Wednesday 29 July 2009

கிளிஞ்சல் 1 - அருணாச்சலம்

நம் வாழ்க்கை பயணத்தில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை பல்வேறு சூழ்நிலைகளில் சந்திக்கிறோம், விருப்பமோ இல்லையோ நாம் பல மனிதர்களுடம் பழக வேண்டியிருகிறது. நம் பயணத்தில் நம் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்கள் கடைசிவரை நம்முடன் வருவார்கள், இது ஒருவகை. இன்னும் ஒரு சிலர் நம்முடன் சிலகாலம் மட்டும் இருப்பார்கள், எதாவது ஒரு சமயத்தில் நாம் அவர்களை விட்டோ இல்லை அவர்கள் நம்மை விட்டோ பிரிந்துவிடுவோம், இப்படி சந்திக்கும் நபர்கள் யாவரும் நம்மை கவர்வதில்லை அல்லது யாவருக்கும் நம்மை பிடிப்பதில்லை. என்னை கவர்ந்த மற்றும் எதாவது ஒரு விதத்தில் என்னை பாதித்த மனிதர்களை பற்றி "கிளிஞ்சல்கள்" என்ற தலைப்பில் எழுதப்போகிறேன். கடற்கரை மணலில் நாம் விளையாடும்போதெல்லாம் அத்தனை மனல்கடுகிடையில் சில கிளிஞ்சல்களை பொறுக்கி வருவதுபோல் நான் இதுவரை சந்தித்த கிளிஞ்சல்கள் பற்றி இந்த பதிவு. வாரம் ஒருவரை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி தங்கும் விடுதியில் தங்கித்தான் படித்தேன். எங்களது தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி என்பதால் 50% தெலுங்கு மாணவர்கள் படித்தனர் அதில் பெருமபன்மனையோர் கல்லூரி தாங்கும் விடுதுயில் தங்கினர் அதனால் கல்லூரி தெலுங்கு மைனாரிட்டி, விடுதி தமிழ் மைனாரிட்டி. நான் சேர்ந்த கல்லூரி அந்த வருடம் தான் திறக்கப்பட்டது, அதனால் அங்கு தங்கும் விடுதி எல்லாம் கட்டவே இல்லை ஒரு கல்யாண மண்டபத்தை மரப்பலகைகள் வைத்து அறைகள் தடுத்து விடுதியக்கியிருந்தனர். அந்த கல்யாண மண்டப விடுதிக்கு இரண்டு இரவு காவலாளிகள் அதில் ஒருவர் தான் அருணாச்சலம் - இந்த வர கிளிஞ்சல்.

ஆறடி உயரம், நல்ல தேகம், தொப்பை, முறுக்கு மீசை, முறுக்கு மீசைக்கு பின்னிருக்கும் முகத்தில் ஒரு மென்மை படர்ந்திருந்தால் அவர் கிட்ட தட்ட அருணச்சலம் போல தான் இருப்பார். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் விடுதி காவலுக்கு வருவார். நன்றாக பழகுவார், நானும் அவருடன் நன்றாக பழகினேன். சில நாட்களுக்கு பிறகு அவருக்கு நான் நல்ல தோஸ்த் ஆனேன். விடுதியில் Study hours நேரங்களில் வெளியே செல்ல விட மாட்டார்கள், அப்படியே சென்றாலும் ரெஜிஸ்டரில் கையெழுத்து போட வேண்டும், ஆனால் நான் கையெழுதெல்லம் போடாமல் போய் வருவேன் அவர் கண்டுக்கமாட்டார். அதே போல் பருவத்தேர்வின் (semester) போது இரவு தேநீர் குடிக்க போறதுக்கு சாவி தேவைப்படுபோதெல்லாம் (எப்போதும் இரவு 10 மணிக்கு உள்ளே பூடிவிடுவார்கள்) சாவி கேட்டால் எதுவும் சொல்லல் கொடுத்துவிடுவார். அதனாலையே பலருக்குகாக நான் சாவி கேட்டு வாங்கியிருகிறேன். நல்ல திடக்கத்திரமாக இருக்கும் அவருக்கு ஒரு சின்ன வீக்னஸ், அவர் இடுப்பை தொட்டால் துள்ளி குதிப்பார். பலமுறை அவர் இடுப்பை தொட்டுவிட்டு ஓடியிருக்கிறேன் சில நாட்கள் அவர் இதுக்காக என்னை கோவித்துகொண்டதும் உண்டு. அவர் குடும்பத்தை பற்றியெல்லாம் கூறுவார். தீபாவளி சமயங்களில் நண்பர்களெல்லாம் சேர்ந்து அவருக்கு துணியெல்லாம் எடுத்து கொடுத்துள்ளோம். நாங்கள் விடுதியில் இருக்கும் வரை எங்களுடன் இனிமையாக பழகிவந்தார்.

இப்படி சராசரியாக இருக்கும் இவருக்கு இன்னொருமுகமும் இருந்தது அது அவர் ஒரு தெருகூத்து நாடக நடிகர். ஒருநாள் நான் என் நண்பர்களுடன் அவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொது தான் ஒரு நாடக நடிகர் என்று சொன்னார். ஆனால் தற்போது நாடகம் எல்லாம் நடிப்பதில்லை என்றும் அதை விட்டுவிட்டதாக கூறினார். அவர் தெருக்கூத்தை விட்டதுக்கான காரணத்தை சொன்னார். அது சுவரஸ்யமானது. அவர் பெரும்பாலும் பிரகலாதன் நாடகத்தில் நரசிம்மர் வேடத்தில் நடிப்பவர், ஒரு முறை ஒரு கிராமத்துக்கு நாடகம் போட சென்ற போது அங்கிருந்தவர்கள் பிரகலாதன் நாடகம் வேண்டாம் என்றும் வள்ளி திருமண நாடக போட வென்றும் கூறிவிட்டார்கள். நாடகத்தை நடத்துபவர்களும் வேறு வழியின்றி வள்ளி திருமண நாடகம் போடா சம்மதித்தனர் அதற்க்கு தயாராக ஆரம்பித்தனர். நம்மவர்க்கு வள்ளி திருமண நாடகத்தில் ஏற்க எந்த வேடமும் இல்லை அதனால் அன்று நாடகத்தில் அவருக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. எப்படியும் இன்று மேடை ஏறப்போவது இல்லையென்பதால் நம்மவர் நல்லா சரக்கு அடித்துவிட்டு படுத்துவிட்டார். நாடககுளுவால் வள்ளி திருமண நடகதிருக்கு தயார் செய்ய பல சிரமங்கள் இருந்ததால் மீண்டும் பிரகலாதன் நாடகத்தையே போட சொல்லிவிட்டனர். நம் நரசிம்மனோ நன்றாக உறங்கிகொண்டிருகிறார், அவரை எழுப்புவதற்கு எவள்ளவோ முயற்சி செய்தும் முடியாமல் போய் விட்டது, ஆக அன்று நாடகம் ஏக சொதப்பலில் முடிந்தது. விடிந்ததும் முந்தின இரவு நடந்ததை கேள்விப்பட்டு நம்மவர் மிகுந்த அவமானபட்டிருகிறார், அப்போதே இனிமேல் நாடகத்தில் நடிப்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டார், அதன் பிறகு அவர் அரிதாரம் பூசவேயில்லை.

இந்த கதையை கேட்ட பிறகு என்னால் நம்பவேமுடியவில்லை. அவரிடம் ஒரு காட்சி நடித்துக்காட்ட சொன்னேன். சட்டென்று நரசிமனாக மாறி அவர் பாடி நடித்த அந்த சில நிமிடங்கள் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். சாதரணமாக பேசிகொண்டிருந்தவரால் எப்படி திடீரென்று இப்படி நடிக்க முடிந்தது அங்கு மேடைஇல்லை, மக்கள் கூட்டம் இல்லை, அரிதாரம் இல்லை எனக்கு ஒருவனக்குகாக நடித்து காட்டினார். அவர் ரத்தத்தில் நாடகமும், பாட்டும், நடிப்பும் இன்னும் ஓடிகொண்டிருந்தான் இருக்கும் போல. இதன் பிறகு அவர்மேல் இருந்த மரியாதை அதிகமாகியது. இவர்களெல்லாம் படப்படாத நாயகர்கள் (Unsung Heroes).

