Showing posts with label சியாட்டல் நாட்கள். Show all posts
Showing posts with label சியாட்டல் நாட்கள். Show all posts

Sunday, 3 January 2010

பெயின்பிரிட்ஜ் தீவு

சியாட்டல் பசிபிக் கடலின் அருகில் அமைந்திருப்பதால், அதை சுற்றி பல தீவுகள் உள்ளன. இவற்றில் ஒரு பிரபலமான தீவு பெயின்பிரிட்ஜ் தீவு. 8 கிமீ அகலமும், 10 கிமீ நீளமும் உள்ள இந்த தீவில் ஆரம்ப காலங்களில் கப்பல் கட்டுமான பணிகள் நடந்திருக்கின்றன, இங்கு அதற்கு தேவையான மரங்கள் அதிகம் கிடைக்கும். 2005ஆம் ஆண்டு CNN Money அமெரிக்காவில் வாழ்வதற்கான சிறந்த இடங்களில் இத்தீவுக்கு இரண்டாவது இடம் அளித்துள்ளனர்.

இந்த தீவிற்கு சியாட்டல் downtownலிருந்து ஃபெர்ரியில் செல்லலாம். 30 நிமிட பயணம்.ஃபெர்ரி பயணத்தின் போது சியாட்டல் downtown முழுவதும் நம் பார்வைக்கு கிடைக்கும். அப்படி ஒரு பயணத்தில் தான் நாங்கள் ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளை களித்தோம். பயணத்தின் போது மேல் தளத்தில் நின்று ரசித்துக்கொண்டும், புகைப்படங்கள் எடுத்துகொண்டும் சென்றோம். நாங்கள் சென்ற போது மிக அழகான வானவில் ஒன்று தோன்றியிருந்தது. அது தண்ணீரின் நடுவில் முளைத்து நின்றது போல் அழகாக இருந்தது. தீவை நாங்கள் சென்றடைந்த போது மழை பெய்ய தொடங்கிவிட்டது, மழையில் நனைந்து கொண்ட கொஞ்ச நேரம் சுற்றினோம், விடுமுறை தினம் என்பதால், ஜன நடமாட்டமும் இல்லை, கடைகளும் இல்லை. அதிகம் சுற்ற முடியவில்லை. அங்கிருந்து மீண்டும் ஃபெர்ரியில் கிளம்பி வீடு வந்தடைந்தோம். ஃபெர்ரி பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.

ஃபெர்ரி (இது நாங்கள் எடுத்ததல்ல)


ஃபெர்ரியிலிருந்து Downtown



அழகான வானவில்




பெயின்பிரிட்ஜ் தீவு

Sunday, 20 December 2009

இரண்டு ஏரிகளும், ஒரு பனிமலையும்

தலைப்பை பார்த்ததும் ஏதோ கவிதை என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். கடந்த நன்றி தெரிவிக்கும் விடுமுறையில் நாங்கள் சுற்றி பார்த்த இரண்டு ஏரி, ஒரு கடற்கரை, ஒரு பனி மலை பற்றியே இந்தப்பதிவு. சனியன்று காலை வழக்கம்போல ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பினோம். இந்த முறையும் ரகுவின் வழிகாட்டலில், Ganny (கணேஷ்) வண்டியை செலுத்த நாங்கள் பின்னாடி அமர்ந்து மொக்கை போட்டுகொண்டு சென்றோம். எங்கள் பயணம் சிறு தடங்களில் ஆரம்பித்தது, வீடிற்கு அருகில் இருக்கும் சாலையில் Take Right என்று GPS அக்கா சொன்னதை கேக்காமல் இடது பக்கம் திரும்பி கொஞ்சம் சுத்திவிட்டு பிரதான சாலையை (Freeway) பிடித்தோம்.

நாங்கள் திட்டமிட்டிருந்த இடங்கள் அனைத்தும் ஒலிம்பிக் நேஷனல் பாரஸ்ட்டை சுற்றிய அமைந்திருந்தன, எங்கள் பயணமும் . சுமார் 3 மணிநேர பயணத்துக்கு பிறகு நாங்கள் Quinault ஏரியை அடைந்தோம். அழகான ஏரி, ஏரிக்கு முன் கொஞ்சம் பசுமையான புல்வெளி இருந்தது. ஏரியை ரசித்து விட்டு, சில பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த ஏரிக்கு அருகில்1000 வருடம் பழமையான, உலகின் மிகப்பெரிய Spruce மரம் உள்ளது. இங்கு வருபவர்கள் தங்குவதற்கு விடுதிகளும், உணவகங்களும் உள்ளன. காதல் ஜோடிகள் நேரம் கழிக்க சிறந்த இடம்.

