைசித் தேர்வுக்கு முன் ஒரு கவிதை எழுதினேன், யாருக்கும் படிக்க கொடுத்தாக நினைவில் இல்லை.

வேலை கிடைத்த பிறகு புத்தகங்களின் மீது காதல் கொண்டேன், படிக்க ஆரம்பித்தேன், பிறகு தான் நான் இதுநாள் வரையில் எழுதியதெல்லாம் கவிதை இல்லை என்று. இனி மேல் கவிதை என்கிற பெயரில் யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று சில ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. இப்போது இந்த வலைப்பூவில் அதையும் எழுதிப்பாப்போம் என்று தோன்றியதால் உதயமானது எனது கிறுக்கல்கள். கிறுக்கல்கள் என்ற பெயரில் நடிகர் பார்த்திபன் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார், நான் வேலைக்கு சேர்ந்து முதலில் வாங்கிய புத்தகம் அது. கிறுக்கல்கள் என்ற தலைப்பில் இதை வெளியிட கொஞ்சம் தயக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது, ஆனாலும் அந்த பெயரிலேயே எழுதுகிறேன். திரு. பார்த்திபன் என்னை மன்னிப்பாராக. கிறுக்கல்கள் என்றவுடன் என் நினைவில் வருவது எங்கள் டியூஷன் இயற்பியல் ஆசிரியர் கூறுவது "நாமெல்லாம் கிறுக்கனுகட கிறுக்கிகிட்டே இருக்கணும் அப்பத்தான் நல்லா படிப்போம்" என்பார்.

எனக்கு தோன்றும் எண்ணங்களை மடித்து ஒடித்து ஒரு கவிதை வடிவில், குறித்து கொள்ளுங்கள் "கவிதை வடிவில்" எழுதுவேன் அவ்வளவுதான். நான் இங்கே எழுதப்போவதை கவிதை என்கிற நோக்கில் அணுக வேண்டாம் உங்களுக்கு பிடித்திருந்தால் ரசியுங்கள், இல்லையெனில் பொறுத்துக்கொள்ளுங்கள் . நான் எழுதுவதில் தப்பி தவறி எதாவது ஒன்று கவிதையாகவோ அல்லது அதற்கு அருகாமையிலோ வந்தால் மகிழ்ச்சியே. இந்த முயற்சியின் முன்னேற்றத்திற்கு உங்கள் பின்னூட்டங்கள் பெரிதாக உதவும், அகவே உங்கள் கருத்துக்களை அதில் தெரிவிக்கலாம்.

கிறுக்கல் - 1







அழும் குழந்தை
உறங்கும் அம்மா
தாலாட்டும் ரயில்

கிறுக்கல் - 2


அழகான வாயில்
பிரமாண்டமான மதில்
கம்பீரமான கோட்டை
அதை சுற்றி அகண்ட அகழி
அதில் படகு பயணம்
பத்து ரூபாய்

Thursday 3 September 2009

கிளிஞ்சல் 4 - ஆசிரியர் ராஜேந்திரன்

ஆசிரியர்கள், இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் கூட சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப குறைவு, படிக்காதவர்களுக்கு கூட அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தமான ஆசிரியர்கள் இருப்பார்கள். இதுவரையான என் பயணத்தில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன், அதில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். ஐந்தாவது வரை படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், கணக்கு வாத்தியார் பரமேஸ்வரன், சரஸ்வதி மேடம், தமிழன்னை, விலங்கியல் ஆசிரியர் அர்த்தநாரி, வேதியியல் ஆசிரியர் சரவணன், டியூஷன் வேதியியல் ஆசிரியர் ராஜேந்திரன், கல்லூரி விரிவுரையாளர்கள் மகாலிங்கம், மகேஷ் மற்றும் குமார் போன்றோர்கள் மறக்க முடியாத ஆசிரியர்கள். இந்த வரிசையில் நான் புத்தகம் படிக்கவும், வலைப்பூவில் எழுதவும் ஆர்வத்தை தூண்டியவர் என்கிற முறையில் திரு. சுஜாதாவும் என் ஆசிரியரே. மேலே குறிப்பிட்ட பல ஆசிரியர்களையும் விட்டு நான் விலகி விட்டேன், ஒரு சிலருடன் தான் தொடர்பு இருக்கிறது. என்னுடைய ஆறாவது வகுப்பு முதல் இன்று வரை நான் விலகாமல் இருக்கும் ஒரே ஆசிரியர் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் திரு. ராஜேந்திரன், இந்த வார கிளிஞ்சல்.

