Wednesday 9 December 2009

Orkutஆல் ஒரு பயன்

சில நாட்களுக்கு முன்னாள், என் orkutல் நந்தா என்ற பெயரில் ஒரு Friend Request வந்திருந்தது, நல்ல வேலை பள்ளியின் பெயரை குறிப்பிட்டு இருந்ததால் சரியாய் கண்டுபிடித்து விட்டேன் (Profile புகைப்படமாக சூர்யா படத்தை வைத்திருந்தான்), கொஞ்சம் scrapபி கொண்டோம். அவன் கிறுக்கல் பக்கத்தை பார்த்த பொது இன்னொரு பள்ளி தோழனின் தொடர்பும் கிடைத்தது. இருவருக்கும் தொலைப்பேசினேன், மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளி நாட்களுக்கு பிறகு இப்போது தான் அவர்களை தொடர்பு கொண்டேன், நான் யாரையும் orkutல் தேடவில்லை (அட நம்புங்கப்பா!!!). லெனின் என் குரலை கேட்டதும் கண்டு பிடித்துவிட்டான், பரவாயில்லை, இத்தனை வருடங்களில் என் குரல் மாறவேயில்லை என்றான், அவனை கொஞ்சம் கலாயக்கலாம் என்று இருந்தவனக்கு பல்பு. நந்தா என்னை கண்டுபிடிக்கவில்லை, கொஞ்சம் நேரம் பேசியபின் தான் கண்டுபிடித்தான். கடந்த 10 வருடங்களில் நடந்தவற்றில் முக்கியமானதை சில நிமிடங்களில் பகிர்ந்து கொண்டோம். 10 வருட இடைவெளி எங்கள் நடப்பை ஒன்று செய்யவில்லை என்பது ஆரோக்கியமான விசையம்.

Social networkingல் அவளவ்வு ஆரவம் இல்லாதவன் நான், orkut வந்த புதிதில் ஆர்வம் கொண்டு அதில் நானும் ஒரு உறுப்பினர் ஆனேன், அப்பொழுது orkutல் இல்லாதது ஒரு குற்றமாக கருதப்பட்டது , "என்னது நீ orkutல இல்லையா?" என்று வியந்தனர், இப்போது facebook. ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்த நான், இப்போது அவளவ்வு இல்லை. Orkutஆல் எனக்கு நடந்த ஒரு நன்மை என் பள்ளி நண்பர்களின் நட்ப்பை பல வருடங்கள் கடந்து புதுபித்து கொண்டது, அதற்காக Orkutக்கு என் நன்றிகள்.

2 comments:

thiyaa said...

அருமை,
வாழ்த்துகள்
காலத்துக்கேற்றதுதானே வாழ்க இன்டர்நெட்.....

Annamalai Swamy said...

நன்றி தியா!