Quinault ஏரி


அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் kalaloch கடற்கரை, பசிஃபிக் பெருங்கடலின் ஒரு கடற்கரை. நாங்கள் சென்ற நேரம் மழை பெய்துகொண்டிருந்தது, நனைந்தபடியே கரையில் திரிந்தோம். நிறைய கற்பாறைகள் நிறைந்த கடற்கரை, சின்ன பாறைகள் மீது ஏறி கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம், அலைகள் பெரிதாக வந்துகொண்டிருந்தது. கரையில் நிறைய மரங்கள் கிடந்தன எதற்கு என்று தெரியவில்லை. கடற்கரைக்கு சென்றதும் முதலில் செய்த காரியும், கடற்கரை மணலில் பெயர் எழுதியது, சில நிழற் படம் எடுத்தது. இது சுனாமி வர வாய்ப்புள்ள இடமாம். அங்கேயே மழையில் நனைந்தபடி எடுத்து வந்திருந்த மதிய உணவை முடித்து கொண்டோம். நான்கு மணியளவில் இருட்ட தொடங்கியதால் தங்க ஏற்பாடாயிருந்த விடுதிக்கு சென்றோம். Forks என்னும் இடத்தில் இருந்த அழகான, வசதியான விடுதியில் தங்கினோம். இரவு அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டோம்.

Kalaloch கடற்கரை


அடுத்தநாள் நாங்கள் சென்ற முதல் இடம், crescent ஏரி. இந்த ஏரியின் இரு பக்கமும் மலைகள் இருந்தன. மலையை ஒட்டி இருந்ததால் ஒரு தனி அழகுடன் இருந்தது. இந்த ஏரியில் கோடை காலத்தில் படகு பயணம் செய்வார்கள், குளிர் காலம் என்பதால் யாரும் தட்டுபடவில்லை. மலையோரத்தில் சில வீடுகள் இருந்தன, கோடை காலத்தில் தங்குவதற்காக இருக்கலாம்.

Crescent ஏரி


கடைசியாக நாங்கள் சென்ற இடம், பெரும்பான்மையோர் எதிர்பார்த்து கொண்டிருந்த Huricane Ridge என்னும் பனி மூடிய மலை. 5200 அடி உயரம். மலைக்கு மேலே செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. முன்தினம் பனி அதிகம் பொலிந்திருந்ததால், வழியெங்கும் பனி கொட்டிக்கிடந்தது, போக்குவரத்து சவுகரியத்துக்கு, சாலையில் இருக்கும் பனியை ஒதுக்கும் வண்டிகள் நிறுத்தப்படிருந்தன. வழியில் சில View pointகள் இருகின்றன. ஒரு குறிப்பிட்ட view pointல் இருந்து தெளிவான வானம் இருக்கும் போது பார்த்தால் கனடா தெரியுமாம். நாங்கள் சென்ற போது ஓரளவு தெளிவான வானம் தான் என்றாலும் கனடா தெரியவில்லை, கோடை காலத்தில் தெரியலாம். மலை உச்சியை அடைந்தவுடன் அனைவரும் பணியில் விளையாட ஆரம்பித்துவிட்டோம், ஒருவர் மீது ஒருவர் பனி எறிவதும், பணியில் டைவ் அடிப்பதும் என கைகள் எரியும் வரை விளையாடினோம், கையுறை போடாமல் பணியில் அதிகநேரம் தாக்குபிடிக்க முடியாது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் பலர் பனி சறுக்கு செய்து விளையாடி கொண்டிருந்தனர்.

Hurricane Ridge


காடுகளில் பல இடங்களில் காட்டிற்குள் செல்ல trailகள் உள்ளன, கோடைகாலம் இந்த காடுகளுக்குள் சுற்றுவதற்கு சரியான நேரம். கேம்ப் அமைத்து கொஞ்ச நேரம் இயற்கையுடன் தங்கி இருக்கலாம், குளிர் காலத்தில் இதெல்லாம் கஷ்டம். காடு மலைகளை இங்கு மிக சிறப்பாக பாதுகாக்கின்றனர், ஆங்காங்கே, என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருகின்றனர். குப்பைகளை போடுவது குற்றமாக கருதப்படுகிறது, பிடித்தால் அபராதம் விதிப்பார்கள். காடு மலைகளின் முக்கியத்துவம் கருதி, சிறப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

அங்கிருந்து dungeness bay செல்லலாம் என்று கிளம்பினோம், நாங்கள் அங்கு சென்று சேர அதிக நேரம் ஆனதால், பார்க்க முடியவில்லை, ஆகவே வீட்டிற்கு கிளம்பினோம். GPSல் வீட்டு விலாசத்தை இட்டுவிட்டு கிளம்பினோம் அது எங்களை ஒரு துறைமுகத்துக்கு இட்டு சென்றது, என்னடா வம்பென்று, வேறொரு வழி கேட்டதற்கு (Detour), காட்டியது, கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் தெரிந்தது வேறொரு துறைமுகத்துக்கு அழைத்து செல்கிறது என்று, பின்பு GPS செட்டிங்கில் மாற்றம் செய்து, தரை வழியில் மட்டுமே அழைத்துபோக சொன்ன பிறகு, தரை வழியில் ஒரு மணி நேரம் தாமதமாக வீடு வந்தோம். எந்த ஒரு பயணத்திலும் நாம் அதிகம் விரும்புவது பார்க்கும் இடங்களை விட, அந்தப் பயணம் நேரம். இந்த பயணமும் அழகு, பார்த்த இடங்களும் அழகோ அழகு.

Wednesday, 16 December 2009

First Flight of a Dream(liner)

The day has come, the day Boeing was waiting, the day Aviation industry was dreaming, the day we were desperately waiting to see the reality of the hard work we put in last 5 years. Dec 15 2009 is going to be one of the important day to remember in our life, The Boeing 787 Dreamliner flew for the first time. I am privileged to see the 787 take off live and feel happy to be here in Seattle during this historic event in Aviation.

Boeing 787 Dreamliner


787 is a special airplane, not for one but for many reasons. 787 Dreamliner is a revolution in Commercial Aviation Industry, which happens once in blue moon, this is one such, a plane for Ages. I have listed below some of the features of 787 Dreamliner.

-> 787 is made with less Aluminum and more composite material, generally used in fighter planes. This reduces weight thereby reduces the fuel consumption.
-> Window size of 787 is greater than current planes window size, which gives the passengers good view with auto-dimming feature.
->Increase in Internal air pressure to give more comfort to passengers even in higher altitudes.
-> Better Air quality in air-conditioning system. And lot more, check this link for more details.

For us the excitement started from Monday evening, thinking and talking about the 787. Everything was going as per the plan, Only rain God could play the spoilsport. We were praying God to take care of climate. Boeing has made arrangements to web cast this event, we watched the event in web cast.

Lets move to Paine Field Everett Washington.

@10:00 - Lot of Employees gathered along the runway waving hands towards the lens. There was a Boeing IMAX helicopter is shooting the crowd and the event, Boeing is capturing all the events related to 787. It was said that the flight engines were Turn ON 30 minutes back. Two pilots along with lot of computers were on board for this Historic First Flight.

@10:10 - Final security check was done to ensure a safe flight. There were two military planes to escort 787 and 787 would be following these flights. These military planes had cameras to shoot 787 on fly.

@10:20 - The flight started to move on its own power to the run way, the plane was to fly towards north.

@10:25 - All set to go, Dreamliner was in runway waiting for final clearance from Air traffic control.

@10:27 - There she goes, she started the run for First Flight like Usan Bolt, ran fast, took off smoothly and steered into the sky like Sergey Bubka in pole vault. Awesome.

There She goes


The first flight was planned for 5 1/2 hours. But it was cut short (due to bad weather) and landed in 3 hours @ 1:35PM in Boeing field, King County, the county where we are staying. Boeing promised to have the first flight before this year end and did it like hitting a six in the last ball. The sleepless nights, weekends that we spent in our office to work in the software that supports this flight, came in my mind like a flash. All the hard work from thousands of people across the globe made this happen. This is Boeing's perfect Christmas gift for everyone who helped Boeing to make this mega event a success.

Moments before landing


For a person like me, who few years back, ran to street to see low flying helicopters and planes, it is really a great feeling and pleasure that a new generation flight takes off with my hard work in it, my contribution may be very minute but I feel proud and happy and now whenever I see 787 Dreamliner in sky I got a story to tell to my friends, family, children "Hey, Look at that plane, I have helped this plane to fly."

My Collegues with 787 After landing


Courtesy Bhagath for the photographs (Except the take off pic)

Watch 787 First Flight take off in this link and landing in this link.

Friday, 20 November 2009

எவெரட்

எங்கள் அறையிலிருந்து அனைவரும் கடந்த வாரம் எவெரட் சென்றிருந்தோம். சியாட்டலின் சிறப்பாக இருக்கும் போயிங் விமான நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு கூடம் (Boeing Assembly Plant) இங்கு இருக்கிறது. இந்த இடத்திற்கு யாரும் வரலாம், ஒரு டூர் போல் அழைத்து சென்று நமக்கு சுற்றி காட்டுகின்றனர். போயிங் தயாரிக்கும் பயணிகள் விமானங்களின் மாடல்கள் 707, 727, 737, 747 (ஏர் பஸ்சின் A380க்கு அடுத்த பெரிய பயணிகள் விமானம்), 757, 767 மற்றும் 777. இப்போது அவர்கள் புதிதாக உருவாக்கி வரும் மாடல் 787. இந்த விமானம் உருவாகி வருவதையே ஒரு பெரிய படமாக எடுக்கலாம், அவளவ்வு போராட்டங்கள். இந்த விமானம் சந்தைக்கு வந்த பின் விமானத்தை அலுமினிய பறவை என்று எழுத முடியாது, இந்த விமானம் அலுமினியம் இல்லாமல், கார்பன் கலவைகளால் உருவாக்கப்படுகிறது. இந்த மாதிரியை பற்றி தெரிந்து கொள்ள இங்க சொடுக்கவும். மேலே குறிப்பிட்ட மாடல்களில் 747, 767, 777 மற்றும் 787 வகை விமானங்கள் இங்கு தான் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

1960களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பற்றி சில தகவல்கள்...
உலகில் அதிக கொள்ளவு (Volume) உள்ள கட்டடம் (மொத்தம் 98.3 ஏக்கர்). - கின்னஸ் ரெகார்டில் இடம்பெற்றது.
10 லட்சம் மின் விளக்குகள் உள்ளன. குளிர் அதிகமான இடம் என்பதால் இவ்விளக்குகள் வெப்பத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
1,300 மிதிவண்டிகள் உள்ளன.
கட்டிடத்திற்கு அடியில் இருக்கும் மொத்த tunnellன் நீளம் 3.7 கி.மீ. இந்த இடத்தை வேலையாட்கள் ஓடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் உபயோகித்து கொள்கின்றனர்.
இந்த கட்டிடத்தின் முன் மனிதர்கள் எறும்பு போல தோன்றுகின்றனர்.