நான் ஐந்தாவது வரை கவுந்தப்பாடி காந்தி கல்வி நிலையத்தில் படித்தேன், ஆறாவது முதல் பள்ளி மாற வேண்டிய நிலை, நான் ஆங்கில வழிக்கல்வியில் தான் படிப்பேன் என்று அடம் பண்ணியதால் நான் பெருந்துறை விவேகானந்த matriculation பள்ளியில் சேர்க்கப்பட்டேன், எங்கள் வீட்டிலிருந்து 15 கீ.மீ. தொலைவில் அமைந்திருந்தது இப்பள்ளி. நான் சேர்ந்ததில் இருந்த பள்ளி படிப்பை முடிக்கும் வரை இப்பள்ளியில் இருந்த ஆசிரியர்களில் ராஜேந்திரன் ஆசிரியரும் ஒருவர், இயற்பியல் ஆசிரியர். நான் படிப்பில் ஏழாவது வரை சுமார் தான், எட்டாவதில் இருந்துதான் ஓரளவு நன்றாக படித்தேன். ஆறு, ஏழு வகுப்புகளில் ஒரு ஆசிரியர் மாணவனாக தான் பழகினோம், எட்டவதில் இருந்து எங்கள் பிணைப்பு கொஞ்சம் அதிகமானது, நான் படிப்பில் சுமார் என்பதாலோ என்னவோ ஏழாவது வரை கொஞ்சம் பயத்துடன் ஆசிரியர்களை பார்த்துவந்தேன், எட்டவதில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, கொஞ்சம் அக்கறையுடன், நேசத்துடன் என் படிப்பை அணுகினேன், கொஞ்சம் படிக்கவும் செய்தேன், அதனால் ஆசிரியர்களும் நண்பர்களாக தெரிந்தனர். முதல் ரேங்க் வாங்கவில்லை என்றாலும் நான்காவது ஐந்தாவது ரேங்க் வாங்கும் அளவுக்கு படித்தேன். எட்டவதில் இருந்து ஆசிரியர்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தேன் குறிப்பாக ராஜேந்திரன் ஆசிரியருடன்.

நான் காலை ஏழு மணி 17ஆம் என் பேருந்தில் பள்ளிக்கு செல்வேன், நான் ஏறும் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடத்தில் வரும் கருங்கரடு நிறுத்தத்தில் ஆசிரியர் ஏறுவார், நான் ஏறும்போது எப்படியும் அமர்வதற்கு இடம் இருக்கும் அவர் ஏறும் போது எப்போதும் இடம் இருக்காது. நான் பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் தூங்க ஆரம்பித்துவிடுவேன் நான் இறங்கும் நிறுத்தத்தில் தான் விழிப்பேன். அந்த நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு 10 நிமிடம் நடக்க வேண்டும், நானும் அவரும் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். ஆசிரியர் நல்ல உயரம், அவர் வேகமாக நடப்பார் நானும் அவருக்கு இணையாக நடக்க முயற்சிப்பேன், சில நாட்கள் நான் கிட்ட தட்ட ஓடுவேன். இந்த நடை பயணத்தின் போது நாங்கள் பொதுவாக விளையாட்டு சம்பந்தமாக எதாவது பேசுவோம், குறிப்பாக கிரிக்கெட் அல்லது டென்னிஸ். கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடிக்கும். விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார், பூ பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளில் எங்களுடன் விளையாடியிருக்கிறார்.பள்ளி முடிந்த பிறகு மாலை வேளைகளில் அவர் பெரும்பாலும் பூ பந்து விளையாடுவார்.

