Sunday 18 January 2009

32 வது சென்னை புத்தகக்காட்சி

பொங்கல் அன்று நான் புத்தகக்காட்சிக்கு சென்று இருந்தேன், சென்னையில் நான் செல்லும் இரண்டாவது புத்தகக்காட்சி இது. நல்ல கூட்டம், அனைத்து கடைகளையும் பார்ப்பதற்கு கண்டிப்பாக ஒரு நாள் வேண்டும். நான் பாதி மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். எத்தனை புத்தககங்கள், எத்தனை கடைகள், பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா புத்தகங்களும் கிடைக்கும். இந்த முறை 500 மேற்பட்ட கடைகள் வைத்திருப்பதாக கூறினார்கள். பல மொழிகளில் பல தலைப்புகளில் புத்தககங்கள் கிடைக்கின்றன. கல்கி எழுதிய சில காவியங்களை சிறப்பு சலுகையில் கிடைத்தன. மக்கள் புத்தகம் வாங்குவதைப் பார்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது (மனைவியை எதாவது கோலப்புத்தகம் வாங்கலியா என்று கேட்ட கணவன்களும் வந்திருந்தார்கள்).

புத்தககங்கள் தான் மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்வார்கள், இன்றைய காலகட்டதில் புத்தககங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக தோன்றுகிறது, பல தமிழ் இலக்கியங்களை படிக்காமல் நம் வாழ்வை வீனடிதுக்கொண்டிருகிறோம். நம் வருங்கால சந்ததியினர்க்கு நம் இலக்கிய வளமை தெரியாமல் போய்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி புத்தகக்காட்சிகள் கண்டிப்பாக ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும், நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் வீட்டில் இருப்பவர்களை படிக்க தூண்ட வேண்டும் குறிப்பாக சிறுவர்களை. குழந்தைகளை நாம் இந்த மாதிரி புத்தகக்காட்சிகளுக்கு அழைத்து சென்று பழக்க வேண்டும், நம் இலக்கிய செல்வங்களை நாம் அவர்களுக்கு அறிமுகபடுத்த வேண்டும். நல்ல புத்தககங்கள்களை அவர்களுக்கு நாம் அறிமுகபடுதிவிட்டால் அவர்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். இப்போதிருந்தே நாம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தா விட்டால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பை நாமாக ஏற்படுத்துகிறோம். சுஜாதா, ராமகிருஷ்ணன் போன்றோர் சிறுவர்களுக்கு என்று கதைகளை எழுதி இருக்கிறார்கள், அந்நூலை நாம் அவர்களுக்கு அளித்து படிக்க வைக்க வேண்டும். அவர்கள் பள்ளி படத்தில் உள்ள பாடல்களை முடிந்தவரை படித்து விளக்கி புரிய வைக்க வேண்டும் (இந்த வேலையயை வெகு சொற்ப பள்ளிகளே செய்கின்றன).

வருடம் ஒருமுறை ஆடி தள்ளுப்படிக்கு துணி வாங்குகிறோமோ இல்லையோ ,அட்சயதிதி அன்று தங்கம் வந்கோகிறோமோ இல்லையோ கண்டிப்பாக புத்தகக்காட்சிக்கு சென்றும் புத்தககங்கள் வாங்குவோம் என்றும் உறுதி கொள்வோமாக.

இந்த முறை புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தககங்கள்:
இந்தியப் பிரிவினை - மருதன்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன் (சாகித்திய அகாடமி பதிப்பகம்)
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
பூக்குட்டி - சுஜாதா (சிறுவருக்கான நூல்).
இலக்கிய பேராசான் ஜீவாவை பற்றி நெல்லை கண்ணன் சிறப்புரை குறுந்தகடு.

No comments: