Sunday 23 August 2009

அவசர ஊர்தி - ஒரு வேண்டுகோள்

அவசரம், கண்டிப்பாக நம்மில் பெரும்பாலனோர் ஒரு அவசர வாழ்க்கையில் தான் இருக்கிறோம், அந்த அவசரம் நாமாக ஏற்படுத்திக்கொண்டதுதான் என்றாலும் அதை விட்டு நம்மில் பலரால் வெளியே வர முடியவில்லை. ஒரு நிமிடம் சாலையோரமாக நின்று பார்த்தால் எத்தனை பேர் ஒடிகொண்டிருக்கிறார்கள் என்று தெரியும், அனால் அதை பார்ப்பதற்கும் நமக்கு நேரமில்லை. இதைப்பற்றி வேறு சமயத்தில் யோசிப்போம் இப்போது நான் சொல்ல வந்ததை அவசரமாக சொல்லிவிடுகிறேன்.

நேற்று காலை அலுவலகம் செல்லும் பொது அண்ணா சாலையில் ஒரு அவசர ஊர்தி அவகாசமின்றி கத்திக்கொண்டிருந்தது. அதை யாரும் சட்டை செய்ததாக தெரியவில்லை, அனைவரும் அதை மற்றொரு ஊர்தியாகவே பார்த்தனர். அதில் ஒரு உயிர் போராடிக்கொண்டிருப்பதாகவோ அல்லது ஒரு உயிரை காப்பாற்ற சென்று கொண்டிருப்பதாகவோ யாரும் நினைக்கவில்லை. யாரும் அந்த வண்டிக்கு வழிவிடவில்லை, ஒருவேளை இடம்மிருந்திருந்தால் விட்டிருப்பார்களோ என்னவோ , ஆனால் அந்த அவசர ஊர்திக்கு இடது, வலது புறமாக இருந்தவர்களும் சரி முன், பின் இருந்தவர்களும் சரி கொஞ்சம் பொறுத்து அந்த வண்டி சென்ற பின் செல்லலாம் என்று இல்லை அனைவரும் அதை பின் தள்ளிவிட்டு முன் செல்வதிலேயே குறியாயிருந்தனர்,
ஒரு அவசர ஊர்தியின் அவசியம் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அதற்கான மரியாதை சாலைகளில் வழங்கப்படுவதில்லை.இதில் முழுத்தவறும் நம்மேல் இல்லை, பல சாலைகளில் நாம் வழிவிட நினைத்தாலும் வழிவிட வழியில்லை, சில இடங்களில் வழியிருந்தும் நாம் விடுவதில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சாலைகளில் இந்த விதிகள் சிறப்பாக பின்பற்றபடுகிறது ஒரு வேலை அங்கு சாலைகள் சிறப்பாக அமைக்கப்பெற்றது காரணமாக இருக்கலாம். அங்கு அவசர ஊர்தி வரும் சைரென் கேட்டவுடன் சாலைகளில் செல்பவர்கள் தங்கள் வேகத்தை குறைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி அந்த வண்டிக்கு வழி விடுகிறார்கள். அப்படி வழிவிடவில்லை என்றல் அது அங்கு ஒரு குற்றமாக பதிவு செய்யப்படுகிறது (இது சம்பந்தமான ஒரு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது). நான் இதை சொல்வதால் நான் அவர்களை உயர்த்தியும் நம்மை தாழ்த்தியும் சொல்லவில்லை சில விசயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் ஊரில் இந்த அளவுக்கு பின்பற்றுவது எல்லாம் முடியாது ஆனால் நாம் மனம் வைத்தால் ஓரளவுக்கு உதவலாம், நாம் எதாவது ஒரு அவசர ஊர்திக்கு வழிவிட்டால் சாலையில் இருக்கும் மற்றவர்களும் நம்மை பார்த்து வழிவிடுவார்கள் (என்று நம்புவோம்), ஒவ்வொரு அவசர வண்டியில் இருப்பவர்களையும் நமக்கு தெரிந்தவர்களாக நினைத்தால் கண்டிப்பாக நாம்மால் அந்த வண்டிகளுக்கு வழி விட முடியும். முயற்சி செய்து பார்ப்போம்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட சாலையிலிருந்து சைரென் ஒலி கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பதிவினால் பெரிய மாற்றம் வரப்போவதில்லை என்றாலும் இதனால் யாரவது ஒருத்தர் இதைப்பின்பற்ற தொடங்கினால் மகிழ்ச்சியே.

1 comment:

Unknown said...

Nalla Pathivu Annamalai...
Kanidappa-ga avasara oorthi-kku nan vazhi viduven....
Avasara oorthi-kku vazhi viduvathum oru uthavi thaan.