எட்டாவதில் முதல் மாதத்துக்கு பிறகு அவர் மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஆனார். முதல் மாதம் terror. எட்டாவதில் முதல் பாடம் Vernier caliper நடத்தும் போது வகுப்பில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அனைவரும் அடி வாங்கினோம், அதன் பிறகு இரண்டாவது பாடம் நடத்தும் போது What is mass? என்ற கேள்விக்கு பயந்துகொண்டு நான் கூறிய பதில் அவர் காதில் விழுந்ததா இல்லையோ தெரியவில்லை அவர் இடது கையால் விட்ட அறை இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அவரிடம் நான் அடிவாங்கவில்லை, சமத்து மாணவனாகிவிட்டேன். ஒன்பதாவது வரைக்கும் எங்களுக்கு பாடம் எடுத்தார், பள்ளியில் +1, +2 ஆரம்பித்த பிறகு அவர் அவர்களுக்கு பாடம் நடத்த போய்விட்டதால், பத்தாவதுக்கு மட்டும் ஆனந்த் என்ற ஆசிரியர் எங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தினார். ராஜேந்திரன் சார் நன்றாக பாடம் நடத்துவார், அவர் பாடம் நடத்தியதில் புரியாதது என்று எதுவும் இருக்காது, வகுப்பில் புரியவில்லை என்று தனியாக கேட்டாலும் அழகாக சொல்லித்தருவார். அரைகுறையாக, அவசரமாக பாடம் நடத்துவதெல்லாம் இருக்காது, நிதானமாக ஆழமாக நடத்துவார். +2 படிக்கும் போது இயற்பியலை என் விருப்பாடமாக கருதியதற்கு முக்கிய காரணம் அவர் தான்.

என் படிப்பின் மேல் கொஞ்சம் தனி கவனம் செலுத்தினார் அவர், காரணம் என் அப்பா. அவர்கள் எப்படி அறிமுகமாகிகொன்டார்கள் என்று நினைவில் இல்லை, ஆனால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது, இருக்கிறது. அப்பா என் படிப்பை பற்றி அவரிடம் விசாரிப்பது உண்டு, ஆசிரியரும் நான் நன்றாக படிப்பதாகவும், நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவேன் என்றும் கூறுவார். சில சமயங்களில் அப்பா என்னை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஆசிரியரும் எங்களுடன் வருவார். என் படிப்பை தவிர அவர்கள் விவசாயம் குறித்தும் பேசிக்கொள்வதுண்டு. நான் +2 படிக்கும் போது "நீ நல்ல மார்க்கு வாங்க வேண்டும் அண்ணாமலை, உங்கப்பா உன்மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்" என்று கூறுவார், நான் படித்தற்கு இதெல்லாம் எதோ ஒரு வகையில் மறைமுக காரணமாக இருந்திருக்கலாம். +2 இயற்பியல் பாடத் தேர்வு முடிந்தன்று நான் வீட்டிற்கு செல்ல அண்ணாசாலை நிறுத்தத்தில் நின்றுகொண்டிருதேன் அப்போது சற்று தள்ளி நின்றிருந்த ஆசிரியர் "பரீட்சை நல்ல எழுதியிருக்கிற இல்ல? 185 மார்க்காவது வாங்கணும் அண்ணாமலை, இல்லாட்டி உங்கப்பா மூஞ்சியில முழிக்க முடியாது" என்றார் நான் "கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவேன் சார்" என்றேன். இந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது, சொன்னபடியே நல்ல மார்க் வாங்கினேன்.

நான் பள்ளியை விட்டு வந்த ஒன்றிரண்டு வருடங்களில் ராஜேந்திரன் சார், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிவிட்டார். நான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும், வருடம் ஒரு முறையாவது பள்ளிக்கு செல்வதுண்டு, அங்கிருக்கும் என் ஆசிரியர்களிடம் பேசிவிட்டு வருவதுண்டு, அதே போல் அவரையும் தலைமை ஆசிரியர் அறையில் சந்தித்து பேசிவிட்டு வருவதுண்டு. எனக்கு பாடம் நடத்திய பலர் இன்று அந்தப்பள்ளியில் இல்லை அவர்களில் சிலருக்கு அரசு வேலை கிடைத்து, சிலர் வேறு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். ராஜேந்திரன் சாரும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்துவிட்டார். நான் ஒரு முறை அமெரிக்காவிலிருந்து அவரைத் தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தேன். பிறகொருமுறை சந்திக்கும் போது அந்த தொலைப்பேசி அழைப்பை குறிப்பிட்டு, தன்னுடைய மாணவன் ஒருவன் வளர்ந்து அமெரிக்காவிலிருந்து தனக்கு தொலைப்பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். என் வளர்ச்சியில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது அப்படிப்பட்ட ஆசிரியருக்கு என்னுடைய வணக்கங்களை எதாவது ஒரு முறையில் சொல்லிக்கொண்டிருகிறேன். நாங்கள் இப்போதும் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறோம். இன்று காலை கூட அவரை அழைத்து ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினேன். ஒரு வருடம் இடைவெளி விட்டு தொலைப்பேசினாலும், சந்தித்து கொண்டாலும் எந்த தயக்கமும் இன்றி கடந்த முறை சந்திப்பில் விட்ட இடத்தில இருந்து பேச முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆசிரியர் என்பதைவிட அவரை ஒரு நண்பராகவே கருதுகிறேன்.