இங்கு என்ன செய்கிறார்கள்?
இந்த கட்டிடத்திற்குள் உதிரிபாகங்களை கொண்டு வந்து வெளியில் விமானமாக அனுப்புகிறார்கள்.
ஒரு 777 வகை விமானத்தின் உ. பா. எண்ணிக்கை 30 இலட்சம். 747 இல் 60 இலட்சம், 787 இல் 14 இலட்சம்.
விமானத்தின் பாகங்களை நட்டு, போல்டெல்லாம் போட்டு ஒன்றினைத்து, மின்சார இணைப்புகள் கொடுத்து, பாகங்கள் சரியாக வேலை செய்கிறதா என்று அடிப்படை பரிசோதனை செய்து பின் பறக்கும் தகுதியில் வெளியில் அனுப்புவார்கள்.
வெளியில் வந்தவுடன் விமானத்திற்கு வாடிக்கையாளர் விரும்பியபடி வண்ணம் பூசப்படும். விமானத்தின் எடையை கருத்தில் கொண்டு வண்ணம் பூசுவார்கள்.

இந்த வேலைகளெல்லாம் முடிந்தவுடன் விமானம் பறக்க தயாராகிவிடும், பிறகு விமானம் பறக்கும் சோதனைக்கு உட்படுத்தப்படும், சோதனை வெற்றிகரமா முடிந்தவுடன், விமானம் மனிதர்கள் பறக்க தகுதியானது என்று சான்றிதழ் பெற்றவுடன் (FAA போன்றவர்கள் இந்த சான்றிதழ் தருவார்கள்) , விமானம் விற்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒரு விமான ஓட்டியுடன் வந்து விமானத்தை எடுத்து செல்லுவார்கள். ஒரு
விமானம் இங்கு முழுதாக உருவாக 3 மாதங்கள் வரை கூட ஆகும். இப்போது உருவாகி வரும் 787 வகை விமானம் 12 நாட்களில் assemble செய்து விட முடியும் என்றனர்.

ஒரு முறை நாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் ஒரு விமானத்தை பழம் வைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து எடுத்து சென்றதாக அதைப் பார்த்த என் நண்பர்கள் சொன்னார்கள். சக்கரங்களுக்கு எலுமிச்சை பழம் வைத்தார்களா என்று தெரியவில்லை.

இந்த இடத்தை சுற்றி காட்டியவர் கடைசியில், நாங்கள் மிக பாதுகாப்பான விமானம் தயாரிக்கிறோம், அடுத்த முறை நீங்கள் விமானத்தில் ஏறும் முன் "If it is not Boeing, I am not going " என்று சொல்ல வேண்டும் என்றார்.

எனக்குள் இருக்கும் சில நம்ப முடியாத விசயங்களில் ஒன்று விமானம் எப்படி பறக்கிறது என்பது, பல முறை அதைப்பற்றி படித்து புரிந்தது போல் இருந்தாலும், அடுத்தமுறை விமானத்தை பார்க்கும் போது எனக்குள் இருக்கும் குழந்தை இது எப்படி பறக்கிறது? என்ற கேள்வியை திரும்ப கேட்டுகொண்டே இருக்கிறது.

Monday, 2 November 2009

சுநோகால்மி கணவாய் (Snoqualmie Pass)

சனிக்கிழமையன்று எங்கள் அறையிலிருக்கும் அனைவரும் சுநோகால்மி கணவாய் (Snoqualmie Pass) செல்ல திட்டமிட்டிருந்தோம். சுநோகால்மி கணவாய், இனி மேல் சு.க. சு.க. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து 50 மைல் தள்ளி, சுமார் 3000 அடி உயரத்தில் இருக்கும் இடம். அதன் சிறப்பு பனி, மலை முழுவதும் பனி படர்ந்திருக்கும். சியாட்டல் சுற்றி இருக்கும் மக்களுக்கு நல்ல சுற்றுலா தளம் மற்றும் பனி சறுக்கு விடும் இடம். வானிலையெல்லாம் சரி பார்த்துவிட்டு, பனி இருக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் கிளம்பினோம். 9 மணிக்கு கிளம்ப திட்டமிட்டு வழக்கம் போல் ஒரு மணிநேரம் தாமதமாக கிளம்பினோம். எங்கள் நண்பர் ரகு வழிகாட்ட (Navigator), கணேசன் மகிழுந்தியை செலுத்த அறையிலிருந்த ஐவரும் கிளம்பினோம். சுமார் ஒரு மணி நேரப்பயணம், 11:30 மணியளவில் சு.க.வை அடைந்தோம்.



