Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Friday, 9 October 2009

நிலவில் தீபாவளி கொண்டாடும் நாசா!

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னே நிலவில் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் நாசா!. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலை ஒரு ஏவுகணையை (Rocket) செலுத்தி நிலவில் மோத விட போகிறார்கள். இந்த ஏவுகணையை ஒரு விண்கலம் மூலம் செலுத்துகிறார்கள். இந்த ஏவுகணை ஒரு தோட்டாவை விட இரண்டு மடங்கு வேகத்தில் செலுத்தி நிலவில் மோத விட போகிறார்கள், இந்த மோதலினால் ஏற்படும் விளைவை வைத்து நிலவில் நீர் அல்லது பனி கட்டி என்று நீர் சம்பந்தப்பட்ட எதாவது இருகிறதா என்று ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள். நிலவின் தென் துருவத்தின் அருகில் தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த ஏவுகணையை செலுத்தும் விண்கலம் அதை பின்தொடர்ந்து, மோதலின் விளைவுகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பும் அதை வைத்து ஆராய்ச்சி செய்ய போகிறார்கள்.

எதச்சியாக இந்த செய்தியை படித்ததால், பகிர்ந்து கொள்ள தோன்றியதால் இந்தப்பதிவு. இந்த செய்தியை படித்த பின் எனக்கு இரண்டு வருத்தம்.

1. பல வருடங்களாக நம் தமிழ் குழந்தைகளுக்காக வடை சுட்டு கொண்டிருக்கும் பாட்டி நனையாமல் இருந்தால் சரி.
2. இன்னும் பல ஆண்டுகளுக்கு பாட்டி வடை சுடவும், நிலா சோறு சாம்பிடவும் இந்த நிலவு நமக்கு வேண்டும். ஆராய்ச்சி என்ற பெயரில் நிலவை கெடுக்காமல் இருந்தால் நல்லது.

அப்படியே நிலவில் தண்ணீர் இருந்தால் அதை பூமிக்கு எடுத்து வருவார்களா? இல்லை இதை வைத்து நிலவை பட்டா போட்டு நல்ல விலைக்கு விற்று விடுவார்களா? அப்படியே விற்க நிலவு யாருக்கு சொந்தம்? நாசாவுக்கா? அமெரிக்காவுக்கா? மஞ்சள், பாஸ்மதி அரிசியை போல் நிலவையும் சொந்த கொண்டாட முயர்ச்சிப்பார்களோ?