நான் கல்லூரி விட்டு வந்த பிறகு அவரை சந்திக்கவில்லை (முயற்சிக்கவில்லை), எங்கள் கல்லூரியில் விடுதி கட்டப்பட்ட பிறகு அவர் அங்கு வேலைசெய்யவில்லை என்று நினைக்கிறேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் இன்னும் இருக்கிறது. இன்றும் நான் பார்க்கும் சில காவலாளிகள் அவரை நினைவு படுத்திகொண்டே இருக்கின்றனர்.

Sunday 26 July 2009

இந்த வர காமெடி - தூய்மையான முதல்வர்

"இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும்", இப்படி கூறியிருப்பது நம் தமிழக முதல்வர் கலைஞர். கடந்த வாரம் தமிழக அரசு 1 கோடி பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்ட தொடக்க விழாவில் இவ்வாறு பேசியிருக்கிறார் நம் முதல்வர். இது ஒரு நல்ல திட்டம், நம் நாட்டில் கிட்டத்தட்ட 90% பேருக்கு மருத்தவ காப்பீடு இல்லை. அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் பெரும்பாலோர்க்கு மருத்தவ காப்பீடு உள்ளது அதனால் அவர்கள் மருத்தவமனைகளில் பணம் எது தராமலே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும், நம் நாட்டில் அதெல்லாம் கனவு தான், அந்த கவை நோக்கிய முதல் படியாக இத்திட்டத்தை நாம கருதலாம் சொன்னபடி நிறைவேற்றப்பட்டால். இந்த பதிவு அது பற்றியது இல்லை.

இந்த விழாவில் கலைஞர் கூறியிருப்பது "பொது வாழ்க்கை என்பது புனிதமானது. அது என்றும் தூய்மையானதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவன் நான். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பும்; பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த்தால் கோபாலபுரத்தில் தற்போது நான் வசிக்கும் ஒரு வீடும் திருவாரூருக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் பதினான்கு ஏக்கர் நிலமும் தான் உள்ளது. இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெருவிலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல்-அமைச்சரின் வீடு இருப்பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்". இதை படித்த பொது எனக்கு தோன்றியது "எங்களை வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே" வசனம் தான். இதை பேசும் பொது நாம என்ன பேசுகிறோம் என்று உணர்ந்துதான் பேசினாரா, இப்படியெல்லாம் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்று தெரியாமல் பேசினாரா, இல்லை என்ன பேசினாலும் நம் தமிழக மக்கள் நம்புவார்கள் என்று பேசினாரா என்று தெரியவில்லை.

பொது வாழ்கையில் தூய்மை வேண்டுமென்று கூறியிருக்கிறார் (Note பண்ணிகங்கப்பா)
அரசியலில் தூய்மை என்ற வழக்கு காமராஜருக்கு அப்புறம் நம் அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்பட்டது என்றே இவ்வளவு நாள் நினைத்து கொண்டிருதேன் இப்போதுதான் தெரிகிறது அது நீக்கப்படவில்லை என்று ஆனால் அர்த்தம் மட்டும் மற்ற்யிருப்பார்கள் போல. தன்னுடைய இத்தனை வருட பொது வாழ்வில் அவரால் வாங்க முடிந்த சொத்து என்று இரண்டை குறிபிட்டிருக்கிறார். மத்ததெல்லாம்? என்கிற உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது ஆனால் கண்டிப்பாக கலைஞரக்கு கேக்காது.

