Saturday 14 August 2010

வாசனை - 55 வார்த்தை கதை

"சிறு சிறு கதைகள்" என்ற புத்தகத்தில், சுஜாதா பல வகையான கதைகளை பற்றி எழுதியிருக்கிறார் இரண்டு வார்த்தை கதைகள், 55 வார்த்தை கதைகள், சி.சி. கதைகள் மற்றும் பல வகையான கதைகளை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இனி 55 வார்த்தை கதைக்கான விதிமுறைகள்.
மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!
மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.

 சுஜாதா
55 வார்த்தை கதைகளை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் "55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது."


இனி நான் எழுதியது.
தலைப்பு: வாசனை

ஊருக்கு போயிருந்த என்னவளின் நினைப்பிலிருந்து கலைத்தது அவளுடைய அலைப்பேசி அழைப்பு 

'சொல்லுடி, எப்படியிருக்க' 

'நல்லாயிருக்கேன்'

'மதியத்திலிருந்து உன் நினைப்புதாண்டி, திடீர்னு வீடெல்லாம்  எங்க போனாலும் உன் வாசனையாவே இருக்கு '

'அப்புறம்'  சிணுங்கினாள்

'உன் ஞாபகம் அதிகமாயிருச்சு, ஊருக்கு வரட்டுமா?'

'ரொம்ப கொஞ்சாதீங்க, வந்துருவேன், ஆமா குளிச்சிடீங்களா?'

'ஆச்சு, என்  ஷாம்பூ  தீர்ந்துபோச்சுன்னு  உன் ஷாம்பை உபயோகிச்சேன்'
சிறிது அமைதிக்கு பிறகு

'இவ்வளவு நேரம் ஃபீல் பண்ண வாசம், அந்த ஷாம்பூ வாசம் தான்' கடுப்பாக போனை வைத்தாள்.

இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும். 

1 comment:

Balajiviswanathan Veeraraghavan said...

Malaiya

Real time experience mathiri irukke

Unmaiya sollu