நான் இதுவரை என் வாழ்வில் அடைந்த முன்னேற்றத்தில் அவர் பங்கிருந்ததை போல, இன்னும் அடையப்போகும் முன்னேற்றத்திற்கும் அவருடைய வழிகாட்டலும் ஆசிர்வாதமும் எப்போதும் இருக்கும். இப்படி இவ்வுலகெங்கும் பல மாணவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றிகொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Monday 31 August 2009

திரைப்படங்களும் விமர்சனங்களும்

முன்பெல்லாம் நமக்கு ஒரு திரைப்படத்தின் விமர்சனம் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் கிடைக்கும். பின்னர் வலைத்தளங்களிலும் விமர்சனம் வர ஆரம்பித்தது. பின்னர் பல வலைப்பூவிலும் வந்தது, இப்போது கொஞ்ச காலமாக குறுஞ்செய்தியில் கூட வர ஆரம்பித்துவிட்டது. தொலைக்கட்சிகளில் வரும் விமர்சனம் அதில் நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம் போன்றவற்றை பொருத்து இருக்கும். பத்திரிகைகளில் வரும் விமர்சனம் ஓரளவுக்கு பரவாயில்லை, ஒரு சாராருக்கு சார்பில்லாமல் எழுத முயற்சிக்கிறார்கள் (சில பத்திரிகைகள்). இவர்களெல்லாம் அவர்களிடம் இருக்கும் சிறந்த சினிமா விமர்சகர்களை வைத்து விமர்சனங்களை எழுதுகிறார்கள் என்று நம்புவோம். இவர்கள் ஒரு மோசமான படத்தில் இருக்கும் நல்ல விஷயத்தை சொல்லிவிட்டு தான் படம் அவ்வளவ்வு சிறப்பில்லை என்ப்பார்கள். இவர்கள் பல காலமாக விமர்சனம் செய்து எழுதி வருகிறார்கள். இப்போது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல பலரும் வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் அந்த விமர்சனங்களைப் பற்றிய விமர்சனமே இந்தப் பதிவு.

ஒரு சினிமாவை விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை, எந்த பொருள் அல்லது விஷயம் நாலு பேரின் பார்வைக்கு வருகிறதோ அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது, அரசியல் முதல் சினிமா வரை எல்லாம். ஒரு வீட்டின் சண்டையே தெருவுக்கு வந்தால் அது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அந்த வகையில் ஒரு திரைப்படமும் பலரின் பல்வேறான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நான் படித்த வரையில் ஒரு திரைப்படம் பல வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் போது கீழ்கொடுத்துள்ள அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறது.

1. எந்த மொழி படத்தில் இருந்து சுட்டதாக இருக்கும் என்ற தேடல்?
2. என்ன என்ன ஓட்டைகள் இருகின்றன?
3. படத்தில் காட்டப்பட்ட காட்சிகளில் விமர்சகருக்கு பிடிக்காத காட்சிகள்.
4. இதே போல் இதுக்கு முன் வந்த திரைப்படங்கள்?
5. இந்த படத்தை ஒத்திருக்கும் வேறு மொழி படங்கள் குறிப்பாக ஆங்கிலம், இரானியன், ஸ்பானிஷ் மற்றும் பல.
6. இயக்குனருக்கு அவர்கள் படத்தை எப்படி எடுத்திருக்கலாம் என்று தரும் அறிவுரைகள்.

ஒரு சிறந்த படத்தை விமர்சனம் செய்யும் போது விமர்சனத்தின் முடிவில் இந்த படத்தை அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என்று கூறி முடிக்கும் போது எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்த விமர்சகருக்கு பிடிக்காத ஒரு படத்தை விமர்சிக்கும் போது அந்த படத்தில் நடித்த நடிகர் முதல் இயக்குனர் வரை கேலிக்கு உள்ளக்கட்படுகின்றனர், விமர்சனம் என்கிற பெயரில் அந்த படத்தை கொத்தி குதறி போட்டுவிட்டு போய்விடுகின்றனர். இந்த விமர்சனம் இவருடன் நிற்பதில்லை இதை படிப்பவர்கள் பலரும் அவர்கள் அந்த படம் பார்த்தார்களோ இல்லையோ அதே போல் நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர் அது பலருக்கும் பரவி விடுகிறது. இது யாரவது ஒருவருடைய அலைப்பேசிக்கு ஏற, பிறகு புற்றீசல் போல் அந்த விமர்சனம் பரவி அந்த படத்தையே மரணப்படுக்கையில் போட்டு விடுகின்றது. வலைத்தளங்களில் விமர்சனம் எழுதுபவர்களாவது பரவாயில்லை படத்தை பார்த்து விட்டு தான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் இந்த அலைப்பேசியில் வரும் ஒரு குறுஞ்செய்தி சில நிமிடங்களில் பல ஆயிரம் அலைப்பேசிகளில் வசிக்க ஆரம்பித்துவிடுகிறது, இந்த வகையில் அனுப்புபவர்கள் பெரும்பாலும் அத்திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டார்கள், வரும் செய்தியை forward செய்வதோடு அவர்கள் வேலை முடிந்துவிடுகிறது, அந்த ஒரு செய்தி சாக வரம் பெற்று அலைந்து கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது அந்தப்படமும் தயாரிப்பாளரும்.

நாம் ஒரு படத்தை பார்த்துவிட்டு அதை மொக்கை, மோசமான படம் என்று கூற சில நிமிடங்கள் தான் ஆகும், ஆனால் அந்தப்படத்தை எடுத்து வெளியிட அந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு படம் என்பது ஒரு படைப்பு, இயக்குனர் படைப்பாளி. ஒரு படம் எவ்வளவ்வு மோசமானதாக இருந்தாலும் அதை படைத்தவனை பொறுத்தவரை அது அவனுடைய படைப்பு, ஆகவே அது மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகும்போது படிப்பாளியையும் பாதிக்கிறது. திரைப்பட படப்பிடிப்பை பார்த்திருக்கிறீர்களா? பார்த்தவர்களுக்குத் தெரியும் ஒரு காட்சி எடுப்பதற்கு எவ்வளவ்வு நேரம், மக்கள் சக்தி, உழைப்பு, பணம், பொறுமை, இயற்கையின் ஒத்துழைப்பு தேவையென்று. என்னுடைய சிறு வயதில் சினிமா படப்பிடிப்பை பார்க்க ரொம்ப ஆசைப்பட்டேன், ஒன்றிரண்டு படப்பிடிப்பை பார்த்தபின் அந்த ஆசை போய்விட்டது. ஒரு கதாப்பாத்திரம் நடந்து வரும் காட்சியையே சில சமயங்களில் ஒரு நாள் எடுப்பார்கள். ஒரு நாடகம் நடித்த அனுபவமோ அல்ல இயக்கிய அனுபவமோ இருந்தால் இது எளிதாக புரியும். கிட்டத்தட்ட Friends படத்தில் வரும் வடிவேலு போலதான் இருக்கும் (ஆணியப் ...). ஒரு காட்சி எடுப்பதற்கே இவ்வளவ்வு சிரமம் என்றால் ஒரு படம் எடுப்பதற்கு? ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அந்த படம் எடுத்து முடியும் வரை முதன்மையான நடிகர் நடிகையர், இயக்குனர் தவிர குறைந்தபட்சம் ஒரு 500 பேருக்காவது வேலை கிடைக்கும், அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இவ்வளவ்வு அடங்கியிருகின்றன. ஆயினும் பல தடைகள், இன்னல்கள் தாண்டி வரும் ஒரு படத்தை சீ தூ என்று இடதுகையால் ஒதுக்க நமக்கு தேவைப்படுவது சில நிமிடங்களே.