ஒரு வேலை இவர் சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது அவர் கூறியிருப்பது அவர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் இந்த இரண்டு தான் என்று, மற்ற சொத்துக்கள் எல்லாம் மற்றவர்கள் பெயரில் வாங்க்யிருப்பார் போல. இதையெல்லாம் அவரிடம் கேட்டால் "நான் நடந்து வந்த பாதையில் கூவும் குயில் இல்லை நரி இருந்தது" என்றோ "அகர முதல..." என்று திருக்குறளோ சொல்லிவிட்டு போய்விடுவார் நாம என்ன சொன்னாரென்று புரியாமல் முழிக்க வேண்டியதுதான் (இவர் கடைசியாக எந்த கேள்விக்கு நேரடியான பதில் கூறினார் என்று கூறினால் அவர்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்க படும்).

தன்னுடைய ஒரு வருத்தத்தையும் இந்த கூடத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் அது "இன்னும் சாதரண தெருவில்" வசிக்கிறார் என்று. இத்தனை வருட தூய்மையான அரசியல் வாழ்கையில் பாவம் அவரால் ஒரு பங்களாவில் வாங்க முடியவில்லை அல்லது தங்கமுடியவில்லை,ஒரு பிரச்சினை என்றவுடன் இரவோடு இரவாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசையே ஆரம்பிக்க முடிஞ்ச நம் தூய்மையான முதல்வரால் பாவம் ஒரு பங்களா வாங்கமுடியவில்லை. ஒரு வேலை தன்னுடைய மகன்கள் மகள்கள் மருமகள்கள் மருமகன்கள் பேரன்கள் பேத்திகள் மற்றும் பலருக்கு அணைத்து சொத்தும் கொடுக்கப்பட்டதால் இவருக்கு பங்களா கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி அல்லது யாராவது ஒரு மகனோ அல்லது ஒரு மகளோ அவருக்கு உடனடியாக பங்களா தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இல்லையேல் நம் தூய்மையான முதல்வரின் இந்த ஆசை நிறைவேறாமலையே போய்விடும்.


இன்னும் எத்தனை நாளைக்கு நம்மளை வச்சு காமெடி பண்ண போராங்களோ! ஆண்டவா!!!

ஆறு கொலையும் ஒரு தீர்ப்பும்

இந்த வாரம் சஞ்சீவ் நந்தா Hit and Run வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடைசி தீர்ப்பை வழங்கிருகிறது. சஞ்சீவ் நந்தா BMW Hit and Run கேஸ் பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்கும். பத்து வருடங்களுக்கு (1999) முன் சங்கீவ் நந்தா தன்னுடைய BMWவில் ஒரு அதிகாலை பொழுதில் ஒரு காவல் சோதனை கூடத்தின் அருகில் 6 பேரை ஏற்றி கொன்றிருக்கிறார். அதில் மூன்று காவல் துறையினரும் "அடக்கம்". இந்த விபத்து நடக்க காரணம் நந்தா குடித்து விட்டு வண்டியை வேகமா ஒட்டி வந்தது தான். அன்று அவருடைய நண்பரும் உடனிருதிருகிறார், விபத்துக்கு பிறகு அவருடைய நண்பன் வீட்டிக்கு சென்று வண்டியை சுத்தம் செய்து விட்டு கிளம்பிவிட்டனர்.

வண்டியின் ஆயில் கசிவ்வு மற்றும் நம்பர் பிளேடின் ஒரு பகுதி விபத்து நடந்த இடத்தில் கண்டேடுகப்பட்டத்தை வைத்து சஞ்சீவ் நந்தா நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டார், முதல் கட்ட விசாரணையில் சுனில் என்பவர் முதலில் விபத்தை பார்த்ததாக தானாக வந்து சாட்சி சொன்னவர் பின்னர் விலைக்கு வாங்கப்பட்டதலும், அந்த விபத்தில் உயிர் தப்பிய நபர் கார் அவர்களை மோதவில்லை என்றும் லாரி தான் மோதியது என்று கூறியதாலும் நம் ஜனநாயக சட்டப்படி குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் முக்கியமான விசையம் சஞ்சீவ் நந்தாவின் அப்பா ஒரு ஆயுத வியாபாரி மற்றும் அவருடைய தாத்தா கடற்படை தளபதியாக இருந்தவர்.

இந்த தீர்ப்பு யாராலும் நம்பமுடியததாலும் நம் மீடியாக்கள் இந்த சம்பவத்தை பூதகரமாக்கியதாலும் மறு விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த முறை விசாரணையில் இவர் குற்றவாளி என்று கண்டுபிட்டிகப்பட்டு செப்டம்பர் 5 2008 அன்று
Culpable Homicide பிரிவின் கீழ் (IPC - 304A-ஈ) ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. Culpable Homicide என்றால் "Whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide".
ஒருவழியாக நம் ஜனநாயகம் ஒரு அளவுக்கு ஜெய்தது என்று நாம் கொஞ்சம் நம்பிக்கையில் இருந்த பொது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செயப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஷ் கம்பீர் (என்ன பெயர்!!!) trail கோர்ட்டில் இவர் தவறான செக்சனில் குற்றஞ் சாட்டப்பட்டார் என்றும் அவரை நியாயமாக(?) 304A. Causing death by negligence என்ற செக்சனில் மட்டுமே தண்டிக்க முடியும் யன்றும் அதனால் முன்பு அளிக்கப்பட்ட 5 வருட சிறை தண்டனையை 2 வருடமாக குறைத்து தீர்ப்பளித்திருக்கிறார். Causing death by negligence என்றல் " Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both."
என்னால் இந்த தீர்ப்பை புரிந்து கொள்ளவோ ஒத்துகொள்ளவோ முடியவில்லை, இந்த வழக்கில் கீழ் கொடுத்துள்ள அணைத்து குற்றங்களும் அடங்கியிருப்பது சட்டம் படித்த படிக்காத அனைவருக்குமே புரியும்
1. குடித்துவிட்டு வண்டி ஒட்டியது
2. வேகமா வண்டி ஓட்டியது.
3. விபத்துக்கு பிறகு காவல் துறையிடம் தகவல் அளிக்காதது.
4. தடயங்களை அழித்தது.
5. சாட்சியங்களை அழித்தது.
6. அனைத்துக்கும் மேலாக ஆறு பேரை கொன்றது.
சட்டம் படித்தவர்களுக்கு இதில் இன்னும் என்னன குற்றங்கள் இருக்கிறது என்று நன்றாக தெரியும். ஆறு பேரை குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டி கொன்றதற்கு கவனகுறைவால் நடந்தது என்று சிம்பிளா தீர்ப்பு சொல்லிவிட்டார் நம் நீதிபதி. கவனமாக ரசித்து கொன்றால் தான் நிறைய தண்டனை தருவார்கள் போல, ஆக தண்டனை குறைவாக கிடைக்க "கொலையெல்லாம் plan பண்ணாம பண்ணனும் ஓகே" .

இதேபோல் குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டி ஒரு முதல்வரையோ, பிரதமரையோ அல்லது இந்த நீதிபதிக்கு சொந்தமனவரையோ கொன்றிருந்தால் இதே தீர்ப்பைதான் வழங்குவார்களா நம் நீதியை காப்பாற்றும் கனவான்கள்? நன் தேசத்தில் ஒரு வழக்கும் தீர்ப்பும் அதில் சம்பந்த பட்டிருக்கும் நபர்களின் வசதி வாய்ப்பை பொறுத்து தான் அமைகிறது என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சாட்சி. எவன் வலிமயுடயவனோ அவன் ஜெயிக்கிறான். அதனால் தானோ சமீபத்தில் நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்கை வெளியிடவேண்டும் என்ற அரசு ஆணையை அனைத்து நீதிபதிகளும் ஒற்றுமையாக எதிர்த்து அதை செயல்படுத்த முடியாமல் செய்துவிட்டனர்.ஜெய் பாரத மாத!.