நாங்கள் நினைத்தது போல் ஏராளமான மக்கள், பல மகிழுந்திகள், மலை நிறைய 3 இன்ச் அளவுக்கு பனி என்று ஏதும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது சு.க. விசாரித்ததில் ஒரு வாரம் முன்பு 2 இன்ச் அளவில் பனியிருந்ததாகவும், சில நாட்களாக பெய்த மழையில் எல்லாம் கரைந்து விட்டதாக கூறினர். சரி, பனியில்லாட்டி என்ன, என்று மனதை தேற்றிக்கொண்டு, அனைவரும் அந்த இடத்தை சுற்றி ஒரு வலம் வந்தோம். அங்கு ஓரமாக ஒரு பெரிய அரிசி மூட்டை அளவில் இருந்த பனியை எடுத்து விளையாடி விட்டு, கிளம்பினோம், நாங்கள் மட்டும் அப்படியில்லை, அங்கு வந்திருந்த இந்த ஊர்காரர்களும், எங்களைப் போல், இருந்த துக்குளியூண்டு பனியில் விளையாடினர், அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கத்தானே செய்கிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பி North Bend என்னும் வணிக வளாகம் சென்றோம். வாங்குகிறோமோ இல்லையோ பல கடைகள் ஏறி இறங்கினோம், சில கடைகளில் வாங்கினோம். பின்னர் அங்கிருந்து கிளம்பி வேறு கடைகளை சுற்றி விட்டு ஒரு இந்திய உணவகத்தில் தோசை, கொத்து பரோட்டா என்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம். பார்த்த (?) இடத்தை விட பயணம் நன்றாக இருந்தது, We enjoyed the drive.

கடந்த வாரம் பதிவர் அனன்யா பல்பு வாங்கிய அனுபவங்களை பற்றி பதிவு எழுதியிருந்தார், இது நான் வாங்கிய பல்பு. இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே.















Wednesday, 28 October 2009

ஆலங்கட்டி மழை

எத்தனை வகையான மழை தெரியும் உங்களுக்கு? நானறிந்த வகையில் மொத்தத்தில் ஐந்து வகையான மழை (ஆசிட் மழையை தவிர்த்து) இருகின்றன
1. Normal Rain (மழை)
2. Snow Rain (பனி மழை)
3. Sleet or Ice pellets (சிறு பனி கட்டிகள் மழை)
4. Freezing Rain (உறையும் மழை)
5. Hail Stone rain (ஆலங்கட்டி மழை)

வடபழனி, வேளச்சேரி ரோடுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் படகு ஓட்டி கொண்டிருப்பார்களே அதற்கு காரணமான மழையை பற்றி நன்கு தெரியும் என்பதால் நாம் பனி மழையில் இருந்து தொடங்குவோம்.

பனி மழை:
வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை Troposphere (இதற்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) முழுவதும் நிலவ வேண்டும் . இந்தப்பனி பஞ்சு போல் இருக்கும், ஆரம்பத்தில் இதில் விளையாட உற்சாகமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பனி பட்ட இடம் எல்லாம் எறிய ஆரம்பித்துவிடும்.



சிறு ஐஸ் கட்டிகள் மழை:
மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும்.



உறையும் மழை:
பனியாக வரும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகிவிடுகிறது அல்லவா, அந்த நீர் பூமியை அடைந்து பின் உறைந்தால் அது உறையும் மழை. அதாவது பனி நீரான பின்பு மீண்டும் பனியாவதற்கு குறைந்த வெப்பம் தேவை, பூமியில் இருந்து மிக கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல், பூமியில் விழுந்த பின் நிலத்தின் குறைந்த வெப்பம் காரணமாக பனியானால் அது உறையும் மழை. இந்தப்பனி நிலத்தில் கண்ணாடி போல உறைந்திருக்கும். இது கொஞ்சம் ஆபத்தான மழை, நிலத்தில் நீர் உறைந்திருப்பதே தெரியாது, தரை வழுக்கும், வண்டிகள் ஓட்டுவதற்கு கடினமாக இருக்கும்.



ஆலங்கட்டி மழை:
மேலே சொன்ன மழையெல்லாம் மழை மற்றும் பனி காலங்களில் வரும், ஆனால் ஆலங்கட்டி மழை வெய்யில் காலங்களில் வரும். இந்த காலங்களில் சில சமயம் உருவாகும் ஒரு வகை மேகங்களில் ஏற்படும் சிறு புயலில் நீர் துளிகள் ஒன்றாகி உருவாகுவது தான் இந்த பெரிய ஆலங்கட்டிகள், பெரிய பனி கட்டிகள். இந்த கட்டிகள் கற்கண்டு அளவில் இருந்து உள்ளங்கை அளவில் வரை இருக்கும். நம் மேல் விழுந்தால் வலிக்கும். இந்த கட்டிகள் கார் கண்ணாடியெல்லாம் உடைத்து விடும்.



சரி, என்ன திடீர்னு மழை பற்றி எழுதுறேன் பாக்கறீங்களா? கடந்த செவ்வாயன்று இங்கு திடீரென்று பனி கட்டி மழை பெய்தது, அது ஆலங்கட்டி மழை என்று நினைத்து கொண்டோம், அது எப்படி உருவாகிறது என்று படித்த போது, பெய்தது ஆலங்கட்டி மழை இல்லை பனி கட்டி மழை என்று தெரிந்தது. நமக்கு தெரிந்தத நாலு பேருக்கு சொல்லலாம்னு இந்தப்பதிவு, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல தானே.

