Wednesday 29 July 2009

கிளிஞ்சல் 1 - அருணாச்சலம்

நம் வாழ்க்கை பயணத்தில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை பல்வேறு சூழ்நிலைகளில் சந்திக்கிறோம், விருப்பமோ இல்லையோ நாம் பல மனிதர்களுடம் பழக வேண்டியிருகிறது. நம் பயணத்தில் நம் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்கள் கடைசிவரை நம்முடன் வருவார்கள், இது ஒருவகை. இன்னும் ஒரு சிலர் நம்முடன் சிலகாலம் மட்டும் இருப்பார்கள், எதாவது ஒரு சமயத்தில் நாம் அவர்களை விட்டோ இல்லை அவர்கள் நம்மை விட்டோ பிரிந்துவிடுவோம், இப்படி சந்திக்கும் நபர்கள் யாவரும் நம்மை கவர்வதில்லை அல்லது யாவருக்கும் நம்மை பிடிப்பதில்லை. என்னை கவர்ந்த மற்றும் எதாவது ஒரு விதத்தில் என்னை பாதித்த மனிதர்களை பற்றி "கிளிஞ்சல்கள்" என்ற தலைப்பில் எழுதப்போகிறேன். கடற்கரை மணலில் நாம் விளையாடும்போதெல்லாம் அத்தனை மனல்கடுகிடையில் சில கிளிஞ்சல்களை பொறுக்கி வருவதுபோல் நான் இதுவரை சந்தித்த கிளிஞ்சல்கள் பற்றி இந்த பதிவு. வாரம் ஒருவரை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி தங்கும் விடுதியில் தங்கித்தான் படித்தேன். எங்களது தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி என்பதால் 50% தெலுங்கு மாணவர்கள் படித்தனர் அதில் பெருமபன்மனையோர் கல்லூரி தாங்கும் விடுதுயில் தங்கினர் அதனால் கல்லூரி தெலுங்கு மைனாரிட்டி, விடுதி தமிழ் மைனாரிட்டி. நான் சேர்ந்த கல்லூரி அந்த வருடம் தான் திறக்கப்பட்டது, அதனால் அங்கு தங்கும் விடுதி எல்லாம் கட்டவே இல்லை ஒரு கல்யாண மண்டபத்தை மரப்பலகைகள் வைத்து அறைகள் தடுத்து விடுதியக்கியிருந்தனர். அந்த கல்யாண மண்டப விடுதிக்கு இரண்டு இரவு காவலாளிகள் அதில் ஒருவர் தான் அருணாச்சலம் - இந்த வர கிளிஞ்சல்.

ஆறடி உயரம், நல்ல தேகம், தொப்பை, முறுக்கு மீசை, முறுக்கு மீசைக்கு பின்னிருக்கும் முகத்தில் ஒரு மென்மை படர்ந்திருந்தால் அவர் கிட்ட தட்ட அருணச்சலம் போல தான் இருப்பார். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் விடுதி காவலுக்கு வருவார். நன்றாக பழகுவார், நானும் அவருடன் நன்றாக பழகினேன். சில நாட்களுக்கு பிறகு அவருக்கு நான் நல்ல தோஸ்த் ஆனேன். விடுதியில் Study hours நேரங்களில் வெளியே செல்ல விட மாட்டார்கள், அப்படியே சென்றாலும் ரெஜிஸ்டரில் கையெழுத்து போட வேண்டும், ஆனால் நான் கையெழுதெல்லம் போடாமல் போய் வருவேன் அவர் கண்டுக்கமாட்டார். அதே போல் பருவத்தேர்வின் (semester) போது இரவு தேநீர் குடிக்க போறதுக்கு சாவி தேவைப்படுபோதெல்லாம் (எப்போதும் இரவு 10 மணிக்கு உள்ளே பூடிவிடுவார்கள்) சாவி கேட்டால் எதுவும் சொல்லல் கொடுத்துவிடுவார். அதனாலையே பலருக்குகாக நான் சாவி கேட்டு வாங்கியிருகிறேன். நல்ல திடக்கத்திரமாக இருக்கும் அவருக்கு ஒரு சின்ன வீக்னஸ், அவர் இடுப்பை தொட்டால் துள்ளி குதிப்பார். பலமுறை அவர் இடுப்பை தொட்டுவிட்டு ஓடியிருக்கிறேன் சில நாட்கள் அவர் இதுக்காக என்னை கோவித்துகொண்டதும் உண்டு. அவர் குடும்பத்தை பற்றியெல்லாம் கூறுவார். தீபாவளி சமயங்களில் நண்பர்களெல்லாம் சேர்ந்து அவருக்கு துணியெல்லாம் எடுத்து கொடுத்துள்ளோம். நாங்கள் விடுதியில் இருக்கும் வரை எங்களுடன் இனிமையாக பழகிவந்தார்.

