Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

Tuesday, 14 September 2010

இந்த வாரம் - 14/09/2010

தமிழக அரசியல்:
அரசியல் பற்றி ரஜினி பரபரப்பு பேட்டி என்று கடந்த வாரம் சில பத்திரிகைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருந்தன, "பரபரப்பு பேட்டி" என்றால் அது ஒன்றும் இல்லாத வெத்துப் பேட்டி என்பது நம்மூர் பத்திரிக்கை விதி, அதனால் நான் கண்டுகொள்ளவில்லை. இணையத்தில் தேடிய போது அந்த செய்தி கிடைத்தது. "அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை" என்று 101வது முறையாக  பரபரப்பு பேட்டி கொடுத்திருந்தார். அவர் என்றைக்கும் வரப்போவது இல்லை (வராமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து).

விளையாட்டு:
யு எஸ் ஓபன் முடிந்தது, என் கறு நாக்கோ  (கறு எழுத்து?) என்னவோ ஷரப்போவா மறுபடியும் அவுட். நடால் வென்றார்.

போப்பண்ணா ஜோடி இறுதி வரை வந்தது ஆறுதல், சேர்ந்து விளையாடுவது பாகிஸ்தான் நாட்டு ஆட்டக்காராக இருப்பதால் இன்னும் சுவாரசியம்.

சாம்பியன்ஸ் T20  ஆரம்பித்து விட்டது, ஃபிசிங்கா? இல்லையா? என்பது தொடர் முடிந்த பிறகு ஆராய்ச்சி செய்து கொள்ளலாம், அதுவரை டீ.வி முன் பலியாய் கிடக்கலாம், இல்லையேல் அமிதாப் வந்து அடிப்பார்.

கவிதை
இந்த வாரம் நான் படித்த மனுஷ்ய புத்திரன் கவிதை

பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான கழிப்பறைகளேனும்

வரும் 24ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு சொல்ல போகிறார்கள், எத்தனையோ ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பது போல் இத்தீர்ப்பையும் சொல்லாமல் இருப்பதே மேல்.

கோவில்
கடந்த வாரம் ஒரு நண்பரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்றிருந்தோம், கிடைத்த நேரத்தில் சுவாமிமலை சென்றிருந்தோம். முருகனின் அறுபடை வீட்டில் நான் இதுவரை செல்லாத கோவில் அது. இது முருகனின் நான்காவது படைவீடு. கோவில் பெரிதாக அழகாக இருந்தது, வெளியிலிருந்து பார்க்கும் போது மலையெல்லாம் ஏற வேண்டியதில்லை என்று நினைத்தேன், உள்ள சென்ற பிறகு தான் தெரிந்தது நிறைய (60) படி ஏற வேண்டியது இருந்தது. நாங்கள் சென்ற நேரம் முருகனுக்கு அபிஷேகம் ஆரம்பித்திருந்தார்கள், சிறப்பான தரிசனம் கிடைத்தது.

இத்தலத்தின் சிறப்பு:
தந்தை சிவனுக்கு முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை விளக்கி சொன்ன இடம் இது. அதனால் இங்கிருக்கும் முருகனுக்கு சுவாமிநாதன் என்றும் தகப்பன்சாமி என்றும் அழைக்கப்படுகிறார். 

Tuesday, 7 September 2010

இந்த வாரம் - 07/09/2010

கதம்பம் என்ற தலைப்பில் வேறு பதிவர்களும் எழுதிக் கொண்டிருப்பதால், இத்தலைப்பை மாற்ற நினைத்தேன். நல்லதாக ஒரு தலைப்பும் தோன்றவில்லை, அதனால் இப்பகுதிக்கு நான் "இந்த வாரம்" என்ற தலைப்பில் எழுதுகிறேன். வேறு ஏதும் தலைப்பு தோன்றினால் சொல்லுங்கள்.
 
தமிழக அரசியல்:
இந்த வாரம் பெரிய மாற்றம் இல்லை.

பா.ம.க மூன்றாவது கூட்டணிக்கு  தலைமை தாங்க தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ். அடுத்த வாரம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

30-40 தொகுதிகளுக்குகெல்லாம் கூட்டணி அமைக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் விஜயகாந்த். கூட்டணி பேசும் கட்சிகளிடம் அதிகமா தொகுதிகள் வேண்டும்  என்று மறைமுகமாக கேட்கிறாரா?


இந்த வார விளையாட்டு:
பாகிஸ்தான் கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்சிங் பிரச்சனையை தோண்டி கொண்டிருகிறார்கள், யாசிர் ஹமீது அளித்த தகவல், ஆஸ்திரேலியா தொடரிலும் ஃபிக்சிங் என  சில பூதங்கள் வந்துகொண்டிருகின்றன. பாகிஸ்தானில் அரசியல் மற்றும் விளையாட்டு எதில் ஊழல் நடந்தாலும் விளையாட்டாகவே எடுத்துகொள்கின்றனர்.

யு எஸ் ஓபன் விறு விருப்பாக நடந்த கொண்டிருக்கிறது. முன்னணி ஆட்டக்காரர்களில் ஆண்களில் முர்ரேவும், பெண்களில் டேமன்டிவாவும் தோற்றுவிட்டனர். இரட்டையர்கள் போட்டியில் நம்மவர்கள் பயசும் மற்றும் பூபதியும் தோற்று வெளியேறிவிட்டனர், போப்பண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியிருகின்றனர்.

ஆறு வருடங்களுக்கு முன் 17 வயதில் டென்னிஸ் விளையாட்டில் புயலென நுழைந்தவர் ஷரப்போவா, ஆனால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த slamமும் ஜெய்க்க வில்லை,  இந்த முறையாவது  ஜெயிப்பாரா?

இந்த வாரத் திரைப்படம்
கடந்த வார இறுதியில் என் மடிக்கணினியில் Salt படம் பார்த்தேன், வெளிவந்து 2 மாதம் ஆகிறது, இப்போதுதான் பார்த்தேன். படம் ம்ம்ம் Ok, ரொம்ப அருமையில்லை என்றாலும் பொழுதுபோக்கிற்கு நல்ல படம். மறுபடி ஒரு அதிரடி கதாப்பாத்திரம்  ஏஞ்சலீனாவுக்கு, இந்த மாதிரி பாத்திரங்கள் (அழகு + அதிரடி) அவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.



இந்த வாரம் சிதறிய முத்து:
மறுபடியும் கலைஞர்.  குஷ்பு தயாரிப்பில் சுந்தர் நடிக்கும் நகரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கலைஞர் பேசியதில் ஒரு பகுதி
"இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல – கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்."
இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

Tuesday, 31 August 2010

கதம்பம்- 31/08/2010

கதம்பம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் நிகழும் அரசியல் மாற்றம், விளையாட்டு (குறிப்பாக கிரிக்கெட்),  பார்த்த திரைப்படம் ,  படித்த புத்தகம் ஆகியவற்றை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

தமிழக அரசியல்:
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது, கூட்டணிகள் மாறுமா? இல்லை தொடருமா? என பல மர்மங்கள் விலகத் தொடங்குகிறது. இப்போது இருக்கும் நிலையை இப்படி கூறலாம்.

காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருக்கவே விரும்புகிறது, ஆனால்  அவர்கள் விரும்பும் தொகுதிகள், மற்றும் ஆட்சியில் பங்கு கிடைக்க கடைசி வரை இளங்கோவன், ப.சிதம்பரம் என்று யாராவது சீண்டிகொண்டே இருப்பார்கள் போல. 


அ.தி.மு.க - இவர்கள் நடத்தும் கூட்டங்களில் கூடும் கூட்டத்தை காட்டி முடிந்தவரை கட்சிகளை இழுக்க முயற்சிக்கிறது.

பா.ம.கதான் இப்போது நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. "தி.மு.க அழைத்தால் பேச ஒரு குழு அமைக்கப் பட்டிருகிறது", "நாங்கள் இருக்கும்  கூட்டணியில் விஜயகாந்த் இருந்தால் எங்களுக்கு கவலை இல்லை", "காங்கிரஸ் தலைமையில் புது கூட்டணி அமைந்தால் சேருவோம்", "தேவைப்பட்டால் நாங்களே ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குவோம்"," தனித்து 100 தொகுதிகளில் போட்டியிடுவோம்" என அனைத்து சாத்தியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் மருத்துவர். இதெல்லாம் இல்லாமல் ஒரு புது மாதிரியாக முடிவு இருக்குமோ? பார்க்கலாம்.

தே.மு.தி.க முதல் முறையாக  கூட்டணி குறித்து பேச ஆரம்பித்திருகிறது,  புதுக் கூட்டணி ஆரம்பித்தால் கொஞ்சம் தொகுதிகள் வெற்றி பெற்று பெயரையும் காப்பாற்றி கொள்ளலாம், அ.தி.மு.க, தி.மு.க என்று யாருடன் கூட்டணி வைத்தாலும் விஜயகாந்தின் செல்'வாக்கு' குறையும் என்றே தோன்றுகிறது.

இவையனைத்தும் தற்போதைய நிலவரம், கா(க)ட்சிகள் எப்படி மாறுகின்றன என்று போக போக பார்க்கலாம்.

இந்த வார விளையாட்டு:
முத்தரப்பு போட்டியில் இந்தியா ஆடிய விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில், சச்சின் இடத்தை நிரப்பும் அறிகுறி ஏதும் தெரியவில்லை. ஹர்பஜனுக்கு பிறகு நல்ல சுழற்பந்து வீச்சாளர் என்று யாரும் இல்லை என்பது கூடுதல் வருத்தம்.அஷ்வினையும், திவாரியையும் பெஞ்சிலேயே வைத்திருந்தது ஒரு ஏமாற்றம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு மற்றொரு பள்ளத்தில் விழுந்திருக்கிறது, மறுபடியும் ஃபிக்சிங், இந்த முறை ஸ்பாட் ஃபிக்சிங் (Spot Fixing). PCB கொஞ்ச காலம் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு இந்த ஃபிக்சிங் சர்ச்சைகளை fix செய்து பிறகு மறுபடியும் ஆட வரலாம் அதுதான் அவர்கள் கிரிக்கெட்டுக்கு செய்யும் பேருதவி, இல்லையேல் அவர்கள் ஆடும்/ஆடிய எந்த ஆட்டத்தையும் சந்தேகத்துடனே பார்க்க தூண்டும், அப்படி செய்வார்களா? பார்க்கலாம். இந்த சர்ச்சையில், முஹம்மத் ஆமீரும் சம்பந்த்தப்பட்டதாக வரும் செய்திகள் வருத்தம் அளிக்கிறது. அதுவும் கடந்த 6 மாதங்களாக என்னம்மா பந்து வீசுகிறார் ஆமீர்.

இந்த வார திரைப்படம்:
கடந்த ஞாயிறு அன்று புதிதாக தொடங்கப்பட்டிருக்கம் Express Avenueவில் உள்ள escapeல் "நான் மகான் அல்ல" நானும் என்  மனைவியும் பார்த்தோம். படம் பிடித்திருந்தது.

நிறைகள்:
கலகல முதல் பாதி, விறு விறு இரண்டாவது பாதி
நல்ல பாத்திர தேர்வு, அவர்களின் நிறைவான நடிப்பு.
திரைக்கதையின் வேகத்தை பாதிக்காத பாடல்கள், சிறந்த பின்னணி இசை.

குறைகள்:
சில மனதை நெருடும் வன்முறை காட்சிகள்
கிளைமாக்சின் நீளம் 

படம் முடிந்த பின்பு, அங்கிருக்கும் food courtக்கு  சென்றோம். இந்த மாதிரி பெரு வணிக இடங்களில் ஸ்மார்ட் கார்டில் முன்பே பணம் போட்டு கொண்டு, அந்த அட்டையை தான் உபயோகித்து எதுவும் வாங்க முடியும் (சில கடைகளை தவிர). இந்த அட்டையை நாம் பணமாக கொடுத்து வாங்கினால் போகும்போது அட்டையை கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம், ஆனால் வங்கி (டெபிட்) அல்லது கடன்(கிரெடிட்) அட்டை உபயோகித்து இந்த அட்டையை வாங்கினால், போகும் போது மீதிப்பணத்தை திருப்பி தரமாட்டார்களாம், அனைத்து பணத்திற்க்கும் சாப்பிட்டே ஆக வேண்டும், எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த வார மென்பொருள்:
கடந்த வாரம் என் அலுவலக நண்பர் மூலம் BS.Player என்று ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தினார். படம் பார்ப்பதற்கான மென்பொருள், இதன் சிறப்பு, படம் இம் மென்பொருளில் ஓட ஆரம்பித்ததும், இணையத்தில் அப்படத்திற்கான subtitleகளை தேடிக் காட்டுகிறது, அதில் நமக்கு தேவையான subtitleகளை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதிக வேற்று மொழி படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு உபயோகமான மென்பொருள்.

சிதறிய முத்துக்கள்:
நேற்று Express Avenueவை திறந்து வைத்து பேசிய முதல்வர் கலைஞர், இவ்வணிக வளாகத்தை கட்டியிருக்கும் கோயங்கா குடும்பத்தினரை (இக்குடும்பத்தை சேர்ந்த ராம்நாத் கோயங்கா  தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவுனர்)  பற்றி இப்படி குறிபிடுகிறார் "வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும்."
ஏதோ இவர்கள் தொண்டு இல்லம் ஆரம்பித்த மாதிரி பேசியிருக்கிறார் முதலவர், ஆண்டவா.