Sunday, 18 October 2009

கேக் வெட்டி கொண்டாடிய தீபாவளி

இந்த தீபாவளி நான் என் வீட்டில் கொண்டாடாத இரண்டாவது தீபாவளி. கல்லூரியில் ஒரு தீபாவளி, செமஸ்டர் தேர்வுக்கு இடையில் வந்ததால் கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடப்பட்டது, இம்முறை ஊரில் இல்லாததால், அலுவலக நண்பர்களுடன் சியாட்டலில் கொண்டாடப்பட்டது. இந்திய நேரத்திலே கொண்டாடினோம். இங்கு 40 பேரு 15 அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கிறோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடியது, சிறப்பு விருந்தினராக அமெரிக்க அலுவலக நண்பர்கள் இருவர் கலந்துகொண்டனர். எங்கள் அப்பார்ட்மென்டில் உள்ள சமுதாய கூடத்தை (Community Hall) வண்ண காகிதங்களால் அலங்கரித்திருந்தார்கள் அங்கு அவரவர் வீட்டில் இருந்து உணவு செய்து எடுத்து வந்து ஒன்றாக உண்டு தீபாவளி கொண்டாடினோம். எங்கள் அறையில் இருந்து தோசை. தோசை, பிரியாணி முதல் கேரட் அல்வா, ரசமலாய் வரை எல்லாம் இருந்தன. எல்லா உணவும் நனறாக இருந்தன. முதலில் இரண்டு விளையாட்டுகள் நடந்தன, மியூசிக் சேர் போன்று ஒரு விளையாட்டும், Dumb Charades விளையாட்டும் நடந்தது. கொஞ்ச நேரம் நடனமும், சந்திரா, சபரி, பிரதாப், அமிர்தா (இரண்டு வயது) ஆகியோர் சிறப்பாக நடனமாடினர்.

முதல் முறையாக கேக் வெட்டி தீபாவளி கொண்டாடப்பட்டது, பிறந்த நாளையே கேக் வெட்டி கொண்டாடாத எனக்கு ரொம்ப அன்னியமாக தோன்றிய விசையமிது, ஆனாலும் வேறு விழியில்லை என்பதால் கேக் வெட்டுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பிறகு அனைவரும் அவரவர் உணவை தவிர மற்ற உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு கிளம்பினோம். சாப்பிட்ட பிறகு யாருடைய உணவு அதிகம் காலியாகியிருக்கிறது என்று போட்டி வேறு, எங்கள் தோசை ஓரளவு போனியாயிருந்தது, தேங்காய் சட்னியை தவிர. மிக வேகமா காலியானது ஜீவனின் தம் பிரியாணியும், ககன் வீட்டிலிருந்து வந்த ரசமலாயும்.

இப்ப கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் ...

சின்ன வயதில் தீபாவளி ஒரு பண்டிகை என்பதை விட ஒரு படி மேலானது. சில வாரங்களுக்கு முன்னே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும், புது உடை, பட்டாசு,முறுக்கு, குலோப் ஜாமுன் என்று ஓவ்வொன்றும் ஒரு சந்தோசம். அதிலும் வீட்டின் கடைசி பிள்ளை போல் பட்டாசுக்கு மவுசு அதிகம், பத்து நாட்களுக்கு முன் பட்டாசு வீட்டுக்கு வந்து விடும், தினம் பள்ளியில் இருந்து வந்ததும் அந்த பட்டாசுகளை எடுத்து பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, எண்ணெய் வைத்து குளித்து, புது உடை உடுத்தி, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி, குலோப் ஜாமுன் சாப்பிட்டு பிறகு பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் மாலை வரை பாட்டாசு தான். நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

கடந்த வருடம் தீபாவளியன்று இதையெல்லாம் என் அம்மாவிடம் சொல்லி இப்பவெல்லாம் நான் ஏன் இவ்வளவு உற்சாகமா கொண்டாடுவதில்லை என்று வருத்தப்பட்டேன், அதற்கு அப்பா "உன்னை யார் இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொன்னது இப்பவும் நீ அதிகாலை எழுந்த உன் இஷ்டம் போல கொண்டாடவேண்டியது தானே" என்றார், நியாயம்தான், தவறு என் மேல். ஆனாலும் தீபாவளி என்று எப்போது கேட்டாலும் மனதிலே தோன்றும் மகிழ்ச்சி குறைவதே இல்லை. அதனாலேயே தீபாவளி ஒரு பண்டிகை என்பதைவிட மேலானது. ஒரு பிஜிலி வெடி கூட வெடிக்காமல், மத்தாப்பு கொளுத்தாமல், குலோப் ஜாமுன் சாபிடாமல், பட்டிமன்றம் பார்க்காமல் கேக் வெட்டி கொண்டாடினாலும் இந்த தீபாவளியும் மனதின் ஒரு ஓரத்தில் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

Sunday, 11 October 2009

சியாட்டல் - சிறு குறிப்பு

சியாட்டல், வாசிங்டன் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம், பெரிய நகரம். கடலோரத்தில் அமைந்திருக்கும் அழகான நகரம். இது அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து மணிக்கு 96 மைல் வேகத்தில் சென்றால் ஒரு மணி நேரத்தில் கனடா வந்துவிடும். அமெரிக்க கனடா எல்லையில் அமைந்திருக்கிறது சியாட்டல். சியாட்டலுக்கு இருக்கும் பல பெயர்களில் மழை நகரம் (ரெயின் சிட்டி) பிரசித்தம். இங்கு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பார்கள். நான் முதன் முதல் சியாட்டல் ஒரு மே மாதம் வந்தேன், முதல் நாள் நான் அலுவலகம் சென்றது கொட்டும் மழையில். Sleepless in Seattle படம் பார்த்தீர்களா அதில் tom hanks வீட்டை காட்டும் போதெல்லாம் மழையில் தான் காட்டுவார்களாம். வாசிங்டன் மாநிலத்தை Evergreen state (பசுமை மாநிலம்) என்று அழைக்கிறார்கள், வாசிங்டன் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம். இலையுதிர் காலத்தில் கூட இங்கு பெரும்பான்மையான மரங்களில் இலை உதிர்வதில்லை, எப்போதும் பசுமையே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் வாஷிங்டன் டி.சி (Washington District of Columbia) வேறு இந்த வாஷிங்டன் மாநிலம் வேறு. வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரம், வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் ஒலிம்பியா.