இப்படி சராசரியாக இருக்கும் இவருக்கு இன்னொருமுகமும் இருந்தது அது அவர் ஒரு தெருகூத்து நாடக நடிகர். ஒருநாள் நான் என் நண்பர்களுடன் அவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொது தான் ஒரு நாடக நடிகர் என்று சொன்னார். ஆனால் தற்போது நாடகம் எல்லாம் நடிப்பதில்லை என்றும் அதை விட்டுவிட்டதாக கூறினார். அவர் தெருக்கூத்தை விட்டதுக்கான காரணத்தை சொன்னார். அது சுவரஸ்யமானது. அவர் பெரும்பாலும் பிரகலாதன் நாடகத்தில் நரசிம்மர் வேடத்தில் நடிப்பவர், ஒரு முறை ஒரு கிராமத்துக்கு நாடகம் போட சென்ற போது அங்கிருந்தவர்கள் பிரகலாதன் நாடகம் வேண்டாம் என்றும் வள்ளி திருமண நாடக போட வென்றும் கூறிவிட்டார்கள். நாடகத்தை நடத்துபவர்களும் வேறு வழியின்றி வள்ளி திருமண நாடகம் போடா சம்மதித்தனர் அதற்க்கு தயாராக ஆரம்பித்தனர். நம்மவர்க்கு வள்ளி திருமண நாடகத்தில் ஏற்க எந்த வேடமும் இல்லை அதனால் அன்று நாடகத்தில் அவருக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. எப்படியும் இன்று மேடை ஏறப்போவது இல்லையென்பதால் நம்மவர் நல்லா சரக்கு அடித்துவிட்டு படுத்துவிட்டார். நாடககுளுவால் வள்ளி திருமண நடகதிருக்கு தயார் செய்ய பல சிரமங்கள் இருந்ததால் மீண்டும் பிரகலாதன் நாடகத்தையே போட சொல்லிவிட்டனர். நம் நரசிம்மனோ நன்றாக உறங்கிகொண்டிருகிறார், அவரை எழுப்புவதற்கு எவள்ளவோ முயற்சி செய்தும் முடியாமல் போய் விட்டது, ஆக அன்று நாடகம் ஏக சொதப்பலில் முடிந்தது. விடிந்ததும் முந்தின இரவு நடந்ததை கேள்விப்பட்டு நம்மவர் மிகுந்த அவமானபட்டிருகிறார், அப்போதே இனிமேல் நாடகத்தில் நடிப்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டார், அதன் பிறகு அவர் அரிதாரம் பூசவேயில்லை.

இந்த கதையை கேட்ட பிறகு என்னால் நம்பவேமுடியவில்லை. அவரிடம் ஒரு காட்சி நடித்துக்காட்ட சொன்னேன். சட்டென்று நரசிமனாக மாறி அவர் பாடி நடித்த அந்த சில நிமிடங்கள் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். சாதரணமாக பேசிகொண்டிருந்தவரால் எப்படி திடீரென்று இப்படி நடிக்க முடிந்தது அங்கு மேடைஇல்லை, மக்கள் கூட்டம் இல்லை, அரிதாரம் இல்லை எனக்கு ஒருவனக்குகாக நடித்து காட்டினார். அவர் ரத்தத்தில் நாடகமும், பாட்டும், நடிப்பும் இன்னும் ஓடிகொண்டிருந்தான் இருக்கும் போல. இதன் பிறகு அவர்மேல் இருந்த மரியாதை அதிகமாகியது. இவர்களெல்லாம் படப்படாத நாயகர்கள் (Unsung Heroes).

நான் கல்லூரி விட்டு வந்த பிறகு அவரை சந்திக்கவில்லை (முயற்சிக்கவில்லை), எங்கள் கல்லூரியில் விடுதி கட்டப்பட்ட பிறகு அவர் அங்கு வேலைசெய்யவில்லை என்று நினைக்கிறேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் இன்னும் இருக்கிறது. இன்றும் நான் பார்க்கும் சில காவலாளிகள் அவரை நினைவு படுத்திகொண்டே இருக்கின்றனர்.

2 comments:

Unknown said...

கிளிஞ்சல்கள் - நல்ல பெயர் தேர்வு... கவிதையாக இருக்கிறது.... சிலர் நம் வாழ்வில் மிக சில கணங்களுக்கே வந்திருப்பார்கள்.. ஆனால் காலத்துக்கும் நினைவில் இருப்பார்கள்... உங்கள் அருணாசலம் போல நான் தங்கி இருந்த விடுதியில் ஒரு முத்து (அரவாணி) இருந்தார். அவர் இயல்பாகவே பேசும்போதே நம் கன்னத்தை தொட்டு தடவி பேசுவார். எனக்கு அப்போது நண்பர்கள் பின்னாட் கேலி செய்வார்களே என்கிற சங்கடத்தில் எரிந்து விழுவேன்... ஆனால் இப்போது நினைத்து பார்க்கும்போது எனக்கு சங்கடமாக இருக்கிறது. நானும் அதற்கப்புறம் முத்துவை பார்க்கவே இல்லை.

Unknown said...

கிளிஞ்சல்கள் - நல்ல பெயர் தேர்வு... கவிதையாக இருக்கிறது.... சிலர் நம் வாழ்வில் மிக சில கணங்களுக்கே வந்திருப்பார்கள்.. ஆனால் காலத்துக்கும் நினைவில் இருப்பார்கள்... உங்கள் அருணாசலம் போல நான் தங்கி இருந்த விடுதியில் ஒரு முத்து (அரவாணி) இருந்தார். அவர் இயல்பாகவே பேசும்போதே நம் கன்னத்தை தொட்டு தடவி பேசுவார். எனக்கு அப்போது நண்பர்கள் பின்னாட் கேலி செய்வார்களே என்கிற சங்கடத்தில் எரிந்து விழுவேன்... ஆனால் இப்போது நினைத்து பார்க்கும்போது எனக்கு சங்கடமாக இருக்கிறது. நானும் அதற்கப்புறம் முத்துவை பார்க்கவே இல்லை.