ஒரு திரைப்படத்தை விமர்சிக்கவே கூடாது என்பதல்ல என் வாதம். எந்த கலையும் விமர்சிக்கப்படாவிட்டால் அது அடுத்த கட்டத்திற்கு முன்னேறாது, ஒரு கலையின் முன்னேற்றத்திற்கு விமர்சனம் தேவை. அதற்க்காக உங்களுக்கு பிடிக்காத படத்தை இது அந்த படத்தில் இருந்து காப்பியடித்து, இந்த காட்சி வேற படத்தில் இருந்து சுட்டது, இந்த படத்தில் கதையே இல்லை என்று கண்ணா பின்னவென்று விமர்சித்துவிட்டு அதை மற்றவர்களுக்கும் படிக்க கொடுத்துவிடுவதுதான் பிரச்சனை. ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்க்காக மற்றவர்களுக்கும் பிடிக்காது என்றில்லை.எந்த ஒரு படமும் யாரவது ஒருத்தருக்கு பிடிக்கும் வாய்ப்புள்ளது, நமுக்கு பிடிக்காதது மற்றவர்க்கு பிடிக்காது என்று நினைக்க தேவையில்லை. ஒரு படத்தை பார்த்து விட்டு நல்லா இல்லை என்று சொன்னால் பரவாயில்லை, இந்த விமர்சனங்களை படித்துவிட்டே சிலர் இந்தப்படம் மோசமாமே என்று கூற ஆரம்பித்துவிடுகின்றனர், படம் பார்க்காமளையே விமர்சிப்பவர்கள் மீதுதான் அதிக கோபம்.

ஒரு படம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாம் மற்றவர்களுக்கும் சொல்ல தேவையில்லை, அப்படத்தின் மேல் ஈடுபாடு உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இதனால் எந்த மோசமான படமும் 100 நாள் ஓடிவிடாது. ஒரு படம் நன்றாக ஓடினால் அதிலிருக்கும் எதாவது ஒரு விசையம் பலரை கவர்ந்திருக்கும், அதில் நல்ல கதையிருக்கலாம், நல்ல நடிப்பிருக்கலாம், அல்லது அதில் நடித்த நடிகையின் இடுப்பு பிடித்திருக்கலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கோ (அவர்களுடைய ரசனை தெரியுமென்றால்) அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கோ உங்கள் விமர்சனத்தை சொல்வதில் தவறில்லை, ஆனால் அனைவருக்கும் சொல்லத் தேவையில்லை. ஒரு படத்தை விமர்சிக்கவே கூடாது என்றில்லை, எந்த திரைப்படம் தவறான கருத்துகளையும் செய்திகளையும் சமுதாயத்துக்கு தருகிறதோ அந்த திரைப்படங்களை கண்டிப்பாக எங்கும் விமர்சிக்கலாம் அதில் ஒரு பயன் இருக்கிறது, மற்ற படங்களை விட்டுவிடலாம். ஆனால் விமர்சனம் செய்யும் முன் நீங்கள் விமர்சிப்பது பல வருடங்களாக சினிமாவை தவிர்த்து வாழத்தெரியாத கூட்டம் ஒன்றிற்க்காக எடுக்கப்பட்ட படம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அத்திரைப்படத்தை நீங்கள் பார்த்து சிலாகித்த ஸ்பானிஷ், பிரெஞ்சு, இரானியன், ஆங்கிலம் போன்ற மற்ற மொழிப்படங்களுடன் ஒப்பிடாதீர்கள் அவர்கள் வேறு நாம் வேறு, நாங்கள் திரைப்படம் சாரதா ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்கவே இன்னும் பல தேர்தல்கள் தேவைப்படும், திரைப்படங்களை பொறுத்தவரை இன்னும் பலர் தவழ்ந்து கொண்டிருக்கிறோம், சிலர் தான் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள், நாங்கள் ஓடுவதற்கு இன்னும் பல காலம் ஆகும்.

இந்தப்பதிவு எழுதக்காரணம் சமீபத்தில் சில படங்களை பற்றி படம் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் கண்டபடி விமர்சித்து வந்த மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் மற்றும் எனக்கு திரைப்படங்களின் மேலிருக்கும் ஆர்வமும் காதலும். என் வலைப்பூவில் எனக்கு பிடித்த படங்களை பற்றிமட்டுமே எழுதுவதாக இருகிறேன், முடிந்தால் நீங்களும்.

குறிப்பு: சிறந்த படங்களை மட்டுமே பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் விமர்சனம் எழுதுவதை நிறுத்திவிட்டு, பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞானி அவர்கள் கோலம் - வீடு தேடி வரும் சினிமா இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், அதில் நீங்களும் இணைந்து கொண்டு நல்ல திரைப்படங்கள் உருவாக உங்கள் பங்களிப்பை அளியுங்கள். மேலும் விபரங்களுக்கு http://gnani.net/.