இந்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் downtown என்று ஒரு இடம் உண்டு, அது தான் அந்த நகரத்தின் மையப்பகுதி, வர்த்தகப் பகுதி. சியாட்டலில் அனைத்து விதமான போக்குவரத்தும் உள்ளது. துறைமுகம், விமான நிலையம், தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளன. பொதுவாக பல அமெரிக்க நகரங்களில் பேருந்து வசதிகள் அவ்வளவு அதிகமா இருக்காது காரணம் இங்கு ஆளாளுக்கு குறைந்தது ஒரு car (மகிழுந்தி) வைத்திருக்கிறார்கள். நம்மூரில் தான் கார் மகிழுந்தி, இங்கு சாதா உந்தியாகத்தான் கருதப்படுகிறது. சியாட்டலில் பேருந்து வசதிகள் நன்றாகவே இருக்கிறது. நாலைந்து பேருந்து பிடித்தாவது தொலைவாக போக வேண்டிய இடத்துக்கு கூட போய் விடுகிறோம். இங்கு இணையத்தளத்தில் நாம் செல்லும் பேருந்தை track செய்ய வசதியுண்டு. பேருந்தில் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் ஒரே டிக்கெட் தான் , ஒரு டிக்கெட் மூன்று மணி நேரத்திற்கு செல்லும், அதற்குள் எந்த பேருந்திலும் ஏறி கொள்ளலாம். தற்போது ஒரு டிக்கெட்டின் விலை 1.75$. மாதம் மாதம் பஸ் பாஸ் விற்கிறார்கள், அதை வாங்கிக்கொண்டால், ஒரு மாதத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

சியாட்டல் டெளன்டவுன் புகைப்படம் கீழே.


இங்கு ஃபெர்ரி (சின்ன கப்பல்) வசதியும் உண்டு, பக்கத்தில் உள்ள தீவுகளுக்கு செல்ல இதை பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து கனடாவுக்கு செல்ல கப்பல் வசதி உள்ளது.

சியாட்டல் விமான நிலையத்தின் பெயர் சி-டக் (sea-tac) விமான நிலையம், அதில் சி -சியாட்டல், டக் - டகோமா. டகோமா என்பது சியாட்டலுக்கு பக்கத்தில் இருக்கும் நகரம்.

தொடர்வண்டி போக்குவரத்தும் ஓரளவுக்கு உபயோகப்படுதப்படுகிறது. புதிதாக சியாட்டல் டெளன்டவுனிலிரிந்து விமான நிலையத்திற்கு தொடர் வண்டி சேவை தொடங்கியிருகிறார்கள்.

வாஷிங்டன் மாநிலத்தில் வரி கொஞ்சம் அதிகம், 9%. செருப்பு வாங்கினாலும், லேப்டாப் வாங்கினாலும் இதே வரி தான், 100$க்கு ஒரு பொருள் வாங்கினால் 109$ பணம் செலுத்த வேண்டும். இந்த வரி வாஷிங்டன் மாநிலத்திற்கு மட்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி வரி. பக்கத்தில் இருக்கும் போர்ட்லேண்டில் வரியே இல்லை. பல இடங்களில் நம்மவர்களை காணலாம் குறிப்பாக பெல்வியுவ், ரெண்டன் போன்ற பகுதிகளில் பலர் இருக்கிறார்கள். பல இந்திய உணவகங்களும், கடைகளும் உள்ளன, என்ன, ஒரு தோசைக்கு சுமாராக 5$ செலவாகும்.

சியாட்டளின் சிறப்பாக சில விசையங்கள் உள்ளன.
1. மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் சியாட்டல் பக்கத்தில் உள்ள ரெட்மண்டில் உள்ளது, பில் கேட்ஸ், ஸ்டீவ் பல்மோர் ஆகியோர் வீடுகள் கூட இங்கு தான் இருக்கிறது.

2. Starbucks Coffee தலைமையகம் இங்கு தான் இருக்கிறது. வாஷிங்டன் மாநிலம் காஃபி அதிகமாக குடிக்கும் மாநிலமாகும்.

3. போயிங் அலுவலகங்கள், தளங்கள் மற்றும் விமான assembly மையங்கள் இங்கு இருகின்றன. சியாட்டலை சுற்றி பல இடங்களில் போயிங் அலுவலகங்களும், தளங்களும் உள்ளன. எவரட்டில் உள்ள விமான assembly மையத்தில் போயிங் 747, 767, 777 மற்றும் 787 ரக விமானங்கள் assemble செய்யப்படுகின்றன (ஒன்றிணைக்கபடுகின்றன). பொது மக்கள் இந்த இடத்தை பார்க்க வாரத்தில் ஏழு நாளும் அனுமதி உண்டு. போயிங் இருப்பதால் இந்நகரத்திற்கு ஜெட் சிட்டி (Jet City) என்ற பெயரும் உண்டு.

