வேலை கிடைத்த பிறகு புத்தகங்களின் மீது காதல் கொண்டேன், படிக்க ஆரம்பித்தேன், பிறகு தான் நான் இதுநாள் வரையில் எழுதியதெல்லாம் கவிதை இல்லை என்று. இனி மேல் கவிதை என்கிற பெயரில் யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று சில ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. இப்போது இந்த வலைப்பூவில் அதையும் எழுதிப்பாப்போம் என்று தோன்றியதால் உதயமானது எனது கிறுக்கல்கள். கிறுக்கல்கள் என்ற பெயரில் நடிகர் பார்த்திபன் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார், நான் வேலைக்கு சேர்ந்து முதலில் வாங்கிய புத்தகம் அது. கிறுக்கல்கள் என்ற தலைப்பில் இதை வெளியிட கொஞ்சம் தயக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது, ஆனாலும் அந்த பெயரிலேயே எழுதுகிறேன். திரு. பார்த்திபன் என்னை மன்னிப்பாராக. கிறுக்கல்கள் என்றவுடன் என் நினைவில் வருவது எங்கள் டியூஷன் இயற்பியல் ஆசிரியர் கூறுவது "நாமெல்லாம் கிறுக்கனுகட கிறுக்கிகிட்டே இருக்கணும் அப்பத்தான் நல்லா படிப்போம்" என்பார்.
எனக்கு தோன்றும் எண்ணங்களை மடித்து ஒடித்து ஒரு கவிதை வடிவில், குறித்து கொள்ளுங்கள் "கவிதை வடிவில்" எழுதுவேன் அவ்வளவுதான். நான் இங்கே எழுதப்போவதை கவிதை என்கிற நோக்கில் அணுக வேண்டாம் உங்களுக்கு பிடித்திருந்தால் ரசியுங்கள், இல்லையெனில் பொறுத்துக்கொள்ளுங்கள் . நான் எழுதுவதில் தப்பி தவறி எதாவது ஒன்று கவிதையாகவோ அல்லது அதற்கு அருகாமையிலோ வந்தால் மகிழ்ச்சியே. இந்த முயற்சியின் முன்னேற்றத்திற்கு உங்கள் பின்னூட்டங்கள் பெரிதாக உதவும், அகவே உங்கள் கருத்துக்களை அதில் தெரிவிக்கலாம்.
கிறுக்கல் - 1

அழும் குழந்தை
உறங்கும் அம்மா
தாலாட்டும் ரயில்
கிறுக்கல் - 2

அழகான வாயில்
பிரமாண்டமான மதில்
கம்பீரமான கோட்டை
அதை சுற்றி அகண்ட அகழி
அதில் படகு பயணம்
பத்து ரூபாய்
2 comments:
கிறுக்கல் 1 மிக அற்புதம்...
மிக அருமை
Post a Comment