நீதிமன்றத்தில் நீதிதேவி கண்களை மூடியிருக்கும் துணியை இனிமேல் நீதிபதிகளின் கண்களில் தான் கட்ட வேண்டும் போல அல்லது அதே துணியை எடுத்து நம் கண் காது வாய் என்று அனைத்தையும் மூடிக்கொள்ளலாம். நம் சட்டமும் நீதியும் ஒழுங்காக கடைபிடிக்கப்படிருந்தால் ஜெயிலில் அடைந்து கிடக்க வேண்டிய பலர் இன்றும் நம் நாடளாமன்றத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்சி செய்துகொண்டிருக்க மாட்டார்கள். வாழட்டும் நம் ஜனநாயகம்.

Sunday 19 July 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு! - விமர்சனம்

இன்று நான் INOXஇல் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தை பற்றிய ஒரு விமர்சனம்.
இந்த படத்தை பார்க்க நான் கொஞ்சம் ஆவலாக இருந்தேன் காரணம் இந்தியாவில் முதன் முதலில் RED ONE கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மற்றும் தமிழில் வெகு குறைவாகவே த்ரில்லர் வகை திரைப்படங்கள் வருகின்றன அந்த வகையில் இதுவும் ஒரு ஆவலை தூண்டிய திரைப்படம். விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை, ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம். இத்திரைப்படம் ஒரு சமுதாய பிரச்சனையை பற்றி பேசுகிறது (அது என்னவென்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்க), உலகில் எந்த ஊரிலும் நடக்கின்ற நடக்ககூடிய பிரச்சனை.இந்த படத்தில் பிரசன்னா மற்றும் சினேகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள், மற்றும் John Shea (Emmy award Winner) என்கிற ஹாலிவுட் நடிகர் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.எழுதி இயக்கியிருப்பவர் அருண் வைத்தியநாதன்.இசை அமைத்திருக்கிறார் கார்த்திக்ராஜா.

பிரசன்னாவும் சினேகாவும் நியூ ஜெர்செயில் வசிக்கும் தம்பதி. அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் ஒரு Typical இந்திய குடும்பம், அவர்களுக்கு கிட்டத்தட்ட 10 வயதில் ஒரு குழந்தை. அவர்கள் புதிதாக ஒரு வீடு வாங்கி தங்கியிருக்கிறார்கள், இவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படம். பிரசன்னாவும் சினேகாவும் கணவன் மனைவிக்குரிய அன்னியோனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் (நம் கோலிவுட் பாசையில் இவர்களுக்கு இடையில் Chemistry Physics எல்லாம் சிறப்பாக உள்ளது). படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள் நாலு பேர் மட்டும் தான், அவர்களை சுற்றியே திரைக்கதை பின்னன்ப்படிருகிறது.சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அருண். அமெரிக்காவில் ஒரு தமிழ் குடும்பம் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். பிரசன்னாவின் குழந்தை எப்பவும் ஆங்கிலம் பேசுவதும், சினேகா தமிழில் பேசுமாறு சொல்லிக்கொண்டே இருப்பதும், வார இறுதியில் கோவில் போவதும், கிரிக்கெட் விளையாடுவதும், அவர்கள் குழந்தைகென்று தனியறை ஒதுக்கி தூங்க வைப்பதும், எதற்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்வதும் அங்கு எப்பவும் நடப்பதே.

இயக்குனர் அமெரிக்காவில் இருந்ததாலும், இக்கதைக்கு தேவை இல்லை என்பதாலும் பின்னணியில் ஒலிப்பதை தவிர தனியாக பாடல் வைக்கவில்லை. திரைக்கதையில் தேவை இல்லாமல் ஒரு காட்சியும் இல்லை. பிரசன்னா சினேகாவை தவிர மற்றவர்கள் யாவரும் புதுமுகங்கள் என்பதும் ஒரு பிளஸ். கார்த்திக் ராஜா சிறப்பாக இசையமைத்திருக்கிறார், "கண்ணில் தாகம்" சிறப்பாக இருந்தது, பின்னணி இசையும் சிறப்பாக செய்திருக்கிறார்.ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது ஆனால் RED One காமெராவின் வித்தயாசத்தை சிறப்பை உணரமுடியவில்லை. படம் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்து விடுகிறது, இது ஒரு திரில்லர் படத்துக்கு முக்கியமான பலம். இந்த படத்தில் நடித்ததற்காக பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். பிரசன்னா இது போன்ற அர்த்தமுள்ள பாடங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.

படத்தில் பலவீனம் எதுவும் இல்லாமல் இல்லை, படம் ஒரு வீட்டுக்குள்ளயே முடிந்து விடுகிறது, அமெரிக்க போன்ற பாதுகாப்பு பலமான ஊரிலே கூட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றமுடிகிறது. படத்தில் பெரும்பான்மையான வசனங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, சினேகா பிரசன்னவே பல காட்சிகளில் ஆங்கிலத்திலயே பேசுகிறார்கள், அதனாலயே பலருக்கு இத்திரைப்படம் புரியாமல் அல்லது புடிக்காமல் போகலாம், ரொம்ப எதார்த்தமாக எடுப்பதற்காக இப்படி எடுகப்படிருக்கலாம், குறைந்த பட்சம் subtitleஆவது போட்டிருக்கலாம்.இருந்தாலும் இப்படம் பேசும் பிரச்சனை பற்றி தமிழில் ஏதும் படம் வந்ததே என்று எனக்கு தெரியவில்லை, அதனாலே இத்திரப்படதிற்கு சிறப்பான இடம் தரப்படவேண்டும். இந்தவருடம் வெளிவந்த சிறப்பான திரைப்படங்கள் வெண்ணிலா கபடி குழு, யாவரும் நலம், பசங்க, நாடோடிகள் வரிசையில் அச்சமுண்டு அச்சமுண்டுவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இது போன்ற படங்கள் நம் தமிழ் திரையில் காண்பது அரிது இத்திரைப்படத்தை நாம் வெற்றிப்படம் ஆக்கவேண்டியது ரசிகர்கள் கையில் தான் உள்ளது, இந்த மாதிரி படங்களுக்கு நாம் வரவேற்ப்பு தராவிட்டால், பிரசன்னா போன்றவர்கள் கூட கையில் கத்தி எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்துவிடுவார்கள்.

கண்டிப்பாக பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரம் செய்கிறார்கள் கண்டிப்பாக இது பெற்றோர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்கவேண்டிய படமே.

Monday 13 July 2009

சுட்டிக் குழந்தை

கடந்த வாரம் ஊருக்கு சென்ற போது எனக்கும் ஐந்தாவது படிக்கும் என் அக்கா மகளுக்கும் (ஹரிணி) நடந்த உரையாடல்.
பள்ளி மதிய உணவுக்கு கண்டிப்பா தேங்காய் சட்னி கல்லில் அரைத்து தர வேண்டும் என்று (என் அம்மா மிக்ஸ்யில் அரைத்து வைத்திருந்தார்) அடம் பண்ணி கொண்டு இருந்தவளிடம்
நான்: நானெல்லாம் பள்ளிக்கு போகும் போது எங்க அம்மா என்ன கொடுத்தாலும் எதுவும் சொல்லாம எடுத்துட்டு போவேன் நீயேன் இப்படி அடம் பிடிக்கிற?
ஹரிணி: அது அறியாத வயசு இது அறிஞ்ச வயசு அதான்
நான்: !@#$%^^? (ஒக்காந்து யோசிப்பாங்களோ!)
நான் மேல பேச எதுவும் இல்லை, எனக்கு ஆச்சர்யம் அந்த பதில் மட்டுமல்ல அந்த பதில் வந்த விதம், நான் கேள்வியை முடித்த அடுத்த விநாடி அவளிடம் இருந்த இந்த பதில். இக்கால குழந்தைகள் எவ்வளுவ்வு சுட்டிய இருக்கிறார்கள்.

இந்த முறை அவள் எனக்கு அபகஸ் முறையில் எப்படி கூட்டல் கழித்தல் செய்வது என்று கற்றுத்தந்தாள். எளிமையாக தான் இருந்தது. அனால் அவள் கொடுத்த Home workஐ தான் செய்யாமல் வந்து விட்டேன்.