4. Space Needle - சியாட்டளின் உயரமான டவர். 605 அடி, இதன் 520ஆவது அடியில் SkyCity என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளது, இதன் சிறப்பு, அவ்வளவு உயரத்தில் அந்த ரெஸ்டாரெண்ட் சுற்றிக் கொண்டிருக்கும். இரவில் Space Needle எப்படி இருக்குமென்று கீழே பாருங்கள்.


இது சியாட்டல் பற்றிய ஒரு மைக்ரோ குறிப்பு. இவை தவிர இங்கு சுற்றி பார்க்க அருவிகளும், பனி மலைகளும், ரெயின் பாரஸ்ட்களும், கடற்கரைகளும் பல இருக்கின்றன. இவை பற்றியும், சியாட்டளின் வாழ்க்கை முறை, வேலை போன்ற மற்ற விசையங்கள் பற்றியும் அடுத்த பதிவுகளில்.

Thursday, 1 October 2009

சியாட்டல் - காலத்தை துரத்தும் பயணம்


அதோ இதோ என்றிருந்த என் சியாட்டில் பயணம் ஒரு வழியாய் உறுதியாகி 29 செப்டம்பர் இரவு கிளம்பி 30 அன்று காலை 10 மணியளவில் சியாட்டில் வந்தடைந்து மதியம் இரண்டு மணியளவில் இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன். சியாட்டலில் இருந்து என் முதல் பதிவு. அலுவல் காரணமாக வெளிநாடு செல்வது மென்பொருள் துறையில் அன்றாடம் நிகழ்வது, அந்த வகையிலே இந்த பயணமும். இதற்கு முன்னரும் சியாட்டில் வந்திருக்கிறேன்.

சென்னையில் செப்டம்பர் 30 ௦௦:25AM மணிக்கு விமானம் ஏறி செப்டம்பர் 30 9:45AM மணிக்கு சியாட்டலில் வந்திறங்கினேன். தாய்லாந்து, ஜப்பான் வழியாக பயணம் செய்தோம், செய்தோம்? இதே ப்ரொஜெக்டில் என்னுடன் இணைந்து (அல்லது நான் அவருடன் இணைந்து) செயல் பட இன்னொருவரும் வந்தார். தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையத்தை வந்தடைந்த போது தாய்லாந்தில் மணி செப்டம்பர் 30 05:30AM. அங்கிருந்து டோக்கியோவுக்கு 07:00AM மணிக்கு கிளம்பிய விமானம் ஐந்தரை மணி நேர பயணத்துக்கு பிறகு டோக்கியோ நரிட்டா விமான நிலையம் வந்தடைந்த போது மணி 03:40PM. தாய்லாந்திலிருந்து டோக்கியோ வந்த விமானத்தில் ஒரு பனி பெண் (பாட்டி) வாயில், டிரகுலவிற்கு இருக்கும் பல் போல ஏதோ கட்டியிருந்தார், பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அங்கிருந்து 05:30PM மணிக்கு சியாட்டில் விமானம், எட்டு மணி நேர பயணத்துக்கு பிறகு சியாட்டில் அடைந்த போது மணி செப்டம்பர் 30 09:45AM. ஜப்பானில் 30ஆம் தேதி மாலை கிளம்பி சியாட்டலை 30ஆம் தேதி காலை வந்தடைந்தோம், என்ன ஒரு விந்தையான பயணம்? காலத்தை துரத்தி பிடிக்கும் பயணம். இந்தியாவுக்கும் சியாட்டளுக்கும் 11:30 மணி நேர வித்தியாசம், இந்தியாவில் செப்டம்பர் 30 இரவு 10 மணி என்றால், சியாட்டலில் செப்டம்பர் 30 காலை 9:30 மணி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுவரை வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் தூங்கவும், தூங்கிய நேரத்தில் வேலை செய்யவும் வேண்டும்.

பயண சமயத்தில் அதிகமாக தூங்கினேன், மிக கொஞ்சம் நேரம் படித்தேன் (இரா.முருகனின் "நெம்பர் 40 ரெட்டை தெரு") The Proposal ஆங்கிலப்படம் பார்த்தேன் நள தமயந்தி மாதிரியான படம், கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தது, இரண்டு மணி நேரம் போனது. அவ்வப்போது அவர்கள் எழுப்பி கொடுத்த இலை, தழைகளை மென்ற நேரம் தவிர பெரும்பாலான நேரம் தூங்கியே கழிந்தது.

கிளம்புவதற்கு முன் என் நண்பர்களிடம் சியாட்டில் நாட்கள் என்று என் வலைப்பூவில் எழுதுவேன் என்று கூறியிருந்தேன், வேலை அதிகமாக இருக்கும் உன்னால் அதெல்லாம் முடியாது என்று கூறினர். இங்கு வேலை பளு எப்படி இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை, எப்படி இருந்தாலும் குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவாவது சியாட்டல் நாட்களின் கீழ் வெளியிட வேண்டும் நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.