Sunday 19 July 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு! - விமர்சனம்

இன்று நான் INOXஇல் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தை பற்றிய ஒரு விமர்சனம்.
இந்த படத்தை பார்க்க நான் கொஞ்சம் ஆவலாக இருந்தேன் காரணம் இந்தியாவில் முதன் முதலில் RED ONE கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மற்றும் தமிழில் வெகு குறைவாகவே த்ரில்லர் வகை திரைப்படங்கள் வருகின்றன அந்த வகையில் இதுவும் ஒரு ஆவலை தூண்டிய திரைப்படம். விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை, ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம். இத்திரைப்படம் ஒரு சமுதாய பிரச்சனையை பற்றி பேசுகிறது (அது என்னவென்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்க), உலகில் எந்த ஊரிலும் நடக்கின்ற நடக்ககூடிய பிரச்சனை.இந்த படத்தில் பிரசன்னா மற்றும் சினேகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள், மற்றும் John Shea (Emmy award Winner) என்கிற ஹாலிவுட் நடிகர் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.எழுதி இயக்கியிருப்பவர் அருண் வைத்தியநாதன்.இசை அமைத்திருக்கிறார் கார்த்திக்ராஜா.

பிரசன்னாவும் சினேகாவும் நியூ ஜெர்செயில் வசிக்கும் தம்பதி. அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் ஒரு Typical இந்திய குடும்பம், அவர்களுக்கு கிட்டத்தட்ட 10 வயதில் ஒரு குழந்தை. அவர்கள் புதிதாக ஒரு வீடு வாங்கி தங்கியிருக்கிறார்கள், இவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படம். பிரசன்னாவும் சினேகாவும் கணவன் மனைவிக்குரிய அன்னியோனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் (நம் கோலிவுட் பாசையில் இவர்களுக்கு இடையில் Chemistry Physics எல்லாம் சிறப்பாக உள்ளது). படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள் நாலு பேர் மட்டும் தான், அவர்களை சுற்றியே திரைக்கதை பின்னன்ப்படிருகிறது.சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அருண். அமெரிக்காவில் ஒரு தமிழ் குடும்பம் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். பிரசன்னாவின் குழந்தை எப்பவும் ஆங்கிலம் பேசுவதும், சினேகா தமிழில் பேசுமாறு சொல்லிக்கொண்டே இருப்பதும், வார இறுதியில் கோவில் போவதும், கிரிக்கெட் விளையாடுவதும், அவர்கள் குழந்தைகென்று தனியறை ஒதுக்கி தூங்க வைப்பதும், எதற்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்வதும் அங்கு எப்பவும் நடப்பதே.

இயக்குனர் அமெரிக்காவில் இருந்ததாலும், இக்கதைக்கு தேவை இல்லை என்பதாலும் பின்னணியில் ஒலிப்பதை தவிர தனியாக பாடல் வைக்கவில்லை. திரைக்கதையில் தேவை இல்லாமல் ஒரு காட்சியும் இல்லை. பிரசன்னா சினேகாவை தவிர மற்றவர்கள் யாவரும் புதுமுகங்கள் என்பதும் ஒரு பிளஸ். கார்த்திக் ராஜா சிறப்பாக இசையமைத்திருக்கிறார், "கண்ணில் தாகம்" சிறப்பாக இருந்தது, பின்னணி இசையும் சிறப்பாக செய்திருக்கிறார்.ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது ஆனால் RED One காமெராவின் வித்தயாசத்தை சிறப்பை உணரமுடியவில்லை. படம் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்து விடுகிறது, இது ஒரு திரில்லர் படத்துக்கு முக்கியமான பலம். இந்த படத்தில் நடித்ததற்காக பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். பிரசன்னா இது போன்ற அர்த்தமுள்ள பாடங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.

படத்தில் பலவீனம் எதுவும் இல்லாமல் இல்லை, படம் ஒரு வீட்டுக்குள்ளயே முடிந்து விடுகிறது, அமெரிக்க போன்ற பாதுகாப்பு பலமான ஊரிலே கூட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றமுடிகிறது. படத்தில் பெரும்பான்மையான வசனங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, சினேகா பிரசன்னவே பல காட்சிகளில் ஆங்கிலத்திலயே பேசுகிறார்கள், அதனாலயே பலருக்கு இத்திரைப்படம் புரியாமல் அல்லது புடிக்காமல் போகலாம், ரொம்ப எதார்த்தமாக எடுப்பதற்காக இப்படி எடுகப்படிருக்கலாம், குறைந்த பட்சம் subtitleஆவது போட்டிருக்கலாம்.இருந்தாலும் இப்படம் பேசும் பிரச்சனை பற்றி தமிழில் ஏதும் படம் வந்ததே என்று எனக்கு தெரியவில்லை, அதனாலே இத்திரப்படதிற்கு சிறப்பான இடம் தரப்படவேண்டும். இந்தவருடம் வெளிவந்த சிறப்பான திரைப்படங்கள் வெண்ணிலா கபடி குழு, யாவரும் நலம், பசங்க, நாடோடிகள் வரிசையில் அச்சமுண்டு அச்சமுண்டுவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இது போன்ற படங்கள் நம் தமிழ் திரையில் காண்பது அரிது இத்திரைப்படத்தை நாம் வெற்றிப்படம் ஆக்கவேண்டியது ரசிகர்கள் கையில் தான் உள்ளது, இந்த மாதிரி படங்களுக்கு நாம் வரவேற்ப்பு தராவிட்டால், பிரசன்னா போன்றவர்கள் கூட கையில் கத்தி எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்துவிடுவார்கள்.

கண்டிப்பாக பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரம் செய்கிறார்கள் கண்டிப்பாக இது பெற்றோர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்கவேண்டிய படமே.

No comments: